இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Sunday, September 7, 2008

மணமகளின் தோழிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளைகள் : மின்தடை கூத்து இது!

தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டோம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் தேனி மாவட்டத்தில் யார் பெண் என்று தெரியாமல் இரண்டு மாப்பிள்ளைகள் மாற்றி தாலி கட்டிய விநோதம் நடந்துள்ளது. காரணம் - மின் தடை!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.

இங்கு 40 ஜோடிளுக்கு இலவச கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது. கல்யாணத்திற்கான ஏற்பாடுகளால் அந்தக் கோவில் வளாகம் முழுவதும் உறவினர்கள், குடும்பத்தினர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அனைவரும் முகூர்த்த நேரத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். எல்லாம் ரெடியானது, முகூர்த்த நேரமும் வந்தது. மாப்பிள்ளைகள் கையில் தாலி எடுத்துக் கொடுக்கப்பட மங்கள மேளம் முழங்க மாப்பிள்ளைகள் தாலி கட்ட தயாராயினர். அப்போது திடீரென மின்சாரம் போனது.

இதனால் கல்யாணம் நடந்த இடத்தில் பெரும் குழப்பமானது. இந்த களேபரத்தில் வீராசாமி, பாலமுருகன் ஆகிய இரு மாப்பிள்ளைகள் தவறுதலாக வேறு பெண்களுக்குத் தாலி கட்டி விட்டனர்.

வீராசாமி தாலி கட்ட வேண்டிய பெண் சுப்புலட்சுமி. ஆனால் அவரோ சுப்புலட்சுமிக்கு பக்கத்தில் நின்றிருந்த அவரது தோழிக்கு தாலி கட்டி விட்டார்.

அதேபோல பாலமுருகன், சிவகாமி என்பவருக்குப் பதில் அருகில் நின்றிருந்த இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டி விட்டார்.

இதனால் அங்கு பெரும் குழப்பமாகி விட்டது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்ட பெரியவர்கள் கூடி பேசி பரிகார பூஜை ஒன்றை செய்ய தீர்மானித்தனர். இதைத் தொடர்ந்து கட்டிய தாலிகளை கழற்றச் சொல்லி அவற்றுக்கு பரிகார பூஜை செய்தனர். பின்னர் உரிய மணமகள்களின் கழுத்தில் நல்ல விளக்கொளியில் மாப்பிள்ளைகள் தாலி கட்ட கல்யாணம் இனிதே முடிந்தது.

செய்தி : தட்டிஸ் தமிழ்

முக்கிய செய்தி : குமுதம், விகடனுக்கு ஜெயலலிதா நோட்டீஸ்

தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்ஸ் வார இதழ்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒரு பத்திரிகைக்கு தனது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதா அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வெளியிடப்படடுள்ளது. இந்த பொய்யான தகவல்களை வெளியிட்ட பத்திரிகை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், அது தொடர்பான விளக்கத்தை வெளியிட வேண்டும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி வழங்கக் கோரி மானநஷ்ட வழக்கு தொடரப்படும். பத்திரிகை கவுன்சிலிலும் புகார் செய்யப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு இதழுக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில் "எம்ஜிஆர் மறைவுக்கு பின் திமுகவில் சேர முயன்றார் ஜெயலலிதா'. தூது சென்றவர்கள் பகீர் வாக்குமூலம் என்று செய்தி வெளிவந்தது. இதற்கு அந்த பத்திரிகை மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.10 கோடி கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


செய்தி : தட்டிஸ் தமிழ்

Wednesday, September 3, 2008

தினமலர் மீது அட்டாக் : சன் குழுமத்துக்கு அல்வா செய்தி


தினமலர் பற்றிய செய்தி என்றாலே சன் குழுமத்துக்கு அல்வா கிடைத்ததுபோல இருக்கும் போல. ஏற்கனவே தினமலர் ரமேஷ் மீதான பெண் நிருபர் உமாவின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி கடந்த ஆண்டு வந்த போது வந்தபோது சன் டிவி, சன்நியூஸ், தினகரன், தமிழ்முரசு போன் சன் குழும நிறுவனங்கள் செய்திகளை போட்டு தினமலரை தாக்கி எழுதின. இப்போது வேலூர் தினமலரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கார்ட்டூன் படம் போட்டதற்காக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தையும், போலீசார் நடத்திய தடியடியையும் தினகரனில் முதல் பக்கத்தில் படத்துடன் போட்டு தாளித்து விட்டார்கள். இந்த செய்தியில் உள்நோக்கம் இருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க. (இது தினகரனில் வந்த செய்திதாணுங்கோ....)


நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கும் நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேலிச் சித்திரம் வெளியான திங்களன்று மாலையில் வேலூர் அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று காலை வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரைபீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.

வேலூர் கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டிஐஜி சுந்தரமூர்த்தி, எஸ்பி அறிவுசெல்வம், டிஆர்ஓ சுகந்தி, ஏடிஎஸ்பி ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்தனர். போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக சொன்னார்கள். ஆனால், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
அப்போது திடீரென யாரோ கல் வீசினர். ஏடிஎஸ்பி ராமதாஸ் மீது ஒரு கல் விழுந்ததில், அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. உடனே போலீஸ் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். விரட்டி விரட்டி தடியடி நடத்தியதில் பலர் காயம் அடைந்தனர். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தடியடி நடத்தி தாக்குவதா என்று முஸ்லிம் பெரியவர்கள் போலீச் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

தடியடியில் காயம் பட்டவர்களை ரத்தம் சொட்ட அழைத்துவந்த சிலர் அதிகாரிகளை சூழ்ந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை கலைந்துபோகுமாறு கலெக்டர் கூறினார். ஆனால், ‘இந்து - முஸ்லிம் இடையே பகையை தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரை கைது செய்ய வேண்டும்’ என்று கோஷமிட்டபடி கூட்டத்தினர் முன்னேறினர்.

இதற்கிடையே, மக்கான் சந்திப்பில் ஏராளமானவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் மீது கல் வீசப்பட்டது. பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஒரு பஸ்சில் இருந்த 3 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதை தொடர்ந்து மக்கானிலும் போலீசார் தடியடி நடத்தினர். 25க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.

பின்னர், கலெக்டரும் உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். இதற்கிடையே, வெளியே நின்றிருந்த கூட்டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர்களை போலீசார் துரத்தி துரத்தி அடித்தனர்.
பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று ஒரு ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெங்களூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ரோந்து வருகின்றனர்.

Tuesday, September 2, 2008

FLASH NEWS : வேலூர் தினமலர் ஆபீஸ் மீது அட்டாக்

இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டதை கண்டித்து வேலூரில் தினமலர் ஆபீஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் பத்த அவ்வப்போது தரக்குறைவாக செய்தி வெளியிடுவது தினமலரின் வாடிக்கை. இன்னிக்கு காலையில 4000 இஸ்லாமியர்கள் தினமலர் ஆபீஸ் முன்னாடி வந்து கல்லடிச்சதா அங்க இருக்குற என்னோட பிரண்ட் சாகுல் அமீது போன்ல ‌சொன்னார்.

Monday, September 1, 2008

தாயையும், மகளையும் கல்யாணம் செய்த காமுகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாயையும், மகளையும் கல்யாணம் செய்தி ஆசாமி வெட்டி கொல்லப்பட்டார்.


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(வயது55). இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு முருகம்மாள் என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார். அப்போது முருகம்மாளுக்கு வள்ளி என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. அதை தன் குழந்தை போல் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பால்பாண்டிக்கும் முருகம் மாளுக்கும் முருகன் என்ற மகன் பிறந்தான். முருகனும் வள்ளியும் அக்காள்- தம்பி முறையில் வளர்ந்து வந்தனர்.

ஆனால் காமுகனான பால்பாண்டிக்கு நாட்கள் செல்லச் செல்ல முருகம் மாள் மீதுள்ள மோகம் குறைந்து அவளது மகள் வள்ளி மீது மோகம் பிறந்தது. வள்ளி பெரியவள் ஆனதும் அவளையும் பால் பாண்டியே திருமணம் செய்து கொண்டார். இதில் பால்பாண்டிக்கும் வள்ளிக்கும் இரண்டு குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பால்பாண்டியின் முதல் மகன் முருகன் வளர்ந்து வாலிப வயதை அடைந் தான். அப்போது தான் அவனுக்கு தன் தந்தை தன் தாயையும் தன் அக்காவையும் திருமணம் செய்த விபரம் தெரிந்தது.

இதனால் முருகனுக்கு தன் தந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பால்பாண்டி அடிக்கடி தன் மனைவி வள்ளி (வயது27)யிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன்(24) "ஏன் இப்படி குடும்பத்தை நாசம் செய்தது மட்டும் அல்லாமல் அடிக்கடி தகராறு செய்கிறாய்'' என்று கூறி பால்பாண்டியை மிதித்து கீழே தள்ளினான். அதன் பிறகு அங்கு கிடந்த அம்மி கல்லை எடுத்து பால்பாண்டி தலையில் போட்டு நசுக்கினான். இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு கல்லிடைக் குறிச்சி போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தான் பால்பாண்டி, தாயையும், மகளையும் திருமணம் செய்து குழந்தையும் பெற்ற விபரம் தெரிய வந்தது.

இந்த சம்பவம் அந்தப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி : மாலைமலர்

தீ நகர் தீ விபத்து நடந்தது எப்படி? முழுவிவரம்

சென்னை தியாகராயநகர் சரவணா ஸ்‌டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலைமலரில் வெளியாகியுள்ள விரிவான செய்தி


5 தளங்களை கொண்ட இந்த பாத்திரக்கடையில் வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மிஷின், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், பர்னிச்சர் வகைகளான கட்டில், சோபா, மெத்தை, பீரோ மற்றும் அனைத்து பாத்திர வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடையில் 5-வது தளத்தில் இன்று காலை 5.45 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் பக்கவாட்டு ஜன்னல்களில் இருந்து தீச்சுவாலைகள் கரும் புகையுடன் வெளி வந்தது. இதை அந்த வழி யாக வாக்கிங் சென்ற வாலிபர் ஒருவர் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

6.15 மணியளவில் தியாகராய நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன. அங்கு பெரிய அளவில் தீ பற்றி எரிய தொடங்கியதால் சென்னை நகரில் பல இடங்களில் இருந்தும் 10 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன.

உயரமான இடங்களில் தீயை அணைக்க பயன் பயன்படுத்தப்படும் 2 `ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வண்டி களும் வரவழைக்கப்பட்டது. சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க தொடங்கினர். ஆனால் தீ வேகமாக பரவியதால் கடைக்குள் செல்ல முடிய வில்லை.

பக்கத்து கடைகளின் ஷட்டர்களை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அங்கும் கரும் புகை சூழ்ந்து கொண்டதால் அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதற்கிடையே கடையின் 5-வது தளத்தில் இருந்து 4-வது மற்றும் 3-வது தளத் திற்கும் தீ மளமளவென பரவியது. அருகில் உள்ள லக்கி பிளாசா என்ற கட்டிடத்தின் மேல் அமைக் கப்பட்ட சரவணா ஸ்டோர் கட்டிடமும் தீப்பற்றிக் கொண்டது. இதில் அங்கிருந்து கோடிக் கணக்கான மதிப்பிலான பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

கடையின் 5-வது தளத்தின் ஒரு பகுதியில் அங்கு வேலை பார்க்கும் 1000க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அனைவரும் பெட்டி படுக்கைகளுடன் வீதிகளை நோக்கி ஓடி வந்து உயிர் பிழைத்தனர்.

கடைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலாளிகள் மற்றும் சில ஊழியர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர் களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

5-வது மாடியில் சிக்கித் தவித்த 8 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

தென்சென்னை இணை போலீஸ் கமிஷனர் குணசீலன் மேற்பார்வையில் துணை போலீஸ் கமிஷனர் முத்துசாமி, உதவி போலீஸ் கமிஷனர்கள் கண்ண பிரான், சேது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.

இந்த தீ விபத்தை தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

தீ விபத்தை நேரில் பார்த்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பிரபு கூறியதாவது:-

இது போன்ற உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் அதை அணைப்பதற்காக `ஸ்கைலிப்ட்' தீயணைப்பு வண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 2 வண்டியை கொண்டு வந்து கண்ணா மூச்சி காட்டிக் கொண்டி ருக்கிறார்கள்.

அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டி ருக்கும்.


சென்னையில் பிரபல வணிக ஸ்தலமாக விளங்கிய மூர் மார்க்கெட்டில் கடந்த 1980 வாக்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு ஏராள மான கடைகள் எரிந்து நாசமாயின. அதை மிஞ் சும் வகையில் நடுத்தர மக்கள் லட்சச்கணக்கில் பொருட்கள் வாங்குவதற் காக வந்து செல்லும் ரங்க நாதன் தெருவில் நடை பெற்றுள்ள முதல் பெரிய தீ விபத்து இதுவாகும்.

சென்னையின் மிகப் பெரிய வணிக ஸ்தலமாக விளங்கும் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்பு குறை பாட்டால் ஏற்பட்டுள்ள தீ விபத்தை தொடர்ந்து அங்குள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி ஜவுளி, நகை கடைகளில் தீ விபத்து குறித்த முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவாப என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய் துள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.


தியாகராய நகர் ரங்க நாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடை யில் பிடித்த தீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் அதில் இருந்து பயங்கர புகை மண்டலம் கிளம்பியது.

பிளாஸ்டிக் மற்றும் ரசா யன கலவைகளால் தயா ரிக்கப்பட்ட வீட்டு உப யோக பொருட்கள் எரியும் போது அதில் இருந்து அதிக அளவில் புகை மண்டலமும் அமல வாசனையும் கிளம் பியது.

அந்த புகை தியாகராய நகரையே மறைக்கும் அள வுக்கு பல கிலோ மீட்டர் உயரத்துக்கு ஆகாயத்தில் பரவியது. இதனால் சென் னையின் மற்ற பகுதிகளில் வெயில் அடிக்க தியாக ராய நகரில் மட்டும் சூரியன் மறைந்து மழை மேகங்கள் திரண்டது போல் இருட்டாக காணப்பட்டது.

