இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Monday, September 1, 2008

தாயையும், மகளையும் கல்யாணம் செய்த காமுகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாயையும், மகளையும் கல்யாணம் செய்தி ஆசாமி வெட்டி கொல்லப்பட்டார்.


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(வயது55). இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு முருகம்மாள் என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார். அப்போது முருகம்மாளுக்கு வள்ளி என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. அதை தன் குழந்தை போல் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பால்பாண்டிக்கும் முருகம் மாளுக்கும் முருகன் என்ற மகன் பிறந்தான். முருகனும் வள்ளியும் அக்காள்- தம்பி முறையில் வளர்ந்து வந்தனர்.

ஆனால் காமுகனான பால்பாண்டிக்கு நாட்கள் செல்லச் செல்ல முருகம் மாள் மீதுள்ள மோகம் குறைந்து அவளது மகள் வள்ளி மீது மோகம் பிறந்தது. வள்ளி பெரியவள் ஆனதும் அவளையும் பால் பாண்டியே திருமணம் செய்து கொண்டார். இதில் பால்பாண்டிக்கும் வள்ளிக்கும் இரண்டு குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பால்பாண்டியின் முதல் மகன் முருகன் வளர்ந்து வாலிப வயதை அடைந் தான். அப்போது தான் அவனுக்கு தன் தந்தை தன் தாயையும் தன் அக்காவையும் திருமணம் செய்த விபரம் தெரிந்தது.

இதனால் முருகனுக்கு தன் தந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பால்பாண்டி அடிக்கடி தன் மனைவி வள்ளி (வயது27)யிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன்(24) "ஏன் இப்படி குடும்பத்தை நாசம் செய்தது மட்டும் அல்லாமல் அடிக்கடி தகராறு செய்கிறாய்'' என்று கூறி பால்பாண்டியை மிதித்து கீழே தள்ளினான். அதன் பிறகு அங்கு கிடந்த அம்மி கல்லை எடுத்து பால்பாண்டி தலையில் போட்டு நசுக்கினான். இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு கல்லிடைக் குறிச்சி போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தான் பால்பாண்டி, தாயையும், மகளையும் திருமணம் செய்து குழந்தையும் பெற்ற விபரம் தெரிய வந்தது.

இந்த சம்பவம் அந்தப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி : மாலைமலர்

4 comments:

லொடுக்குபாண்டி said...

1..2..3..testing

Anonymous said...

ada paaavi appa...

நல்லதந்தி said...

இந்த மாதிரி ஆசாமி அரபு நாட்டு முறைப் படி தண்டனைக் கிடைத்தால் என்ன தண்டனையாக இருக்கும்?.யோசித்து பதில் சொல்லுங்கள்!

Anonymous said...

சபாஷ் சரியாத தீர்ப்பு...

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.