இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Wednesday, September 3, 2008

தினமலர் மீது அட்டாக் : சன் குழுமத்துக்கு அல்வா செய்தி


தினமலர் பற்றிய செய்தி என்றாலே சன் குழுமத்துக்கு அல்வா கிடைத்ததுபோல இருக்கும் போல. ஏற்கனவே தினமலர் ரமேஷ் மீதான பெண் நிருபர் உமாவின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி கடந்த ஆண்டு வந்த போது வந்தபோது சன் டிவி, சன்நியூஸ், தினகரன், தமிழ்முரசு போன் சன் குழும நிறுவனங்கள் செய்திகளை போட்டு தினமலரை தாக்கி எழுதின. இப்போது வேலூர் தினமலரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கார்ட்டூன் படம் போட்டதற்காக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தையும், போலீசார் நடத்திய தடியடியையும் தினகரனில் முதல் பக்கத்தில் படத்துடன் போட்டு தாளித்து விட்டார்கள். இந்த செய்தியில் உள்நோக்கம் இருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க. (இது தினகரனில் வந்த செய்திதாணுங்கோ....)


நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட தினமலர் நாளிதழை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனால் வேலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனிதமான நோன்புக் காலமான ரமலான் மாதம் தொடங்கும் நேரத்தில் தினமலர் இவ்வாறு நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்ட சம்பவம் தமிழக முஸ்லிம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேலிச் சித்திரம் வெளியான திங்களன்று மாலையில் வேலூர் அடுத்த மேல்விஷாரத்தில் முஸ்லிம்கள் மறியல் செய்தனர். தொடர்ந்து, வேலூரில் உள்ள தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் நேற்று காலை வேலூர் தினமலர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம், தண்ணீரைபீய்ச்சியடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அதிரடிப்படையினரும் போலீசாரும் அங்கு குவிக்கப் பட்டனர்.

வேலூர் கலெக்டர் தர்மேந்திர பிரதாப் யாதவ், டிஐஜி சுந்தரமூர்த்தி, எஸ்பி அறிவுசெல்வம், டிஆர்ஓ சுகந்தி, ஏடிஎஸ்பி ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்தனர். போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக சொன்னார்கள். ஆனால், கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி கேலிச் சித்திரம் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
அப்போது திடீரென யாரோ கல் வீசினர். ஏடிஎஸ்பி ராமதாஸ் மீது ஒரு கல் விழுந்ததில், அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. உடனே போலீஸ் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். விரட்டி விரட்டி தடியடி நடத்தியதில் பலர் காயம் அடைந்தனர். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை தடியடி நடத்தி தாக்குவதா என்று முஸ்லிம் பெரியவர்கள் போலீச் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

தடியடியில் காயம் பட்டவர்களை ரத்தம் சொட்ட அழைத்துவந்த சிலர் அதிகாரிகளை சூழ்ந்து நின்று கோஷமிட்டனர். அவர்களை கலைந்துபோகுமாறு கலெக்டர் கூறினார். ஆனால், ‘இந்து - முஸ்லிம் இடையே பகையை தூண்டிவிடும் தினமலர் ஆசிரியரை கைது செய்ய வேண்டும்’ என்று கோஷமிட்டபடி கூட்டத்தினர் முன்னேறினர்.

இதற்கிடையே, மக்கான் சந்திப்பில் ஏராளமானவர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள் மீது கல் வீசப்பட்டது. பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ஒரு பஸ்சில் இருந்த 3 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதை தொடர்ந்து மக்கானிலும் போலீசார் தடியடி நடத்தினர். 25க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.

பின்னர், கலெக்டரும் உயர் போலீஸ் அதிகாரிகளும் தினமலர் அலுவலகத்துக்குள் சென்று, நிர்வாகிகளிடம் பேசினர். நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டவரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என கூட்டத்தினர் உறுதியாக இருப்பது பற்றி தெரிவித்தனர். இதற்கிடையே, வெளியே நின்றிருந்த கூட்டம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர்களை போலீசார் துரத்தி துரத்தி அடித்தனர்.
பிறகு, நபிகள் பற்றிய கார்ட்டூனை கொடுத்தவர் இவர்தான் என்று ஒரு ஊழியரை தினமலர் நிர்வாகிகள் போலீஸ் முன் நிறுத்தினர். அவரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவத்தால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெங்களூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ரோந்து வருகின்றனர்.

8 comments:

லொடுக்குபாண்டி said...

1..2...3..testing

Anonymous said...

yeah! its much better,

Unknown said...

தினமலர் ஒவ்வொரு தடவையும் முஸ்லிம்களை அசிங்க படுத்தியே வருது.

Anonymous said...

Rendume USELESS pepers thane....

Anonymous said...

:)

ers said...

மனதை தொட்டு சொல்லுங்கள்... தினமலர் மேல் இத்தனை கரிசணம் தேவைதானா...

துரோகம்...பாலிடிக்ஸ்...ரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி... இந்த வார்த்தைகள் தினமலர் அலுவலகத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைகள். தினமலர் மீது பற்றுள்ள நீங்களும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க கூடும் அப்படி இருந்தும் ஏன் தினமலர் மீது இத்தனை பரிவு?

Anonymous said...

Not a dinamalar.... that is called DINA MALAM

Aravinthan AS said...

ya really super

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.