சிறிது நேரத்தில் திடீர் என்று மழை பெய்ய ஆரம் பித்தது. ரசாயன வாசனையும் இருந்தது. வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து அதில் இருந்து வெளியான புகை யால் தியாகராய நகரில் அமில மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

‌நேரடி ரிப்போட்: தீயை அணைக்க போனவர்களின் 20 பேர் கதி...

சென்னை தியாகராயநகருக்கு பெருமை சேர்க்கும் ரங்கநாதன் தெருவுக்கு பெருமைசேர்க்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடையில தீ பிடிச்சிடிச்சின்னு கேள்விபட்டதும் பைக்க எடுத்துட்டு மயிலாப்பூருல இருந்து ஆழ்வார்பேட்டை வழியா தேனாம்‌பேட்டை சிக்னலை கடந்து பாண்டிபசார் வயழியா தி.நகர் போனேன். தேனாம்பேட்டை சிக்னலில் பச்சைவிளக்கு சிக்னலுக்கு நின்னப்பவே தூரமா கரும் புகை தெரிஞ்சிது.

வேகவேகமா தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு நண்பரின் ஆபீஸ் முன்னால வண்டிய நிறுத்திட்டு உஸ்மான் ரோட்டுல நடந்து போனேன். ஒரே கூட்டம். அங்க ரங்கநாதன் தெருவுக்குள்ள போக யாரையுமே போலீஸ்காரங்க அனுமதிக்கல. சரவணா ஸ்டோர் கடையில வேலை பாக்குறவங்களும் அங்கங்க நின்னு பரிதாபத்தோட ‌வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட உள்ள யாராவது இருந்தாங்களான்னு கேட்டேன்.

ஆமா சார்... ராத்திரி பண்ணென்டு மணிக்குத்தான் கடைய அடைப்போம். காலையில 5 மணிக்குக்கெல்லாம் கொஞ்சம்பேர் கடையை தூக்குறதுக்கு உள்ள வருவோம். 25 பேராவது காலையில் கடைக்கு வந்துடுவோம். இன்னிக்கும் 25 பேர் வந்திருப்பாங்க. அவங்க கடைக்குள்ள போனாங்‌களான்னு தெரியல. இங்க எங்கயாது இருக்காங்களான்னு சுத்தி பாக்குறோம். தீ எரியறத பாத்தா பயமா இருக்கு. கடைக்குள்ள தீயை அணைக்க 20 போனாங்கன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க....ன்னு சொல்லி கண்ணீர் வடித்தார்.

உண்மையிலேயே கடைக்குள்ள சரவணா ஸ்டோர் கடை உழியர்கள் போனாங்களா? அவங்க நெலம என்னன்னு தெரியல. பிளாஸ்டிக், மர பொருள் எரிவதால் தீயை அணைக்க முடியாம போலீஸ் தவிச்சிட்டு இருக்கு. தீய முழுசா அணச்சாத்தான் முழு வெவெரமும் தெரியும்ன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க.

FLASH NEWS : கரண்ட் பிரச்சினை : கருணாநிதி ராஜினாமா முடிவு?

தமிழ்நாடு முழுசும் அறிவிக்கப்படாத மின்தடை என்ற நிலைமை மாறி இன்று முதல் அறிவிக்கப்பட்ட மின்தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. டெய்லி ராத்திரி பகல் பாராமல் அஞ்சு மணி நேரம் கரண்ட்டை புடுங்கி விடும் அரசாங்கத்துக்கு அண்ணா திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, சமக, கம்யூனிஸ்ட்டுங்கன்னு எல்லா கட்சிங்களும் கண்டனமா தெரிவிச்சிட்டு இருக்காங்க. மாண்புமிகு புரட்சி தலைவி இதயதெய்வம் டாக்டர் அம்மா, கரண்ட்டை சரியா கையாள தெரியாத கருணாநிதி ராஜினாமா செய்யணும்னு அறிக்கை வுட்டுருக்காங்க.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக அம்மா விடுத்துள்ள அறிக்கை:

தற்போது தமிழ்நாட்டில் "அறிவிக்கப்பட்ட மின்வெட்டு', "அறிவிக்கப் படாத மின்வெட்டு' என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போதைய மின் நிலைமைக்கு திமுக அரசு தெரிவிக்கும் முதல் காரணம், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது என்பதாகும். எனது ஆட்சிக் காலத்தின் முதல் 3 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல மழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடியவில்லை. நிர்வாகத் திறமையின்மையே இதற்கு முக்கியக் காரணம்.

அரசு சொல்லும் 2வது காரணம், நிலக்கரி மற்றும் யுரேனியம் தட்டுப்பாட்டால் நெய்வேலி மற்றும் இதர மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளது என்பதாகும். சுய லாபத்திற்காக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெறும் கருணாநிதியால் இதை ஏன் பெற முடியவில்லை?

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரி வினியோகிக்கப் படுவதாகவும், பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முறையாக, சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.

மூன்றாவதாக கூறப்படும் காரணம், காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின் உற்பத்தி 1500 மெகாவாட் குறைந்துவிட்டது என்பதாகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 7 மாதங்கள், குறைந்தபட்சம் 5 மாதங்கள் மட்டும் தான் காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்கும். ஆனால் தமிழ் நாட்டிலோ ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது.

காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைக்காத காலங்களில் அனல், புனல் மற்றும் மத்திய தொகுப்பி லிருந்து மின்சாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட வேண்டும். இதை விட்டுவிட்டு காற்றை எதிர்நோக்கி இருக்கிறோம்; நீரை எதிர்நோக்கி இருக்கிறோம் என்று சொல்லப்படும் காரணங்கள் சிறு பிள்ளைத்தனமானது.

நான்காவதாக கூறப்படும் காரணம், பிற மாநிலங்களில் இருந்து தமிழக அரசு போதிய மின்சாரத்தை வாங்க முன்வந்தபோதும் குறைந்த அளவே வெளிச்சந்தையில் வாங்க முடிகிறது என்பதாகும். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந் தாவது வாங்கி வினியோகிக்க வேண்டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். குறைந்த அளவுதான் வாங்க முடிகிறது என்கிற காரணம் திமுக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

இன்னும் சில காரணங்களான "குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது', "மத்திய தொகுப்பிலிருந்து கூடுதலாக மின்சாரம் பெறவும், மத்திய மின் நிலையங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தமிழக அரசு மைய அரசை கோரியுள்ளது' போன்றவற்றை பார்த்தால் மின்வெட்டு தொடரும் என்பதை கருணாநிதி சூசகமாக அறிவித்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சட்டசபையை கலைக்க வேண்டும்:

முதல்வர் கருணாநிதி சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படி செய்தால், மின்சாரத் தட்டுப்பாட்டை சரி செய்யக் கூடிய ஒரு அரசு பதவிக்கு வர வழி ஏற்படும்.

இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை மக்கள் தற்போது விரும்பவில்லை, வெறுக்கிறார்கள். எனவே கருணாநிதி உடனடியாக சட்டசபையக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.


மாண்புமிகு இதயதெய்வம் புரட்சிதலைவி டாக்டர் அம்மாவோட கோரிக்கய ஏத்துக்கிட்டு மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் ராஜினாமா செய்வாரா, மாட்டாரான்னு யாருக்காவது சந்தேகம் இருக்கா? சந்தேகமே இல்லாதவங்க உங்களோட பதிலை இங்க சொல்லிட்டு போங்க.

தலைப்புல இருக்குற மாதிரி ஒரு செய்தி கண்டிப்பா கருணாநிதி, ஜெயலலிதான்னு யாரு ஆட்சியிலயும் வரவே வராதுங்கிறதுதான் என்னோட ஒப்பீனியன். நீங்க என்ன சொல்றீங்கணா?

Sunday, August 31, 2008

டாக்டர் ராமதாசுக்கு மக்கள் வெச்சிருக்குற பட்டப்பெயர்கள்


சினிமாவுல காமெடி நடிகர்கள் பண்ணும் காமெடியை விட அதிகமாக காமெடி செஞ்சு மார்க்குகளை அள்ளியிருப்பவர் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள். சினிமா, அரசியல், விளையாட்டு என்று எதையுமே விடாமல் விமர்சித்து தள்ளும் இந்த ராமதாசுக்கு, பச்சோந்தி, பச்ச கஞ்சா, காடுவெட்டிக்கு காவல்காரன் என்று பல பெயர்களை அரசியல்வாதிகளே சொல்லியிருக்கிறார்கள். நீங்க உங்க மனசுல இந்த ஐயாவுக்கு என்ன பெயர் வெச்சிருக்கீங்கப்பு... பயப்படாம சொல்லுங்கப்பு..........

Saturday, August 30, 2008

இது கருணாநிதியின் துரோகமா? பதில் சொல்லுங்கப்பு!

காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதிதான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி.

அதற்கு நெடுமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.

அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

1969ம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது நாடாளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996ம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983ம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.

பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.


இந்த செய்தி தட்டிஸ் தமிழ்ல இருந்து சுட்டதுதாணுங்கோ.........

வெட்டிப்பயலின் லொள்ளு ஜோக்ஸ்

பதிவர் வெட்டிப்பயல் கடந்த 2006ம் ஆண்டு அக்டொபர் 26ந்தேதி போட்டிருக்கிற லொள்ளு பதிவ நீங்களும் படிச்சி பாருங்களேன்.


லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க...
சரினு களம் எறங்கிட்டேன்

ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள

மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

அஜித்: அது!!!

----------------------------------------------------------

அருணாச்சலம்:

தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.

செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

------------------------------------------------------------

ரன்:

அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...

-------------------------------------------------------------

வல்லவன்

சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...

--------------------------------------------------------------

தவசி

பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா

இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

Friday, August 29, 2008

ரஜினி கட்சி தொடங்குனா சிரஞ்சீவி மாதிரி கூட்டம் வந்திருக்குமா?

தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்று தமிழக மக்கள் பட்டிமன்றம் நடத்தி நடத்தி ஓய்ந்து போயிட்டாங்க. இப்போ புதுசா ஒரு பட்டிமன்றம் நடத்த தொடங்கியிருக்காங்களாம். அந்த பட்டிமன்றத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ரஜினி அரசியலுக்கு வந்தா... தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்குனப்போ வந்த கூட்டம் மாதிரி கூட்டம் வந்திருக்குமா? என்பதுதான் அந்த கேள்வி.

உங்க தரப்பு வாதத்தை சொல்லுங்க..............

இந்துக்களை கடவுளின் ஆயுதத்தை அவமதிக்கும் விகடன்

திலகவதிங்கிற ஒரு பெண் நிருபர் இந்துக்கடவுளின் ஆயுதமான உடுக்கையை நடிகையின் இடுப்புடன் ஒப்பிட்டு ஒரு பேட்டியை எழுதியிருக்கிறார். இது 03-09-08 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளியாயிருக்கு. 26ம் பக்கத்துல வந்திருக்குற இலியானா‌ பேட்டியில இருக்குற அந்த வரி என்ன தெரியமா?

இலியானாவ பாத்ததுமே இந்த ‌பெண் நிருபருக்கு, பரமசிவன் பார்த்து பார்த்து செய்த உடுக்கை மாதிரி உடம்புன்னு சப் எடிட்டர்கள் பில்டப் கொடுப்பாங்கனு தோணிச்சாம்.


இந்த வர்ணணை ஒரு சினிமாக்காரி பேட்டியில தேவயா? நீங்களே சொல்லுங்கப்பா.....

இவங்க திருந்தவே மாட்டாங்களா?


நாட்ல வாழுல எல்லோருக்மே ஒரு பிரச்சினை இருக்கு. அதுல த(ல)லையாய பிரச்சினை உயிர் பிரச்சினை. இவங்கள பாருங்களேன். ஆபத்துன்னு தெரிஞ்சும் இப்படி போறாங்க.

இப்பிடி போறவங்கள நடு ரோட்டுல நிக்க வெச்சி........(?) Fil in d blnks.

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

கஷ்டத்திலிருக்கும் மூத்த தயாரிப்புங்களுக்கு மாதாந்திர உதவிய தயாரிப்பு சங்கம் வழங்குது. இதுல புதுசா பிரச்சினை முளைச்சிருக்காம்... பிரச்சினை முளைச்சிருக்காம்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த தயாரிப்புங்க தேர்தல்ல, எதிர் அணிக்கு வேலை செஞ்ச சில தயாரிப்புங்களுக்கு உதவி தொகைய கொடுக்காம இழுத்தடிக்கிறாங்களாம்... இழுத்தடிக்கிறாங்களாம்... கஷ்டத்துல வாழுற அவுங்க, பாக்குறவங்ககிட்ட கண்ணீர்விட்டு அழுவுறாங்களாம்... அழுவுறாங்களாம்...

ஒரு ட் படம் கொடுக்காம எங்கேயும் பேச மாட்டேன்னு சபதம் எடுத்துருக்கேன். இந்த விழா நடத்துறவுங்க என்னோட குடும்ப நண்பர்ங்கிறதாலதான் கலந்துகிட்டேன்Õ. வரிசையா பத்து விழாக்கள்ல விரலு நடிகரு மைக்க புடிச்சாலே இப்படித்தான் ஆரம்பிக்கிறாரு... ஆரம்பிக்கிறாரு... இருக்கிற அம்புட்டு வ¤ழாக்கள்லேயும் விதவிதமா டிரஸ்போட்டு கலக்குறாரு. மைக்க பிடிச்சா பப்ளிசிட்டியே பிடிக்காத மாதிரி பீலா விடுறாருÕன்னு கோடம்பாக்கம் பேசிக்குது... கோடம்பாக்கம் பேசிக்குது...

தெலுங்கு தேசத்து உச்ச நடிகர், கட்சி ஆரம்பிச்சிட்டாரு. கட்சியில சேர ரிட்டையர்டு ஆன தெலுங்கு தேசத்து நடிகைங்க தீவிர முயற்சியில இறங்கியிருக்காங்களாம்... இறங்கியிருக்காங்களாம்... திருப்பதியில் பிறந்த விந்திய நடிகை, பூனைக்கண் நடிகை, அபிநயமான குத்தாட்ட நடிகை, தொங்குதோட்ட நடிகை, பிரியமான பானு நடிகைன்னு நிறைய பேர் வரிசை கட்டி நிக்குறாங்களாம்... நிக்குறாங்களாம்...

தமிழ்முரசு பத்திரிகையில இருந்துதான் இத சுட்டு போட்டிருக்கேன் சுட்டு போட்டிருக்கேன். இத படிச்சிட்டு என்ன திட்டறவங்க திட்டலாம்... திட்றவங்க திட்டலாம்..... பாரட்டனும்னு ஆசப்படுறவங்க பாராட்டலாம்... பாராட்டலாம்...

Thursday, August 28, 2008

நச் கமெண்ட் அடிக்கிறவங்களுக்கு நமீதா படம் இலவசம்

அவிழ்ந்து விழுகிற ரேஞ்சுக்கு டிரஸ் போட்டிருக்கிற நமீதா பற்றி நச் கமெண்ட் அடிக்கிறவங்களுக்கு நமீதா படம் இலவசம். வாங்கோ... வாங்கோ... நச் கமெண்ட் அடிச்சிட்டு போங்கோ... போங்கோ...

இவங்களுக்கு எப்பத்தான் அறிவு வருமோ? ஒரு உருப்படியான பதிவு


சென்னை மீனம்பாக்கத்தில் நேற்றிரவு நான்கு பேர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். அதே பகுதியில் தண்டவாளத்தில் காலை செல்போனில் பேசிய படியும், விழுந்து, எழுந்தும் ரிலாக்ஸாக செல்லும் இளசுகள். தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி என அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்திகளை படித்து, அப்போதைக்கு வருத்தப்படுவதுடன் சரி. விழிப்புணர்வு மட்டும்... ஊஹ¨ம்!

இவங்களுக்குல்லாம் எப்பத்தான் புத்தி வருமோ?

தமிழ்முரசு படத்தில் வெளியான படத்தைத்தான் சுட்டு இங்க போட்டிருக்கேன்.

Wednesday, August 27, 2008

கிசுகிசு கிசுகிசு : இத படிக்காதீங்க ப்ளீஸ்...

கிரிக்கெட் வீரர் கிசுகிசு, டென்னிஸ் வீரர் கிசுகி, தமிழ்சினிமா கிசுகிசு, கோலிவுட் கிசுகிசு, நடிகை கிசுகிசு, நடிகர் கிசுகிசு, அரசியல் கிசுகிசு, தொழிலதிபர் கிசுகிசுன்னு இந்த பதிவுல நான் எதயுமே போடல. அதனாலதான் இத படிக்காதீஙக ப்ளீஸ்னு தலைப்பு போட்டேன்.

சரி... வந்துட்டீங்க. இந்த போட்டோவுல இருக்குற பாப்பா யாருன்னு பார்த்து சொல்லிட்டு போங்க சாமீயோவ். போட்டோவ எங்கன்னு தேடுறீயளா? பிளிஸ் கிளிக் கியர்.



மொக்கை பதிவு போட்டா நெறய பேர் திட்டி கமெண்ட் போடுவாங்கனு கேள்விப்பட்டேன். நீங்க எப்படி சாமீ. ஒரு கருத்து சொல்லீட்டு போவீங்களா? சும்மா ஒன்னுமே சொல்லாம போயிடுவீஙகளா?

இந்த பொண்ணு யாருன்னு தெரியுதா? சரியா சொன்னா பிரைஸ்


படத்துல குல்பி ஐஸ் மாதிரி, செக்கச் செவேன்னு இருக்குற கையை கட்டிக்கினு, சிரிக்காம சிரிச்சிட்டு இருக்குற இந்த பொண்ணை நீங்க எங்கயாவது பாத்துருக்கீங்களா? பாத்தவங்க இந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க பாப்போம். சரியா சொன்னா ஒரு பிரைஸ் ஒங்களுக்கு கிடைக்கும். என்ன பரிசுன்னு பின்னால சொல்லுவேன். சரியா? வர்ட்டாடாடாடா........................

Tuesday, August 26, 2008

ஹீரோ-டைரக்டர் லடாய் : சினிமா கிசுகிசு

கோடம்பாக்கம் கோடங்கி சொல்லியிருக்க வாக்குதான் இன்னிக்கு லொடுக்குபாண்டியோட பதிவு. தமிழ்முரசு பத்திரிகையில நேத்திக்கு வந்திருக்கிற கோடம்பாக்கம் கோடங்கி கிசுகிசுவை நீங்களும் படிச்சி பாருங்க சாமியோவ்.

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

அம்மா காவியத்துல ஹீரோவா நடிக்கிறாரு பாட்டு வாத்தியார். பட தயாரிப்பு வேலையில அவரு என்ட்ரி கொடுத்து ஏகப்பட்ட பணத்தை அபேஸ் பண்ணிட்டாராம்... அபேஸ் பண்ணிட்டாராம்...தட்டிக்கேட்ட இயக்குனர வேலை பாக்கத் தெரியலைனு நீக்கிட்டாராம்... நீக்கிட்டாராம்... படம் தயாரிக்கிறவரு, அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவரு. அவங்க மூலமா பெரிய இடத்துக்கு நியூஸ் போயிருக¢கு. இப்போ பெரிய இடம், பாட்டு வாத்தியார் மேல கோபமா இருக்காம்... கோபமா இருக்காம்...
கொக்கரக்கோ படத்தின் ஷ¨ட்டிங்கில அரிவாள் இயக்குனருக்கும், காதல் ஹீரோவுக்கும் இடையே அடிக்கடி லடாய் ஏற்படுதாம்... லடாய் ஏற்படுதாம்... சீன அப்படி வச்சா நல்லா இருக்கும், வசனத்தை இப்படி பேசினா நல்லா இருக்கும்னு அரிவாளுக்கே அறிவுரை சொல்றாராம் ஹீரோ. ‘உன் வேலைய மட்டும் பாருÕங்கிற அர்த¢தத்துல வரும் நெல்லை வசனத்தை சொல்லி, அரிவாள் காய்ச்சி எடுத்துட்டாராம்... ஹீரோவை காய்ச்சி எடுத்துட்டாராம்...
ஹீரோ ஆசையில இருந்த சிலிம்ரன் நடிகையோட கணவர், இப்ப அந்த ஆசைய துறந்துட்டாராம்... துறந்துட்டாராம்... Ôஅழகான மனைவிக்கே ஹீரோயின் சான்ஸ் வரமாட்டேங்குது. நாம எங்கே ஹீரோ ஆவுறதுÕனு அனுபவத்துல உணர்ந்துட்டாராம்... உணர்ந்துட்டாராம்... அதனால இனிமே கணவர் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு கப்சிப்னு இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்காராம்... முடிவு பண்ணியிருக்காராம்... பாசக்கார மனைவியோ தமிழ்ல ஒரு தயாரிப்பு கம்பெனிய ஆரம்பிக்கப்போறாராம். அதுக்கு கணவரை எம்.டி. ஆக்கணுங்கிற ஆசையில இருக்காராம்... ஆசையில இருக்காராம்...

Monday, August 25, 2008

தமிழ்மணம் சூடான இடுகைகள் குறித்த முக்கிய செய்தி

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் எந்த அடிப்பபையில தேர்ந்தெடுக்கப்படுதுன்னு பதிவர் ஜேசப் பால்ராஜ் தன்னோட வலைப்பூவுல ஒரு முக்கியமான கேள்வியை கேட்டிருக்கார். அவருக்கு மட்டுமில்லை... எனக்கும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செஞ்சிது. அதனால இதுக்கு தீர்வு சொல்ற இந்த பதிவை போடுறேன்.

பயணங்கள் பதிவில் கடந்த் ஜூன் மாசம் 16ம் தேதி ஒரு பதிவு போட்டிருக்காங்க. அந்த முக்கியமான பதிவை நீங்களும் படிச்சு பாருகேளேன்.


MR.BURUNO.... IPPA OK VA?

எனக்கு பிடிச்ச நாலு லைன் கவிதை

இந்த கவிதையை எங்கு படித்தேன்று தெரியல. ஆனா ரொம்ப நாளா என் மனசுலயே இருக்கு. எனக்கு நல்ல கவிதையா தெரியுது. இத படிச்சிட்டு உங்களுக்கு எப்டி தெரியதுன்னு சொல்லுங்க சாமீ...


தினம் தினம் காத்திருந்தேன்...
நீ வருவாய் என...!

வந்தவுடன் நீ கேட்டாய்
உன் வருவாய் என்ன?

================

இது எப்டி இருக்கு?

தினமலர் குழப்பம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

தினமலர் நாளிதழில் நேத்திக்கு ரஜினிகாந்த் பத்தி ஒரு செய்தி கட்டுரை போட்டிருந்தாங்க. சூப்பர் ஸ்டார் தகுதியை இழக்கிறாரா ரஜினி?ன்னு போட்டிருக்கிற அந்த செய்தியை படித்தவர்கள் தினமலரின் இந்த குழப்ப செய்தி பற்றிய உங்க கமெண்ட்டை இங்கே சொல்லிட்டு போங்க.

தினமலர் செய்தியை படிக்காதவங்க இங்கே போய் படிச்சிட்டு வந்து கமெண்ட்டை சொல்லுங்க.

ஆனா கமெண்ட் மட்டும் சொல்லாம போயிடாதீங்க சாமீ... ப்ளீளீளீளீஸ்.

Sunday, August 24, 2008

ஒடுக்கப்பட்ட பாலிலியல் உணர்வுகள் : ஜ்யோவ்ராம் சுந்தரின் யதார்த்த கதை

பதிவர் ஜ்யோவ்ராம் சுந்தர் 2007ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி எழுதிய பதிவுதான் இது. ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக்கதைகளும் என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான பதிவை நீங்களும் படியுங்களேன்.



வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்

பிரமிள்

தனபாண்டியன் பிறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவன் அம்மா இறந்துவிட்டாள். அதை முன்னிட்டு எல்லோரும் அவனைத் தூற்றினர். அவனுக்கு ஆறு மாதம் ஆகியிருந்தபோது அவனது அப்பா அவனிடம் இரைந்தார் - "எங்கப்பா அஞ்சு வருஷம் முன்னாடி செத்ததுக்கு நீதாண்டா காரணம்." ஆறு மாதக் குழைதைக்குக் கோபம் வராதா.? ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறை விட்டான் என்று வாசித்துக் கொள்ளவும்). தன்மேல் பொறாமை கொண்ட ஊர் நாட்டாண்மைக்காரர்தான் பில்லி சூன்யம் வைத்திருப்பான் என்றான். அவரும் ஒத்துக் கொண்டார். அதிலிருந்து அவனைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டார். அவனும் பெயரைச் சுருக்கி பாண்டியன் என்று மாற்றிக் கொண்டான். பிற்காலத்தில் நிறைய ரசிகர் நற்பணி மன்றங்கள் தோன்றின.

அவனுக்குப் பத்து வயதிருக்கும்போது ஊரிலுள்ள வேசிகளிடம் போக ஆரம்பித்தான். யாராவது கேட்டால், தன் தாயாரைப் பார்க்க முடியாத ஏக்கம் நினைவிலி மனதில் இருந்து அதுவே எல்லாப் பெண்களிடமும் ஆசையைத் தூண்டுகிறது என்பான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல் வேசிகள் எல்லாரும் ஊரைவிட்டகன்றனர்.

அவன் செத்துப் போனான்.

எங்கும் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். சொந்தமாக வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்முயற்சிகள் கைகூடாததால் இருபத்தைந்து வயதில் மளிகைக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். நல்ல சூட்டிகையான பையன் என்ற பெயரை மிக எளிதில் பெற்றான்.

இடைவெட்டாக ஆசிரியர் கருத்து : இந்தக் கதை ஏன் இப்படி இருக்கிறது என்று இதற்குள் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். கதை நன்றாக இல்லை என்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இது என் கதை; என் இஷ்டப்படி தான் எழுதுவேன் (ஆறு வார்த்தைகள் ஆகிவிட்டதா.?). Raymond Federman 'யதார்த்தம் / கற்பனை உலகம், நனவு மனம் / நினைவிலி மனம், கடந்த காலம் / நிகழ் காலம், உண்மை / உண்மையற்றது ஆகிய வித்தியாசப் படுத்தல்களைக் கலைவது' நடக்கும் என்கிறார் (பார்க்க: மீட்சி 33; மொழிபெயர்ப்பு நாகார்ஜூனன்).

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று பாடிக் கொண்டே வந்தவனின் முகத்தில் எருமை மாடு காறி உமிழ்ந்தது. கையிலிருந்த கத்தியால் அதன் கழுத்தை வெட்டி ரத்தத்தைத் துளிக்குடச் சிந்தாமல் குடித்தான். இனி ஊரிலுள்ள ஒரு எருமை மாட்டையும் விடக்கூடாது என்று கையில் பசூக்காவை எடுத்துக் கொண்டு எதிர்படும் மாடுகளை எல்லாம் சுட ஆரம்பித்தான். அவன் கையில் பசூக்காவை வைத்திருந்த காட்சி ராஜ ராஜ சோழனுக்குக் கிலியை ஊட்டியது. தன் நாட்டை விட்டு, ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்தான். அவனே பிற்பாடு ஹிட்லராக மாறினான். (இதைப் போன்ற சம்பவத்தை நீங்கள் கோவி மணிசேகரின் வரலாற்று நாவலில் படித்திருந்தால் நான் பொறுப்பல்ல - ஆசிரியர்).

இப்படியாக அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான் (வாள் போன்ற மொழியை வேண்டுபவர்கள் இந்த வரியை அடித்துவிடவும்). கண்ணைப் பறிக்கும் அவனது அழகைக் கண்டு யாரும் பெண் கொடுக்க வரவில்லை. கஷ்டப்பட்டு தன்னிலும் 40 வயது மூத்த பெண்ணைத் திருமாணம் செய்து கொண்டான். அவளோ அவனை மதிக்காமல் தினமும் இம்சித்து வந்தாள். இது பொறுக்காத மனு நீதிச் சோழன் ஒரு நாள் அவள் கனவில் வந்து 'இப்படியெல்லாம் செய்தால் நரகம்தான் கிடைக்கும்; ஆணுக்கு அடங்கியிருப்பதே பெண்ணின் கடமை' என்று எடுத்துரைத்தான். அவள் கனவிலேயே 'போடா மயிரு' என்று பதில் சொன்னாள். 'நான் தமிழச்சி; என் பண்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது' என்றும் அவள் சொன்னதாகக் கேள்வி.

அவள் தொந்தரவு தாங்காமல் விவாகரத்து கேட்டான். அவள் ஒப்புக் கொள்ளாமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்).

அடிவாங்கியதிலிருந்து பாண்டியன் முற்றிலும் மாறிப் போனான். சாத்வீக வழியே சிறந்தது என்று சன்னியாசி ஆக முடிவு செய்தான். ஆனால் சன்னியாசம் வாங்கப் போகும் வழியில் இன்னொரு பெண்ணைக் கண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

காட்சி

ஒருவன் சிறுகதை எழுத முயல்கிறான்.

இவ்வாறு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவளின் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டான். இம்முறை குழந்தை பிறந்ததும் அவனே இறந்து விட்டான்.

இரண்டாவது இடைவெட்டு : படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்க, பல திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே போகிறேன். கதை சுவாரஸ்யம்தான் முக்கியம் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். கதையின் போக்கிலேயே கதாநாயகன் இறந்தாலும், தனியாக ஒரு வரி 'அவன் செத்துப் போனான்' என்று கொடுத்திருக்கிறேன். வாசகி, உனக்கு போரடித்தால் எந்த இடத்திலும் அதைப் படித்துவிட்டு கதையை முடித்துக் கொள்ளலாம்.

குறிப்பு : இப்படி நடுவில் அடிக்கடி இடைவெட்டு வருவது வாசக அனுபவத்தில் குறிக்கிடுவது போலாகும் என்பவர்களே - கதை எழுதுவதே வாசக அனுபவத்தில் குறிக்கிடுவதுதானே.! (இதை யார் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. தெரியப்படுத்துபவர்களுக்கு சிவாஜி பட டீவிடி இலவசப் பரிசு. போட்டியில் கலந்து கொள்ள கடைசி தினம் : 24.12.2007).
அவனது சமாதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது : 'பிறந்தது கிமு 989; இறந்தது கிபி 2095. இந்த முப்பத்து மூன்று வயதில் சாதிக்க நினைத்ததையெல்லாம் சாதித்துவிட்டு உள்ளே உறங்குகின்றான் கும்பகர்ணன்'.

பாண்டியனின் மொழிப் பற்று அலாதியானது. தொலைக்காட்சியில் இந்தி நிகழ்ச்சிகள் வரும்போது அணைத்துவிடுவான். மூன்றாந்தரமான இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தரமான தமிழ் நிகழ்ச்சிகளே பரவாயில்லை என்பது அவன் கட்சி. தர நிர்ணயம் ஒவ்வொருவர் அடிமனத்திலும் இருப்பது; அதை மாற்ற முடியாது என்று தன்னிலையைக் கரைத்தழிக்க விரும்பும் பின் அமைப்பியல்வாதிகளுக்குச் சொன்னான்.

தன்னுடைய கையைச் சுழற்றி வீசினான். அது சிறகாய் மாறி, வர்ணப் பறவையானது. திடீரென்று கழுகாய் உருமாறி அவனைத் கொத்த ஆரம்பித்தது. கழுகின் மூக்கைப் பிடித்துத் தரையில் அடித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்குக் கையில் கட்டுடன் அலைவதைப் பார்க்க முடிந்தது. கேட்டதற்கு, முன்னோர்கள் வைத்த வினையை அவன் அறுவடை செய்ததாகவும், அதற்கு நிவாரணம் தேடிக் கொண்டதாகவும் சொன்னான். மக்கள் நம்பி, அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர்.

இடைவெட்டு : கடந்த இரண்டு பத்திகளும் அலுப்பு தட்டுகிறது என்று சொல்பவர்களுக்கு : இது போர்ஹே உத்தி. எந்நேரமும் வாசகனை ஏமாற்றி இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

காலைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். எதிரே கடல். தூரத்திலிருந்து பெரிதாக வரும் அலை ஓய்ந்து திரும்பும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் திரும்பினால்.....

(தொடரும்)

செத்து செத்து விளையாடுவோமா?: தம்பி கேட்ட கேள்வி இது!

பதிவர் தம்பி 2006ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எழுதிய பதிவுதான் இது. செத்து செத்துவிளையாடுவோமா என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான பதிவை நீங்களும் படியுங்களேன்.
Image Hosted by ImageShack.us

மேல இருக்கற நம்ம கைப்புள்ளயின் வலது
கரத்தை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு
நினைக்கிறேன். சமீப காலமா பிரபலமாகிட்டு
வரும் நகைச்சுவை நடிகர்.

"என் புருசன் குழந்தை மாதிரி" படத்தில
வடிவேலுவ ஓட ஒட வெரட்டி, கொலவெறியோட
ஆவேசமா தொரத்தி காதை லேசா தொட்டு பச்ச
புள்ள மாதிரி விளையாட்டு விளையாடுவாரே
அவர்தான் இந்த முத்துக்காளை. சங்கத்தில
இருக்கற ஆளுங்களுக்கு இவர தெரிஞ்சிருக்கும்.

சில சமயத்தில சரக்கை விட ஊருகாய் நல்லா
இருக்கறதில்லையா அதே மாதிரி இவர் நடிச்ச
ராமகிருஷ்ணா என்ற படத்தில சார்லி இருந்தும்
இவரது நடிப்பையே எல்லாரும் ரசித்தார்கள்.
நான் உட்பட. தமிழ் நகைச்சுவை காட்சிகளில்
எனக்கு தெரிந்து மோனோ ஆக்டிங் என்பதை
புகுத்தியவர் இவர் என்றே நினக்கிறேன். இல்லாத
ஒன்றை இருப்பதாக காட்டி பிறரை ஏமாற்றுவதை
ராமகிருஷ்ணா படத்தில் மிக அருமையா காமெடி
பண்ணியிருப்பாரு.

Image Hosted by ImageShack.us

ஒரு பைட்டராக திரையுலகில் அறிமுகமாகி இன்று
நகைச்சுவையில் குறிப்பிடும்படியான இடத்தை
பிடித்திருக்கிறார்.

இப்ப என்னாத்துக்கு இந்த இழு இழுக்கற நீ?
மேட்டர் இன்னானு சொல்றா வென்று! என்று
கேட்பதற்கு முன்னால் நானே சொல்றேன்.
நேத்திக்கு வழக்கம்போல வலைப்பக்கத்தில
உலாத்திக்கிட்டு இருந்தேன். இட்லிவடை பக்கத்தில
கூகிள் தேடுதல் பத்தி எழுதி இருந்தார்.
இப்படியெல்லாம் வசதி இருக்குதான்னு பாத்தேன்.
நாம எக்கு தப்பா கேட்டா என்ன பதில்
சொல்லும்னு பாத்தேன். அப்டி என்னப்பா
கேட்டுபுட்டே நீயின்னு நாதஸ் கோஷ்டில வர
ஆளுங்க செந்தில கேட்ட மாதிரி கேளுங்க..

நான் எப்ப சாகப்போறேன்? இதத்தான் கேட்டேன்.
இன்னும் பதிமூணு வருசந்தான் என்னோட ஆயுசாம்
அதுக்குள்ள பூட்ட கேசுதானாம். அந்த வலைதளத்தில்
சொல்லியிருந்தாங்க.முத்துக்காளை ஞாபகம் வந்துடுச்சி
இந்த தளத்தை பார்த்தவுடன். செத்து செத்து
விளையாடலாமா? பாத்ததும் சிரிப்பு சிரிப்பா
வந்திடுச்சி அப்படியே ஒரு யோசனையும் வந்திச்சு
இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்
என்று ஒரு கற்பனை.

வருடாவருடம் பிறந்தநாள் கொண்டாடறவங்க
இறந்தநாளும் தெரிஞ்சா அதையும் கொண்டாடுவாங்களா?
இல்ல துக்கப்பட்டு அன்னிக்கே ஒப்பாரி வைக்க
ஆரம்பிச்சுடுவாங்களா?. அன்னிக்கு கேக் வெட்டி
கொண்டாடுவாங்களா? புதுத்துணி உடுத்துவாங்களா?
கோயிலுக்கு போயி கடவுள்கிட்ட பெட்டிஷன்
குடுப்பாங்களா?

தமிழ்மண முகப்பில் உங்க படம் : தமிழ்ப்ரியன் அசத்தல் ஐடியா

தமிழ்மணம் முகப்பில் உங்கள் படத்தை இடம்பெற வைக்கிறது எப்படின்னு பதிவர் தமிழ்ப்ரியன் அசத்தலான ஐடியாவை படத்துடன் கொடுத்திருக்கிறார். அதனை நான் ரெண்டு நாளிக்கு முன்னால முயற்சி செய்தேன். முடிவு இன்னும் கிடைக்கவில்லை. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.



தமிழ் மணத்தில் தங்களது பதிவை இணைத்துள்ள பதிவர்களில் பலரும் பல பதிவுகளிலும், கூட்டுப் பதிவுகளிலும் எழுதுகின்றனர். ஆனால் பலருக்கும் தமிழ் மண முகப்பில் பதிவு வரும் போது எந்த பதிவில் எழுதி உள்ளனர் என்பது பார்வையாளர்களுக்கு உடனடியா தெரிவதில்லை. தமிழ் மண முகப்பில் பதிவுக்கான படத்தை தெரிய வைப்பதன் மூலம் இந்த குறையை நீக்க முடியும்....

எடுத்துக்காட்டுக்கு எங்கள் வேடந்தாங்கல் பதிவிலும், என்னோட இடம் என்ற இடத்திலும் கூட எழுதுகிறேன். இரண்டில் எதில் பதிவிட்டாலும் அதற்கான தனியான படம் தெரியும்.

ஓரத்தில் படத்தில் உள்ள இரண்டும் நான் எழுதிய பதிவாக இருந்தாலும் இரண்டுக்கும் தனித் தனி படம் இருப்பதால் பதிவர்களுக்கு சுலபமாக விளங்கும்.




பெரும்பாலானவர்கள் இதை விரும்பினாலும் இதற்காக தமிழ் மண கருவிப்பட்டையில் செய்ய வேண்டிய மாற்றங்களின் சிரமத்தைக் கருதி செய்யவில்லை. என்னால் முடிந்த அளவு சுலபமாக அதை விளக்குகிறேன்....

அதற்கு முன் உங்கள் பதிவில் தமிழ் மணக் கருவிப்பட்டை சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் பூர்ணாக்காவின் இந்த பக்கத்திற்கு சென்று சேர்த்துக் கொள்ளுங்கள். சுலபமான வழிமுறைகளுடன் சிறந்த இடமிது
http://poorna.rajaraman.googlepages.com/home

இனி......... இதற்கு செய்ய வேண்டிய மாற்றத்தை இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.

1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்
2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்


1. உங்களது புரோபைல் படத்தை இணையத்தில் தயார் செய்தல்

முதலில் நீங்கள் எந்த படத்தை தமிழ் மண முகப்பில் வர வைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ அந்த படத்தை தயார் செய்து கொள்ளுங்கள். அது உங்களது புகைப்படமாகவோ, அல்லது உங்கள் பதிவின் பெயர் கிராபிக்ஸ் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். இதை இணையத்தில் upload செய்ய வேண்டும்.

இணையத்தில் upload செய்ய..... http://www.imageshack.us/ இங்கு செல்லுங்கள்.





படத்தில் உள்ளபடி இந்த இணையதளம் திறக்கும்.
1. Browse பொத்தானை அழுத்தி உங்களது படத்தைத் தேர்ந்தெடுங்கள்
2. Resize Image என்று உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும்
3. அதை அடுத்து உள்ள DropDown List ல் 100 x 75 (Avatar) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4. Host it என்பதை அழுத்தவும்....

சற்று நேரத்தில் நாம் அளித்த படம் http://www.imageshack.us/ தளத்தில் ஏற்றப்பட்டு நமக்கு அதற்கான URL கள் தரப்படும். (கீழே உள்ளவாறு) அதில் கடைசியாக உள்ள URL ஐ நாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

(எ.கா) http://img201.imageshack.us/img201/1695/meoldrp5.png


இப்போது முதல் கட்டம் முடிந்தது.

2. தமிழ் மண கருவிப்பட்டையில் மாற்றம் செய்தல்

இனி உங்கள் Blogger கணக்கில் Login செய்து நுழைந்து கொள்ளுங்கள். அங்கு
Dash Board, Layout, Edit HTML பகுதிக்கு செல்லுங்கள். Edit Template என்பதற்கு கீழே இருக்கும் Expand Widget Templates என்பதில் உள்ள Check Box ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவின் HTML CODE முழுவதுமாக கீழே இருக்கும்.


முதலில் இவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து பிரதி எடுத்து பாதுகாப்பாக ஒரு நோட்பேட் பைலில் வைத்துக் கொள்ளுங்கள்


இனி அதில் தமிழ் மண கருவிப்பட்டை இரண்டுக்கு செல்லுங்கள்.... அது கீழ்க்கண்டவாறு இருக்கும்.




முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கணும்னா தமிழ்ப்ரியன் வலைப்பூவுக்கு போயிடுங்க சாமீ. நான் எவ்வளவோ முயற்சி செஞ்சும், அவர் போட்டிருக்கிற HTML CODE என் வலைப்பூவுல தெரிய மாட்டேங்குது.

குசேலன் முதல்வார வசூல் முழு விவரம்

குசேலன் படம் பிளாப். முதல் வாரத்திலேயே வசூல் ஆட்டம் கண்டுட்டுன்னு பத்திரிகை, டி.வி., வெப்சைட்னு திட்டி தீர்த்துட்டு இருக்காங்க. குசேலன் படத்தின் முதல் வார வசூல் முழு விவரத்தை பதிவர் சினிமா நிருபர் வெளியிட்டிருக்கிறார். அதனை நீங்களும் படியுங்களேன்.



குசேலன் படம் தமிழகம் முழுவதும் 84 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர்களுக்கு முதல் வாரத்தில் கிடைத்த வசூல் முமு விவர பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம். இதனை பார்த்தே குசேலன் எந்த அளவுக்கு ரசிகர்கள் சென்று பார்த்திருக்கிறார்கள் என்பது தெரியும். (கீழே இருக்கும் அட்டவணையை கிளிக்கி பெரிய சைஸில் படிக்கவும்)

Saturday, August 23, 2008

யூதர் பிராமணம் ஆறு ஒற்றுமை

கடந்த 2006 ஆகஸ்ட் 1ம் தேதி பதிவர் மருதநாயகம் யூதர் - பிராமணர் - ஆறு விளையாட்டு என்ற பெயரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த விளையாட்டை... சாரி... ஒற்றுமையை நீங்க கொஞ்சம் படிச்சு பாருங்களேன்.



1. இரு இனத்தவருமே தாங்கள் தான் உசத்தி என்றும் தாங்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள்

2. இருவருமே தங்கள் மொழியை தேவ பாஷை என்று சொல்லிக் கொண்டு செத்துப் போன மொழிக்கு உயிர் கொடுக்க முக்கிக் கொண்டிருக்கிறார்கள்

3. இருவருமே தங்கள் இனத்திற்கு மற்றவர்களால் அச்சுறுத்தல் உள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்ததலும் உண்மையில் இவர்கள் தான் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்

4. இருவருமே கலப்பு மணத்தை எதிர்ப்பவர்கள் ஆனாலும் காலப் போக்கில் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்

5. இரு இனத்திலும் அதி புத்திசாலிகள் இருப்பார்கள். ஆனால் அந்த அறிவை அவர்கள் பயன்படுத்தும் விதம் தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்

6. இருவருமே மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும் பெரும்பான்மையாக இருப்பவர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்று தெரிந்து வைத்திருப்பார்கள்

குசேலன் வினியோகஸ்தர்களுக்கு ரூ.7 கோடி நஷ்டஈடு

ரஜினிகாந்தும், தயாரிப்பாளர்களும் சேர்ந்து குசேலன் படத்தை எடுத்த விநியோகஸ்தர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்கவிருப்பதாக தினகரனில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதனை நீங்களும் படியுங்களேன்.

குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாயமீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.

குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

நஷ்ட ஈடு வழங்காவிட்டால், இனி ரஜினி படங்களுக்கும் கவிதாலயா படங்களுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம்Õ என தியேட்டர் அதிபர்கள் எச்சரிததனர். இந்நிலையில், குசேலன் தயாரிப்பாளர்கள் பாலசந்தர், விஜயகுமார், அஸ்வினி தத் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நஷ்ட ஈடு வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதாக வினியோகஸ்தர்களிடம் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பன்னீர் செல்வம், நேற்று மாலை ரஜினியை சந்தித்தார். அப்போது நஷ்ட ஈடு வழங்குவதை ரஜினியும் உறுதி செய்தார். இதன்படி, தமிழகம், ஆந்திராவில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு (பிரமிட் சாய்மீராவைத் தவிர்த்து) ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று தெரிகிறது. ரஜினி, தயாரிப்பாளர்கள், இயக்குனர் வாசு ஆகியோர் இந்த தொகையை வழங்குகின்றனர். ரஜினி மட்டும் ரூ.3 கோடி வழங்குகிறார் என்று கூறப்படுகிறது.

சாய்மீரா தயாரிப்பில் ரஜினி: குசேலன் படத்தை ரூ.60 கோடிக்கு வாங்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனம் உலகம் முழுவதும் இதை வெளியிட்டது. இந்நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெரிய தொகையாக இருப்பதால், பிரமிட் சாய்மீரா தயாரிப்பில் ஒரு படத¢தில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ரோபோ படத்துக்குப் பின் இதில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

திருப்புமுனை ஒலிம்பிக்ஸ் : தினமணி சாட்டையடி தலையங்கம்

இன்றைய தினமணியில் திருப்புமுனை ஒலிம்பிக்ஸ் என்ற தலைப்பிட்டு தலையங்கம் வெளியாகியிருக்கிறது. 108 கோடி பேர் கொண்ட ஒரு நாடு உலக அரங்கில் முன்னணியில் நிற்க முடியாததற்கு என்ன காரணம் என்று விரிவாக விவரித்திருக்கும் அந்த தலையங்கத்தை நீங்களும் படியுங்களேன்.



முப்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உலக விளையாட்டு அரங்கில் நாங்களும் இருக்கிறோம் என்று இந்தியா நிரூபித்திருக்கிறது. அபிநவ் பிந்த்ராவின் தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் சுஷில் குமாரும், குத்துச் சண்டையில் விஜேந்தர் சிங்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.

108 கோடி பேர் கொண்ட, ஒரு நாடு உலக அரங்கில் முன்னணியில் நிற்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது மனித வளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நமது சோம்பேறித்தனம்தான் என்று கூற வேண்டும். திறமைசாலிகளான சிறுவர்களைப் பள்ளிகளிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையாக விளையாட்டுப் பயிற்சிகளை அளிப்பதற்கான முயற்சியில் சுதந்திர இந்தியா ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டவில்லை.

கேரளத்திலுள்ள கண்ணூர், தலைச்சேரி பகுதியினர்தான் விரும்பி சர்க்கஸ் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுபவர்கள். இப்போதும்கூட அதே நிலைமைதான். அந்தக் குழந்தைகள் இயற்கையிலேயே உடலை வளைத்து வித்தை காட்டும் "ஜிம்னாஸ்டிக்ஸ்' விளையாட்டில் திறமைசாலிகளாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு முறையான தேர்ச்சி அளித்தால் உலக அரங்கில் இந்தியா ஜிம்னாஸ்டிக்கில் முதலிடம் வகிக்கும் என்று கடந்த 40 ஆண்டுகளாகக் கைவலிக்கப் பலரும் எழுதியதுதான் மிச்சம். அதற்கான முயற்சிகளை அரசு செய்யவில்லை.

கிரிக்கெட், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டிற்குத் தரப்படும் ஊக்கமும், உதவியும் ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, தடகளம், மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளுக்குத் தரப்படுவதில்லை.

வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் சுஷில் குமார் மற்றும் விஜேந்தர்சிங் போன்றவர்கள், தங்களது கிராமங்களில் கட்டாந்தரையில்தான் மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டு, வளர்ந்த பிறகு சர்வதேச சங்கங்களின் பந்தய மேடைகளைத் தரிசிக்கவே முடிந்திருக்கிறது. உலக வல்லரசாகப் போகிறோம் என்று மார்தட்டும் இந்தியாவில், முறையான பயிற்சி மையங்களும், பந்தய மைதானங்களும் மாவட்ட அளவில்கூட அல்ல, எல்லா மாநிலங்களிலும்கூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

2001ஆம் ஆண்டில் 0.06 சதவிகிதமாக இருந்த விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீடு இப்போதுதான் 0.97 சதவிகிதமாக ஆகியிருக்கிறது. அதாவது, மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடான ரூ. 7,85,583.70 கோடியில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்காக நாம் ஒதுக்கீடு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ. 764 கோடி மட்டுமே! இந்த லட்சணத்தில் இந்தியா தங்கப் பதக்கங்களைக் குவிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டால் எப்படி?

இன்னொரு விஷயம். துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், செஸ் போன்ற தனிநபர் விளையாட்டுகளில்தான் அவ்வப்போது இந்திய வீரர்களின் சாதனைகள் வெளிப்படுகின்றனவே தவிர, அணியாகப் போட்டியிடும் ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து போன்றவைகளில் நாம் ஏன் வெற்றி பெற முடியவில்லை? கிரிக்கெட்டில்கூட அதிர்ஷ்டம் ஒத்துழைத்தால் வெற்றி என்கிற நிலைமைதானே தொடர்கிறது. அது ஏன்?

2000 ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் அமெரிக்காவுக்கு 39 தங்கப் பதக்கங்களும் சீனாவுக்கு வெறும் 28 தங்கப் பதக்கங்களும்தான் கிடைத்தன. 2004-ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சீனா 32 தங்கப் பதக்கங்களை வென்று, 35 பதக்கங்களை வென்ற அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது. இப்போது 46 தங்க மெடல்களுடன் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம் சீன அரசு விளையாட்டு வீரர்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும், ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளும்தான்.

முழு மூச்சுடன் அரசு இயந்திரம் செயல்பட்டு, அடுத்த ஒலிம்பிக்கில் தங்க மெடல்களைக் குவித்தே தீர்வது என்கிற முனைப்புடன் செயல்பட்டால் சீனாவால் செய்ய முடிந்த சாதனையை நம்மாலும் செய்து காட்ட முடியும். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் நமது மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் ஒரு திருப்புமுனையாக அமையக்கடவது!

Friday, August 22, 2008

டாக்டர் மாத்ருபூதத்தின் செக்ஸ் ஜோக்ஸ் : 2004ம் ஆண்டு இட்லிவடையில்...

டாக்டர் மாத்ரூபூதத்தை தெரியாதவர்களே இருக்க முடியாது. அவரது அனுபவக்குறிப்புகளை இட்லிவலை வலைப்பூ கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை நீங்களும் படியுங்களேன்.


அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். படிச்சிட்டு கமெண்ட் பொட்டியில ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க சாமீ .........



டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடைய "புதிரா புனிதமா" என்ற நிகழ்ச்சியை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

கடந்த சில ஆண்டாக உடல் நலம் குன்றியிருந்த டாக்டர் மாத்ருபூதம், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கும்பகோணத்தில் நடந்த பள்ளிக் கூரை தீ விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு டாக்டர் மாத்ருபூதம் நேரில் சென்று மன நல மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தி வந்தார். இதன் அடுத்தக் கட்டமாக உடல் நோய்களை பொருட்படுத்தாமல் மீண்டும் கும்பகோணம் சென்று இலவச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தினார். அப்போது அவருக்கு உடல்நிலை மோசமானது. எனினும் முகாமை நடத்தி முடித்து விட்டு, சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று காலை 5.15 மணிக்கு அவர் வீட்டிலேயே காலமானார்


அவர் வாழ்வில் ஏற்பட்ட பல நகைச்சுவையான சம்பவங்கள் சில இந்த பதிவில் இடம் பெற்றிருக்கிறது

* - *
நான் செக்ஸ் எஜுகேஸனைப் பற்றி தொடந்து 6 ஆண்டுகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தினேன் என்பது தமிழறிந்த எல்லோருக்கும் தெரியும். அப்போது சில விவகாரமான கேள்விகள் நேயர்கள் கேட்பார்கள்.

ஒருவர் எழுதியுருந்தார், "உங்களுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதாகிறது. உங்களை நேர்காணல் செய்யும் லேடி டாக்டர் அழகான இளம் வயது பெண்மணி அவரை வைத்து கொண்டு நீங்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது உங்களுக்கு நியாமாக இருக்கிறதா? எனக் கேட்டார். நான் உடனே சொன்னேன். "இந்த வயதில் பேசத்தான் முடியும்" வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் ? என்றேன். அந்தப் பதில் எல்லோருக்கும் பிடித்திருந்தது என்பது தான் இதில் உள்ள விஷயம்.

* - *
ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

* - *
சில இடங்களில் துக்கமாக இருக்கும் போது கூட சிரிப்புக்கான சந்தர்ப்பம் எற்படும்படி சில விஷயங்கள் நடப்பதுண்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை எனக்கு சிறுநீரகங்கள் பாதிக்கபட்டிருக்கிறது. "Acuterenal Failure". அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், நான் என்னுடைய மூட்டுவலிக்காக, பல வருடங்களாக அவ்வப்போது வலி நிவாரண மாத்திரைகள், "NSAID (Non Steroid Anty Inflammatory drug) என்று சொல்வோம்.

அதை சாப்பிட்டு வந்ததால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருக்கலாம் அதோடு பல வருடங்கள், சக்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதாலும் எற்பட்டிருக்கலாம் என பல காரணங்களைச் சொன்னார்கள். எனவே என்னை எமர்ஜென்சியாக அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கீழே Emergency Room இருந்தது, என்னை பரிசோதித்த இளம் டாக்டர்கள்,

"டாக்டர் மாத்ருபூதம் எவ்வளவு பெரிய மனநல மருத்துவர், எவ்வளவு சேவை செய்கிறார், Sex Education-க்கொல்லாம் எவ்வளவு பாடுபட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியிருக்கிறார் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றனர். உடனே நான் அக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். விதியென்று ஒன்று உள்ளது. அதற்குமேல் இழுத்துப் பறித்துக் கொண்டு நான் இருக்க விரும்பவில்லை" என்றேன் அதற்கு,

"உங்களது தைரியம் எல்லோருக்கும் வராது, Any how உங்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் நர்ஸிடம், Send him up அதாவது மேல்மாடியில் இருக்கும் Critical care யூனிட்டிற்கு அனுப்பு என்று சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மறுபடியும் மாஸ்க்கை எடுத்துவிட்டு நான் சொன்னேன். நான் சைக்யாரிஸ்ட் எனக்கு புரிகிறது. நிங்கள் எல்லோரும் வந்திருக்கும்போது Send him up என்று சொல்லாதீர்கள்.கொஞ்சம் நாள் கழித்து போகும் உயிர் இன்றே போய்விடும்" என்றேன்.

அவரும், சாரி சார் என்றார். சாரி சொல்லாதீர்கள் இதையே நகைச்சுவையாக பார்க்கும் பக்குவத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று நான் சொன்னேன்.

மேலும் அவர் சொன்னார் உங்களுக்கு மூச்சு இழுக்கிறேதே அஸ்துமா இருக்கிறதா ? எனக் கேட்டார். நான் மறுபடியும் ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "அது ஒன்றுதான் எனக்கு இல்லை" என்றேன்.

"டாக்டர் உங்களுக்கு சாவே வராது" என்று சொன்னார் அவர். "பரவாயில்லை நீங்கள் சிறுவயதாக இருந்தால்கூட உங்கள் வாழ்த்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே போனேன்.

மேலேபோய் இரத்த பரிசோதனையெல்லாம் பண்ணினால், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், யூரியா எல்லாமே தாறுமாறாக இருந்தது. அதை பார்த்துவிட்டு அந்த டாக்டர், மிகவும் நல்லவர், மிகவும் வல்லவராகிய அவர் உங்கள் பையன்களுக்கு சொல்லியனுப்பிவிடுங்கள் என்றார். ( ஒருவர் லண்டனிலும், ஒருவர் அமெரிக்காவிலும் உள்ளார்). நான் சொன்னேன் "நான் இறந்தால் எப்படியும் வந்து விடுவார்கள், நான் ஒரு வேளை பிழைத்துக் கொண்டால் அவர்கள் வந்துபோவதே அவர்களுக்கு வேஸ்ட், அனாவசிய செலவு அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர் என் மனைவியிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

மேலும் நான் இறந்தால்கூட நீங்கள் அழக்கூடாது அழுகை என்றால் எனக்கு பிடிக்காது. பிறகு எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அப்படி சொன்னேனே தவிர அதற்காக நீங்கள் நரகாசுரன் செத்துவிடான் என்று பட்டாசெல்லாம் வெடிக்கக் கூடாது என்றேன். அப்போது என்னுடைய மனைவி உண்மையிலேயே அழ ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்றாள். "எனக்கு என்றும் ஆகக் கூடாதுன்னு எல்லோருக்கும் இருக்கும் ஆசை எனக்கு இருக்கு ஆனாலும் பரவாயில்லை என்ற நேக்கத்தில்தான் நான் இருக்கிறேன்" என்றேன்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், "One can be affraid of Morbility, but not moratality" மார்பிடிட்டி என்றால் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்க கூடாது. அதை கண்டு பயப்படுவேன் என்று சொன்னால், அவர்கள் தினம் தினம் செத்து கொண்டிருப்பார்கள். அது தான் உண்மை.

பகவான் கிருஷ்ணர் பயம் என்பது ஒரு பாவம் என்கிறார். ஏசுநாதர் அது ஒரு நோய் என்றார். ஆதிசங்கரர் புனரபிஜனனம், புனரபிமரணம். அதாவது "மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு" என்கிறார். அப்படி இருக்கும்போது நமக்கு மரண பயம் ஏன்?

நீங்கள் உடல்நலத்தில் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நன்றாக இருப்பதாக நினைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அப்போழுது நோய்கூட குணமாகும். "The conerrs die everyday, the Brane die only once" என்று சொல்வது எக்காலத்துக்கும் பொருத்தமக ஒரு விஷயம்.

(புன்னகை பூக்கள், கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17)
(படம்: தினமலர் )

உற்சாக பெண்களின் கலர்புல் கவர்ச்சி படங்கள்

கைக்குட்டை அளவு துணின்னு கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இதுல தான் பார்க்கிறேன் என்ற வாசகத்துடன் பதிவர் கிரி ஒரு பதிவையும் எழுதி கலர்புல் கவர்ச்சி படங்களையும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி வெளியிட்டிருக்கிறார். அதை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

கைக்குட்டை அளவு துணின்னு கேள்வி பட்டு (உதவி நமது தமிழ் பத்திரிக்கைகள்) இருக்கேன் , ஆனா இதுல தான் பார்க்கிறேன் :D இதுல வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகள், கீழ் !! இருந்து மேல் நோக்கி எடுக்க படுவதாக ஒரு குற்றச்சாட்டு வேற! கீழே உள்ள படத்துல அப்படி எடுத்தா என்ன வரும்னு எண்ணி பார்க்க தோன்றிய எண்ணத்தை ஏனோ கைவிட்டேன்.

பொடி ரசிகன் போல இருக்கு .. அட! கிரிக்கெட்டுக்கு ரசிகன்னு சொல்ல வந்தேங்க

IPL Twenty-20 போட்டிகள் நடைபெறும் இடத்தில் கிரிக்கெட் ரசிகர்களை !! உற்சாகப்படுத்த !!! அமெரிக்காவில் இருந்து அழகான பெண்களை இறக்குமதி ;) செய்து இருக்கிறார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் செய்யாமல் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கிரிக்கெட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இந்த கவர்ச்சி கன்னிகளை பார்த்து பிறந்த பலனை அடைந்து வருகிறார்கள். இதை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டம் ஆரம்பித்து விட்டது (சென்னை ரசிகர்கள் அப்பாடா! நல்லவேளை நம்ம போட்டி நல்லபடியா கண்களுக்கு குளிர்ச்சியா முடிந்தது என்று நிம்மதி அடைந்து விட்டார்கள்), இது குறித்து பாராளுமன்றத்திலும் பிரச்சனை எழுந்து விட்டது.

இது சரியா தவறா என்ற பிரச்சனை ஒரு புறம் இருக்கட்டும் இந்த மாதிரி பெண்களை வைத்து ரசிகர்களை !!! இழுத்து கோடி கோடியாக சாம்பாதிக்கும் அம்பானி, ஷாருக், விஜய் மல்லையா, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் BCCI யை என்னன்னு சொல்வது, நமது ரசிகர்களும் இது புரியாமல் (உண்மை கிரிக்கெட் ரசிகர்களை தவிர்த்து) பணத்தை கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டு இவர்கள் ஏமாந்தது தெரியாமல் இந்த பெண்களை பார்த்த அல்ப சந்தோசத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் என்றால் நம்ம ஹர்பஜன் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் அதனால் ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இதனால் அணித்தலைவர் யுவராஜ் சிங், ஹர்பஜன் மேல் கோபத்தில் இருப்பதாகவும் இதன் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறி உள்ளார்.

இவர்கள் லீக் போட்டிக்காக அடித்து கொண்டால், நாளை மற்ற நாடுகளுடன் நடக்கும் போட்டிகளில் எப்படி உண்மையான ஒற்றுமை உணர்வுடன் விளையாடுவார்கள். இதே மன நிலையுடன் இருந்தால், இவ்வாறு முறைத்து கொண்டால் நம்முடைய நாட்டின் மானம் தான் போகும். கடைசியில் ஹைடன் சொன்னதை (He is a mad boy) ஹர்பஜன் நிருபீத்து விட்டார் என்று நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது, அவரை நினைத்து அல்ல நம் நாட்டை பற்றி மற்ற நாட்டவர் என்ன நினைப்பார்கள் என்று.

Thursday, August 21, 2008

நண்பனை தேடும் செந்தழல் ரவி : ஒரு சுவாரஸ்ய பதிவு

நட்பு என்ற மூன்றெழுத்து மோகன சொல்லில் சிக்காதவர்களே இருக்க முடியாது. இதோ பதிவர் செந்தழல் ரவி தனது நட்பு குறித்து 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதனை படிக்கும்போது நமக்கும் நம் பள்ளிப்பருவம் நினைவுக்கு வருவது இப்பதிவின் ஸ்பெஷல் என்று சொல்லலாம். அட... நீங்களும் அதை படிச்சுத்தான் பாருங்களேன்.


எல்லாருக்கும் ஒரு ப்ரண்டு இருந்திருப்பாங்க...பள்ளி காலத்தில...கல்லூரி காலத்தில...காதலி இல்லாதவங்களை பார்க்கலாம்...சைக்கிள் டூ வீலர் இல்லாதவங்களை பார்க்கலாம்...படிப்பில் நாட்டம் இல்லாதவங்களை பார்க்கலாம்...ஆனால் ஒரு நன்பன் இல்லாதவங்களை பார்க்க முடியுமா ? அட சொல்லுங்க...முடியாதில்லையா....

அதுமாதிரி எனக்கும் ஒரு நன்பன் பள்ளிப்பருவத்தில....இப்போது கணக்கில்லாம நன்பர்கள்...அது வேற விஷயம்...ஆனால் பள்ளிக்காலத்தில நன்பர்கள் தோழனோ - தோழியோ எல்லோருக்கும் குறைவாத்தான் இருந்திருப்பாங்க...நானும் சராசரிதானே...அதனால ஒரே ஒரு ப்ரண்டு...

நான் நெய்வேலியில் படித்தபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தால்
கண்டிப்பாக இவன் இல்லாமல் சொல்லமுடியாது...

வருடம் 1987 ல் இருந்து ஒரே ஆண்டு தான் இவனுடன் படிச்சது...பெயர் எழிலரசன்...நெய்வேலி ப்ளாக் ப்ளாக்கா பிரிக்கப்பட்டிருக்கும்...இப்போ நோய்டா இருக்கமாதிரி...நான் இருந்தது இரண்டாம் ப்ளாக்...என்னோட அப்பா காவல் உதவி ஆய்வாளரா இருந்தது நெய்வேலியில் இருந்த ஒரே போலீஸ் ஸ்டேஷனில்...

எழிலரசனோட வீடு இருந்தது ஒன்பதாம் ப்ளாக்...இரண்டாம் ப்ளாக்குக்கும் ஒன்பதாம் ப்ளாக்குக்கும் இடையே இடைவெளி அதிகமில்லைங்க...ஒரே ஒரு தெரு தான்...நான் இருந்தது ஒட்டக்கூத்தர் சாலை...அவன் வீடு எங்க தெருவில் இருந்து வெளிவந்து குட்டியா ஒரு பாலம் கடந்து, வளைவு திரும்பினா சிதம்பரம் சாலை...அதில் இரண்டாவது வீடு...



இந்த படத்தில் ஆறு 'பி' பிரிவின் பதாகையை தாங்கி அமர்ந்திருப்பதுதான் எழில்...எங்கெ மேரி டீச்சர் பக்கத்தில்...மேரி டீச்சர்...மேரி டீச்சருக்கு அந்த பக்கம் உட்கார்ந்து இருப்பது பர்ஸ்ட் ரேங்கை தவிர வேற எந்த ரேங்கையும் வாங்காத ராகவன்...எழில் எப்போதும் இரண்டாவது ரேங்க்தாரி..இடது பக்கம் கீழே பெஞ்சில் நான் இருக்கேன்...போட்டி எல்லாம் வைக்காமல் நானே சொல்லிடுறேன்...இடப்பக்கம் இருந்து மூன்றாவது...ஒரு விளம்பரதாரி தன்னோட வாட்சை என் மேலே போட்டு படம் காட்டுது பாருங்க...எனக்கு வலப்புறம் வெள்ளை பேண்ட்டில் ஜஹாங்கீர் பாய்(boy)..இன்னும் எல்லார் பெயரையும் சொல்ல ஆரம்பிச்சா மவுஸாலேயே அடிப்பீங்க...

நானும் எழிலும் எப்படி சந்திச்சோம் அப்படின்னுல்லாம் நியாபகம் இல்லை..ஆனால் நாங்க ப்ரண்ட்ஸ்...காரணம் என் வீட்டுக்கு பக்கத்தில் அவனோட வீடு இருந்ததும் என்னோட குட்டி சைக்கிள்ல அவனுக்கு ட்ராப் கொடுத்ததும் கூட இருக்கலாம்...மேலுக்கு சொல்லனும்னா எங்கப்பா போலீஸ் அப்படீன்னு சொல்லி வம்பு செய்யவந்த நாதாரிகளை நான் பயமுறுத்தி அடக்கினதும் ஒரு காரணமா இருக்கலாம்...அதுக்கு ஏத்தமாதிரி அவரும் அப்பப்போ யூனிபார்மோட வந்து ஒரு லுக் விட்டுட்டு போறதாலயும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி அவனுக்கு இருந்திருக்கலாம்...காரணம் எங்க ஸ்கூல்ல தூரத்தில இருந்து வந்து படிக்குற பசங்க - கொஞ்சம் அடாவடியா இருப்பானுங்க...

நாங்க செய்த சின்ன சின்ன குறும்புகள் ஏராளம்..பள்ளியில் குடிநீர் பைப்பருகில் மொத்தமாக வளர்ந்திருக்கும் தொட்டாச்சினுங்கி செடிகள் எல்லாத்தையும் சுருங்க வைக்கனும் என்று விளையாடி மதியம் வகுப்புக்கு போகாம மேரி டீச்சர்கிட்ட அடிவாங்கியது மிகவும் சிம்பிள்..

அப்போ BIG FUN பபிள்கம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான நேரம்...எவனப்பாத்தாலும் பபுள்கம்ல முட்டையை விட்டுக்கிட்டு திரிஞ்சானுங்க...ஒவ்வொரு பபிள்கம்லயும் கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா படம் இருக்கும், அதுக்கேத்தமாதிரி ரன்னும் போட்டு இருப்பாங்க அந்த படத்தில்..கபில்தேவுக்கு சிக்ஸர், அஸாருக்கு நாலு..இதெல்லாம் சேர்த்து வெச்சா கிரிக்கெட் பேட் தர்றதா ஒரே பேச்சு...நானும் என்னால முடிஞ்சவரைக்கும் சேர்த்து பார்த்தேன்...கடைசிவரைக்கும் ஒன்னும் தேறல....எனக்கு தெரிஞ்சு எவனும் பேட்டு இல்லை, ஒரு ஸ்டம்பு கூட வாங்கி சரித்திரம் இல்லைன்னாலும், நானும் ஏதோ சேர்த்துக்கிட்டிருந்தேன்...

இதுல ஒரு மேட்டர்...எங்க கையில காசு இல்லாதப்போ BIG FUN வாங்க என்ன செய்யறது ? இதில்தான் நம்ம எழிலோட குறும்பு..கையில பத்து பைசாவை வெச்சிக்குவோம்...கடையில் ஒரு குறிப்பிட்ட மிட்டாய் டப்பா கடைக்காரர் திரும்பி எடுக்கிறமாதிரி இருக்கும்...BIG FUN டப்பா - இது அதிகமா ஓடுற எப்.எம்.சி.ஜி புராடக்ட் - அப்படீங்கறதால - முன்னாலியே இருக்கும்..கடைக்காரர் திரும்பி பூமரை எடுக்கும் அந்த முக்காலே மூனுவீசம் செக்கண்ட்ல எழில் BIG FUN டப்பாவை திறந்து - கொத்தோட BIG FUN ஐ அள்ளி - பாக்கெட்ல போட்டுக்கிட்டு - திரும்பி டப்பாவை மூடிடுவான்...எழில் வீட்ல அவனோட அப்பா ரொம்ப செல்லம்...தினமும் குறைந்தபட்சம் 50 பைசாவாவது கொடுப்பார்...ஆக பலமுறை நாங்க BIG FUN ஐ மொத்தமா திம்போம்...

உங்களை அதிகம் போரடிக்க விரும்பல...

நான் என்னோட அதிகபட்ச குறும்பு காரணமா - கடலூர் புனித வளனார் பள்ளி - உள்விடுதியில சேர்க்கப்பட்டேன்...அப்பா அடிக்கடி ( தண்ணி இல்லாத காட்டுக்கு) ட்ரான்ஸ்பர் ஆகிறதும் ஒரு காரணம்...அங்கேயே தங்கி படிக்கும்போது வீட்டுக்கு லெட்டர் போடுவேன்...எழில் வீட்டுக்கும் லெட்டர் போடுவேன்...அவனும் எனக்கு நிறைய அட்வைஸ் செய்து லெட்டர் போடுவான்...எனக்கு லீவ் கிடைக்கும்போது எல்லாம் ( வருஷத்துக்கு இரண்டு முறைதான் )அவங்க வீட்டுக்கு பஸ்புடிச்சி போய் பார்ப்பேன்...அவங்க அம்மா சொல்லுவாங்க...எங்க வீட்டுக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் நீதான் என்று..நானும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்..எனக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் உங்க பையந்தான்..என்று...ஒரு முறை அவனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்குன்னு லெட்டர் போட்டான்..நான் கிளம்பி ஒரு பிஸ்கெட் பாக்கெட்டோட அவங்க வீட்டுக்கு போனேன்..( எனக்கு லீவ் ஒரு வருடம் கழித்து தான் கிடைத்தது)...எழில் அம்மா சொன்னாங்க...டேய்...பெரியாளாயிட்டடா நீ...என்று...நான் மையமாக சிரித்து வைத்துவிட்டு, எழில் வீட்டு தோட்டத்தில் நெல்லிக்காய் அடிக்க ஓடினேன்...

அப்படியே ஒரு பத்து வருடத்தை கூட்டிக்கொள்ளுங்க...என்னுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...அவன் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...போனில்லாத அந்த காலத்தில் எப்படியாவது மாதம் ஒரு போஸ்ட் கார்ட் போட்டுவிடுவான்...நான் ப்ள்ஸ் டூ படித்த காலத்தில் எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்க்காக பல லெட்டர் போட்டான்..இன்னும் என் தனிப்பெட்டியில் இருக்கிறது...அவன் சீர்காழியில் டிப்ளமோ சேர்ந்தான்..பிறகு குடும்பத்தில் ஏற்ப்பட்ட ஒரு மாபெரும் பிரச்சினையில் ( அது பற்றி அவன் அனுமதியின்றி எழுதுதல் முறையற்றது) - குடும்பத்தை விட்டு வெளியேற நேர்ந்தது...பிறகு வேலூரிலோ சேலத்திலோ ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் நிறுவனத்தில் இணைந்ததா தகவல் கிடைத்தது...நானும் கல்லூரிப்படிப்புக்கு போயிட்டேன்..

கல்லூரி இறுதி தேர்வுல ஒரு பாடத்துல பெயில்...ஒரு ஆண்டு வீட்ல கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கவேண்டிய கட்டாயம்..அப்படியே ஊர் சுத்திக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருந்தபோது ஒரு நாள் திடீர்னு வீட்டுக்கு வந்தான்...

என்னடா என்று விசாரித்தால், தான் ஓசூரில் பாகாலூர் ரோட்டில் ஒரு ஷேர் புரோக்கரேஜ் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அங்கேயே தங்கியிருப்பதாகவும் சொன்னான்...அடுத்த விஷயம் சொன்னதும் நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்...அங்கேயே வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் வேறு சாதி என்பதால் அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள மறுப்பதாகவும், என்னோட அப்பா போலீஸ் துறையில் இருப்பதால் அவரிடம் சொல்லி தன்னோட கல்யாணத்தை நடத்திவைக்குமாறும் கேட்டான்...

எனக்கு உள்ளூர உதறல்...நாடார் கடையில் தம் அடித்து வைத்த இருவது ரூபாய் கடனை எப்படி அடைப்பது என்று பல திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த ( கடை இருக்கு ஏரியா பக்கம் போறதில்லை) நான் எப்படி இந்த விஷயத்தில் அவனுக்கு உதவமுடியும் என்று தெரியாமல் மண்டை காய்ந்தேன்...என்னோட அப்பாவிடம் இதுபோன்ற விஷயங்களை பேசும் தைரியமும் கிடையாது...பெயில் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறவனுக்கு என்ன செல்வாக்கு இருக்கமுடியும்...அவரோட பத்து சைஸ் செருப்பை மூஞ்சிக்கு அருகில் பார்க்கத்தான் முடியும் என்ற முன்முடிவுக்கு வந்திட்டேன்..ஒருவேளை சொல்லி இருந்தால் கல்யாணத்தை அருமையாக நடத்தி வைத்திருப்பாரோ என்னவோ...ஸ்டேஷன்ல பல கல்யாணம் நடத்திவெச்சிருப்பாரு தானே..பொது அறிவும் கிடையாது...பையில் காசும் கிடையாது...உள்ளூர தைரியமும் கிடையாது...அவனும் சீக்கிறத்திலே புரிந்துகொண்டான்...சரிடா....நீ உன்னோட அப்பாகிட்ட சொல்ல முயற்சி செய்...நான் மாயூரத்தில இருக்க எங்க சித்தப்பாவிடம் போறேன் என்று போயே போய்விட்டான்...அதுதான் நான் கடைசியாக பார்த்தது...

அப்படியே கொஞ்சம் பார்ஸ்ட் பார்வர்ட்...அதுக்கு பிறகு சென்னைக்கு போய் - வெட்டியா திரிஞ்சு - வாழ்க்கைப்பாடத்தை தி நகர் ரங்கநாதன் ஸ்ட்ரீட் பி.ஆர்.எஸ் மேன்ஸனில் படிச்சு, பசியை அனுபவிச்சு..ஆங்கிலம் பேச பழகி - ஒரு வழிகாட்டி மூலமா வேலைக்கு போய் - மைக்ரோஸாப்ட் டெக்னாலஜியில கோடிங் எழுதி - ரிமோட் டெஸ்க்டாப்ல யூ.எஸ்ல இருக்க கணிப்பொறியை திறந்து வேலைசெய்து - பாம் பாக்கெட் பிஸிக்கு மோட்டரோலா கோடுவாரியரில் கோடிங் எழுதி - கிளையண்டோட சேட் செய்து - சேலரி ஹைக் - யாகூ மெஸஞ்சர் என்று ஜல்லியடித்து - பெங்களூர் டெலெபோனிக் இண்டர்வீயு தேறி - ஸாஸ்கன் நிறுவணத்தில் இணைந்து - வாழ்க்கையை திரும்பி பார்க்கிற அளவுக்கு போனபோது ஐந்து வருடம் கடந்துவிட்டிருந்தது...

திடீர்னு பழைய விஷயங்களை எல்லாம் புரட்டிக்கிட்டிருக்கும்போது எழிலோட ஒரு லெட்டர்..பிரிக்காமல் இருந்தது...தேதி பார்த்தால் 1999 ஆகஸ்டில் ஒரு தேதி...அம்மா அம்மா என்று அலறி..ஏம்மா இந்த லெட்டரை எனக்கு கொடுக்கல்ல...என்று எகிறியபோது...டேய், அது நீ காலேஜ்ல இருக்கும்போது வந்ததுடா...நீ வரும்போது கொடுக்கலாமேன்னு பெட்டியில் போட்டுவெச்சிருந்தேன்...என்றார்...

அவசரமாக பிரித்தபோது, தான் ஓசூரில் பணியில் இருப்பதையும், ஒரு முக்கியமான விஷயமாக என்னை சந்திக்கவேண்டும் என்றும், தன்னோட ஆபீஸ், வீட்டு முகவரி எல்லாம் எழுதி இருந்தான்..அதாவது இந்த கடித்தத்தை என்னை வந்து கடைசியாக சந்திக்கும் முன் எழுதி இருக்கிறான்...

அடுத்த வீக் எண்ட்...பைக்கை எடுத்துக்கிட்டு ஒரு பத்து லிட்டர் பெட்ரோல் அடிச்சுக்கிட்டு கிளம்பிட்டேன் ஓசூருக்கு...முதலில் பாகாலூர் ரோடு...அவன் வேலைசெய்த ஷேர் ட்ரேடிங் (ப்ரோக்கிங்) நிறுவனம்...இன்னும் இயங்கிக்கொண்டுதானிருந்தது...ஒரே ஒரு ரிசப்சனிஸ்ட் மட்டும் இருந்தார்...

எழிலா...ஆமாம், பழைய ஸ்டாப்...மேரேஜ் கூட இங்கேயேதான் இல்ல..ஆனா அவர் டீடெய்ல்ஸ் எதுவும் இல்லையே..நீங்க வேணா சார் வருவார்...வெய்ட் பண்ணி பார்த்து கேட்டுக்கோங்க..என்றார்...

இன்னொரு ஸ்டாப் உள்ளே நுழைந்தார்...இந்த கம்பெனியில இருந்து நெறைய பேர் பெங்களூர்ல தான் சார் ஜாய்ன் பண்ணாங்க...நீங்க பேங்களூர்ல விசாரிக்கலாமே...

நான் அங்கே இருந்துதான் மேடம் வர்றேன்...என்றேன்..சுருக்கென..

அந்த நிறுவனத்தின் 'சார்' வருவார் என்று காத்திருந்தது தான் மிச்சம் மாலை மங்கும் வரை...வரவேயில்லை...மொபைல் நெம்பர் சுவிட்சுடு ஆப் என்ற தகவலை கொடுத்தது..வீட்டையாவது தேடலாமே என்று போனபோது ஏமாற்றத்தின் உச்சத்துக்கே போனேன்..பதினாலு சீயா..அது பழைய நெம்பர் சார்...புது நெம்பர் இருக்கா...அஞ்சு வருஷம் முன்னால இங்கெ நாலுவீடுதான் சார் இருந்தது...இப்போ ஆயிரம் வீட்டுக்கு மேல இருக்கே என்றார் கொஞ்சம் விவரம் அறிந்தவர்...

ஆயாசமாக இருந்தது...கொஞ்சம் சுத்தி விசாரித்து பார்க்கலாம் என்று பைக் நுழையாத தெருவெல்லாம் போய் பதினாலு சீயை தேடி இருட்டும் வரை சுற்றியதில் கடைசியில் இரண்டு மணி நேரம் முன்பு விசாரித்தவரிடமே திரும்பி கேட்டேன்...

சார் இன்னும் நீங்க தேடிக்கிட்டேவா இருக்கீங்க...கடையாண்ட கேட்டீங்களே...நாந்தானே சொன்னேன்..என்றார்...

திரும்ப வீட்டுக்கு வந்து தடாலென கட்டிலில் விழுந்தபோது ஏனென்று தெரியாமல் சிறிய கண்ணீர்துளி...அதை விடுங்க...உங்களை எல்லாம் ரொம்ப போரடிச்சுட்டேனா...

ஒரு ரெக்வஸ்ட்...நீங்க ஷேர் மார்க்கெட், பங்கு சந்தை, நெய்வேலி, மாயூரம், பெங்களூர், எங்கேயாவது எழிலரசன் அப்படீங்கறவரை பார்த்தா...எக்ஸ்கியூஸ் மீ...உங்களுக்கு ரவியை தெரியுமா ? நெய்வேலியில உங்களோட படிச்சாரே..அப்படீன்னு கேளுங்க...

கருணாநிதியின் மர்ம கவிதையில் சிக்கியவர் யார்?



"சோதனை மேல் சோதனைன்னு ம.தி.மு.க., வில் நீக்கப்பட்ட எம்.பி., புலம்பிட்டிருக்காரு பா...'' என ஆரம்பித்தார் அன்வர்பாய். "கட்சியை உடைக்க 10 கோடி, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு 10 கோடின்னு ம.தி.மு.க., ஆட்களே பொறாமைப்பட்டுகிட்டுருக்காவ... அவருக்கு என்ன வே சோதனை...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. ""ம.தி.மு.க.,வில் நீக்கப்பட்ட எம்.பி., கணேசன், தஞ்சையில் நடந்த சிவாஜி சிலை திறப்பு விழாவுல பேசும்போது, தி.மு.க., தலைவரை ஓவரா புகழ்ந்து பேசிட்டே இருந் தாராம் பா... கூட்டத்துல இருந்தவங்க எல்லாம் எரிச்சலாகி, கைதட்டியே அவர பேச விடாம பண்ணிட்டாங்களாம்...


""ஒரு காலத்துல தஞ்சை மாவட்டத்தையே தனது பேச்சால கட்டி போட்டவர் நிலைமை இப்படி ஆயிடுச் சேன்னு அவர் ஆதரவாளர்கள் நொந்து போயிட்டாங்க பா... அடுத்ததா, தி.மு.க., தலைமையை கேட்காமலேயே, "ஒரு லட்சம் தொண்டர்களோடு தி.மு.க.,வில் இணைவோம்'னு வேற தன்னிச்சையா அறிவிச்சிருந்தாரு பா...


"ஆனா, "இப்ப இணைப்பு வேண்டாம்; தேர்தலப்போ பார்த்துக்கலாம்'னு தி.மு.க., தலைவர் திடீர் "தடா' போட்டுட்டாராம்... அதனால, என்ன செய்றதுன்னு தெரியாம புலம்பிட்டிருக்காரு பா...'' என முடித்தார் அன்வர்பாய்.


""தைலாபுரம் தோட்டத்துக்கு மூன்றாவது அணி தலைவரு ஒருத்தரு வந்தாராம் வே...'' என்றார் அண்ணாச்சி.


""மாயாவதியாங்க...'' என சிரித்தபடி கேட்டார் அந்தோணிசாமி.


""மகேந்திரகவுடுன்னு ஒரு எம்.எல்.ஏ., வே... சந்திரபாபு நாயுடு கட்சியில பொதுச் செயலரா இருக்காரு... மாஜி மந்திரி... ராமதாசை சந்திச்சு 2 மணி நேரம் பேசினாராம்... மூன்றாவது அணியில பா.ம.க., பங்கேற்க அழைப்பு விடுத்தாகளாம்...


""சந்திரபாபு நாயுடு அனுப்பினதா கவுடு சொல்லியிருக்காரு... "தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கு; நல்ல முடிவா சொல்றேன்'னு பேசி, கவுடுவை ராமதாஸ் வழி அனுப்பி வைச்சாராம் வே...'' என முடித்தார் அண்ணாச்சி.


""அவாள் நமக்கு எப்போதும் சவால் தான்னு முதல்வர் ஒரு கவிதை எழுதிருந்தாரே... அது யாரை மனசுல வைச்சு எழுதிருக்கார்னு கண்டுபிடிச் சேளா ஓய்...'' என கேள்வி எழுப்பினார் குப்பண்ணா.


""பதவி கொடுத்ததா சொல்லிருக்கார்... அடிமரத்தை அசைச்சுப் பார்த்தேன்னு சொல்லிருக்கார்...


"அவாள்'னும் சொல்லிருக்கார்... இதைப் பற்றி கட்சி வட்டாரங்களிலும், எல்லா தரப்பிலும் பெரிய விவாதமே நடத்தி முடிச்சுட்டாவ...


""இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் பொருத்தமான ஆளா, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் தான் வர்றார்... அதனால, அவரைத் தான் முதல்வர் சொல்லிருக்கணும்னு எல்லா தரப்பும் ஏகமனதா தீர்மானிச்சுட்டாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.


""முதல்வர் மன வருத்தம் அடையற அளவுக்கு அவர் அப்படி என்ன செஞ்சார் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.


""சமீபத்துல நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்துல, "தி.மு.க., கூட்டணியில இருக்கவே கூடாது'ன்னு "ஸ்டிராங்'கா பேசினதா சொல்லுதாக... அதுமட்டுமில்ல, ரெட்டணை போலீஸ் தடியடி தொடர்பா விசாரிக்கப்போன ரங்கராஜன், அரசுக்கு எதிரா நிறைய பேசியிருக்கார்... எல்லாத்தையும் சேர்த்து வைச்சு தான் முதல்வர் கவிதை பாடிட்டார்னு நினைக்கேன்...'' என்றார் அண்ணாச்சி. பெஞ்ச் சிரித்தது.

தினமலர் டீக்க‌டை பெஞ்ச்

கவலையில் இயக்குனர்கள் டிஸ்மிஸ் ஆகும் ஹீரோயின்கள்

தமிழ்முரசு பத்திரிகையில் கோடம்பாக்கம் கோடங்கி டெய்லி ஏதாவது ரெண்டு கிசுகிசுவை சொல்லிட்டு போறார். நேத்து வெளியான கிசுகிசு. நீங்களும் படித்து கிசுகிசுவுல சிக்கியிருக்கிறவங்க யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.


நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

வில்வித்தை நடிகரு, நடிக்கிற படங்களோட ஹீரோயினுங்க அடிக்கடி டிஸ்மிஸ் ஆகுற கதை நடந்துகிட்டிருக்கு... நடந்துகிட்டிருக்கு... முதல்ல துரையான படத்துல பத்துபிரியாவ மாத்திட்டு கீரை நடிகைய போட்டாங்க, இப்போ கிரிவலம் சுத்துற ஊர்பேரு படத்துல வகில் நடிகைய நீக்கிட்டு பூஜை பண்ற காந்தி நடிகைய போட்டிருக்காங்களாம்... போட்டிருக்காங்களாம்... அடிக்கடி ஹீரோயின மாத்துறதுக்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்றாங்க... சொல்றாங்க... அதுல முக்கியமானது, வில்வித்தை நடிகரு ‘வாங்க பழகலாம்’னு கூப்பிட்டா, அதுக்கு மரியாதை கொடுக்காத நடிகைங்களுக்கு கல்தா கொடுத்துர்றாங்களாம்... கல்தா கொடுத்துர்றாங்களாம்...

பிரகாசமான வில்லன் நடிகரை நம்பி படம் இயக்குன மோகனராதா இயக்குனரும், ஜீவனான ஒளிப்பதிவாளரும் கவலையில இருக்காங்களாம்... கவலையில இருக்காங்களாம்... படத்தை முடிச்சுட்டு பிரகாச வில்லன் சிக்னல் கிடைக்காததால பொட்டியை பாதுகாத்துகிட்டிருக்காங்களாம்... பாதுகாத்துகிட்டிருக்காங்களாம்... பேமிலி பிரச்னை, தெலுங்கு ரெட்கார்டு, கால்ஷீட் சொதப்பல்னு இடியாப்ப சிக்கலுக்குள் இருக்குற பிரகாச வில்லனால, சொந்த படங்கள்ல கவனம் செலுத்த முடியலையாம்... முடியலையாம்...

சின்னத்திரையில இப்போ அதிக சம்பளம் வாங்குறது படையம்மா நடிகைதானாம்... நடிகைதானாம்... எபிசோடுக்கு அஞ்சு லகரத்தை அள்ளி வச்சாத்தான் மேக்-அப்பே போடுறாராம்... போடுறாராம்... சொந்த தங்கச்சி தயாரிப்பாளரா இருக்குற சீரியலுக்கும் அதே சம்பளம்தானாம்... அதே சம்பளம்தானாம்... படையம்மாவின் அதிரடி படையெடுப்பால் கற்பூ நடிகையும், தெய்வமான யானை நடிகையும் அதிர்ந்து போயிருக்காங்களாம்... அதிர்ந்து போயிருக்காங்களாம்...

Wednesday, August 20, 2008

சைக்கிள் பாகங்களின் பெயர்கள் தமிழில்...! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ் மொழியில் இன்சினியரிங் : மங்களூர் சிவா காமெடி என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவுக்கு மறுமொழியிட்ட பதிவர் சிவகாசி ஸ்ரீனிவாசன் அவர்கள் சைக்கிள் பாகங்களை தமிழில் கூற முடியுமா என்று கேட்டிருந்தார். நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் தேடித் தேடி பார்த்தேன். சிக்கிவிட்டது சைக்கிள் பாகங்களின் தமிழ் பெயர்கள்.

பதிவர் அண்ணா கண்ணன் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள் என்ற பெயரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதோ அந்த பதிவு. நீங்களும் படித்து தமிழ் பெயர்களை தெரிந்து கொள்ளுங்களேன்.


மூன்று மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சட்டப் பேரவையில் பேசினார். விவாதத்திற்கு இடையில் 'சைக்கிள் ஸ்பேர் பார்ட்சுகள் நூற்றினைத் தமிழில் சொல்ல முடியுமா?' எனக் கோ.க. மணியிடம் கேட்டார். அதற்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து வந்தேன். மிதிவண்டி உதிரி பாகங்களுக்கான ஆங்கிலப் பெயர்களை முதலில் பட்டியலிட்டேன்; http://www.firstflightbikes.com உள்பட பல்வேறு இணைய தளங்களில் தேடினேன். தொழிற்கருவிகள், துணைப் பொருள்கள், செய்யும் வேலைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டேன். பிறகு, அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் குறித்து ஆராய்ந்தேன். என் இளவல், எந்திரப் பொறியாளர் பிரசன்னா ஒத்துழைத்தார்.

உதிரி பாகங்களை அவற்றின் உருவம், செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழாக்கியுள்ளேன். பெரும்பாலும் காரணப் பெயர்களாக வருமாறு அமைத்துள்ளேன். மிதிவண்டியின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் உள்ளவற்றைத் தனித்தனியே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் அவை, ஒரே மாதிரியானவை அல்ல. முன்னதைப் பின்னதன் இடத்திலோ, பின்னதை முன்னதன் இடத்திலோ பயன்படுத்த இயலாது. எனவே, இரண்டும் தனித்தவை ஆகின்றன. ஆகவே, தனித் தனிப் பொருட்களாகக் காட்டியுள்ளேன். இப்போதைக்கு 153 சொற்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:

Tube - மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை
Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா? : கோவிகண்ணனின் அசத்தல் பதிவு

வலைபதிவர் கோவி கண்ணன்2006ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி எழுதியுள்ள ஒரு பதிவுதான். மிக மிக நல்ல பதிவாக எனக்கு தெரிந்ததால் அதனை இங்கே போட்டிருக்கிறேன். நீங்களும் அந்த பதிவை படிச்சிட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்களேன்.




தனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.


நியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்தான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.

உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.

ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் !

தமிழ் மொழியில் இன்சினியரிங் : மங்களூர் சிவா காமெடி

இவர் இன்றி வலையுலகம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எழுத்துக்களை எழுதித் தள்ளும் மங்களூர் சிவா கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஒரு காமெடி பதிவு போட்டுள்ளார். நெசமாலுமே காமெடியா இருக்கும் அந்த பதிவை நீங்களும் படியுங்களேன்.



தமிழ் மொழியில் இன்சினியரிங். ஐயா புன்னியவான் அரசியல் வியாதிகளே உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??

கீழ இருக்குறதெல்லாம் ஒரு பதிவுக்கு வந்த பின்னூட்டம் படிச்சி பாருங்க நல்ல நகைச்சுவையா இருக்கும்!!!
//
தாய்மொழியில் யாரும் சந்திரமண்டலம் வரை செல்ல முடியும்.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய எந்த நாட்டையும் உதாரணமாக பார்க்கலாம்.பெல்ஜியம்,லக்சம்பேர்க் போன்ற குட்டி நாடுகள்கூட தங்கள் சொந்த மொழியில்தான் போதிக்கின்றார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழி. இந்தியா வல்லரசாக கனவுகாண்பதில் தவறில்லை. அதற்கான முழுத் தகுதியும் உண்டு. ஆனால் இந்தியாவிற்கு இன்னும் தன்னம்பிக்கை இல்லை என்பது எனது ஆழமான கருத்து. தனது சொந்த மொழிகளை போதானை மொழியாகவும், நிர்வாக மொழியாகவும்இந்தியாவால் நடைமுறைப்படுத்தாத வரை இந்திய மொழிகள் எவ்வாறு வல்லரசு மொழியாகப் போகிறது? ஒரு வல்லரசு வேறு ஒரு நாட்டு மொழியில் நிர்வாகம் செய்யவும், போதிப்பதும் தன்மானக்குறைவாக இல்லையா? ஏன் பெல்ஜியம், லக்சம்பேர்க் போன்ற நாடுகளுக்கு உள்ள தன்மானமும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இல்லாமல் போனது?//

//
தமிழ் நாட்டில் மட்டுமே வேலை செய்ய பொறியியல் படிப்பதில்லை ,என்பதால் இது சாத்தியம் இல்லாதது, ஜப்பானில் ஜப்பானிய மொழியில் பொறியியல் படிக்கலாம் , காரணம் அவர்கள் மொத்த நாட்டுக்குமே அது மட்டும் தான் மொழி.

நம் நாட்டின் மொழியியல் குளறுபடிகள்.உதாரணமாக ஒன்று சொல்கிறேன்.automobile என்பதை +2 இயற்பியல் பாடப்புத்தகத்தில் தானியங்கிகள் என்று போட்டு இருப்பார்கள்.ஆனால் அதைப்படிக்கும் ஒரு மாணவன் அதை automatic என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இங்கே வலைப்பதிவில் கூட பலரும்(அல்லது சிலர்) auto என்பதை தானி என்று சொல்லி எழுதுகிறார்கள், அது "automobile" என்பதன் சுருக்கமான ஆட்டோ என்பதன் தமிழாக்கமே. ஆனால் தானி என்று சொன்னால் இங்கே பல காலம் வலைப்பதிவில் புழங்கியவர்களுக்கே புரியவில்லை. அதே போல தான் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்திற்கு போனாலும், ஆனால் அதற்கு ஏற்றார்ப்போல் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்படும் "ஷாக்" களை தாங்கிக்கொள்ள வேண்டும்.

பொறியியலை தமிழ் நாட்டில் தமிழில் படித்துவிட்டு ஆந்திராவில் கூட பின்னர் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்.ஏன் எனில் தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை!
//

//தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை//
India is union of states. இந்தியா என்பது பல தேசங்களின் கூட்டமைப்பு என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அந்தவகையில் தமிழ் மொழி ஒரு தேசத்திற்கான அதாவது ஒரு நாட்டிற்கான தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி என்பதும், தமிழ்மண்ணின் பொருளியல் தன்னிறைவு என்பதும் சத்தியமாக சாத்தியமே. எப்படி அடுத்த நாடுகளுடன் ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தக உறவு வைத்துக்கொள்கிறதோ அதேபோன்றே நாம் அண்டை தேசங்களான ஆந்திரா, கர்னாடகா போன்றவற்றுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். தமிழன் என்றைக்கு இந்தியக் கூட்டமைப்பில் இணைந்தானோ, அன்றையிலிருந்து தன்னம்பிக்கையையும் இழந்து தவிக்கிறான்.-
க. இளஞ்செழியன்
//

எப்பா இளஞ்செழியா அப்ப கர்னாடகாவுக்கு, ஆந்திராவுக்கு, கேரளாவுக்கெல்லாம் போக பாஸ்போர்ட் விசா எல்லாம் வேணுமா?


//வருடம் தோறும் பொறியியல் படிப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் வழி படித்தோர் சேர்கிறார்கள், எல்லாரும் தற்கொலை செய்துக்கொள்வதில்லையே, அப்படிப்பார்த்தால் நான் தான் முதலில் செய்துக்கொண்டு இருப்பேன்!//

//
தமிழ் ஒரு தேசிய மொழியா, இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை,ஹிந்திக்கே அரசு மொழி என்று தான் பெயர், தேசிய மொழி என்றல்ல.
//
//
இப்போ இந்தியாவில் ஆங்கிலத்தில் பொறியியல் படித்திருந்தாலும், இங்கிலாந்த், அமெரிக்கா என மேல் படிப்புக்கு போக GRE, TOFEL. IELTS, என்று தேர்வெழுதி அதில் ஆங்கிலப்புலமையை ஏன் காட்ட சொல்கிறான்.அவன் ஸ்டாண்டர்ட்கு நாம இல்லைனு தானே.இந்தியாவில் தமிழில் பொறியியல் படித்தால் அப்புறம் பிற மாநிலங்களுக்கு வேலைக்கு போக தனியாக ஒரு தேர்வு வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
//
இப்பவே இன்சினியரிங் என்ட்ரன்ஸ் அப்பிடித்தானே இருக்கு

//
பொறியியலை தமிழில் படிக்க வைத்தால் இப்போ புரியலைனு செத்தவங்க வெளில வேலைக்கு போக முடியலைனு சாவாங்களே அதுவும் தமிழ் வளர்ச்சி தானா?
//

//
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தாய்மொழி தமிழிலும் ஆந்திரர் தெலுங்கிலும்,கேரள நாட்டினர்மாலையாள மொழியிலும் படிக்க சாத்தியப் படும் பட்சத்தில்
//
அப்ப மீதி இருக்க 25 ஸ்டேட் ஆளுங்க ????

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.