இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Monday, September 1, 2008

‌நேரடி ரிப்போட்: தீயை அணைக்க போனவர்களின் 20 பேர் கதி...

சென்னை தியாகராயநகருக்கு பெருமை சேர்க்கும் ரங்கநாதன் தெருவுக்கு பெருமைசேர்க்கும் சரவணா ஸ்டோர்ஸ் கடையில தீ பிடிச்சிடிச்சின்னு கேள்விபட்டதும் பைக்க எடுத்துட்டு மயிலாப்பூருல இருந்து ஆழ்வார்பேட்டை வழியா தேனாம்‌பேட்டை சிக்னலை கடந்து பாண்டிபசார் வயழியா தி.நகர் போனேன். தேனாம்பேட்டை சிக்னலில் பச்சைவிளக்கு சிக்னலுக்கு நின்னப்பவே தூரமா கரும் புகை தெரிஞ்சிது.

வேகவேகமா தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்குற ஒரு நண்பரின் ஆபீஸ் முன்னால வண்டிய நிறுத்திட்டு உஸ்மான் ரோட்டுல நடந்து போனேன். ஒரே கூட்டம். அங்க ரங்கநாதன் தெருவுக்குள்ள போக யாரையுமே போலீஸ்காரங்க அனுமதிக்கல. சரவணா ஸ்டோர் கடையில வேலை பாக்குறவங்களும் அங்கங்க நின்னு பரிதாபத்தோட ‌வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க. அவங்ககிட்ட உள்ள யாராவது இருந்தாங்களான்னு கேட்டேன்.

ஆமா சார்... ராத்திரி பண்ணென்டு மணிக்குத்தான் கடைய அடைப்போம். காலையில 5 மணிக்குக்கெல்லாம் கொஞ்சம்பேர் கடையை தூக்குறதுக்கு உள்ள வருவோம். 25 பேராவது காலையில் கடைக்கு வந்துடுவோம். இன்னிக்கும் 25 பேர் வந்திருப்பாங்க. அவங்க கடைக்குள்ள போனாங்‌களான்னு தெரியல. இங்க எங்கயாது இருக்காங்களான்னு சுத்தி பாக்குறோம். தீ எரியறத பாத்தா பயமா இருக்கு. கடைக்குள்ள தீயை அணைக்க 20 போனாங்கன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க....ன்னு சொல்லி கண்ணீர் வடித்தார்.

உண்மையிலேயே கடைக்குள்ள சரவணா ஸ்டோர் கடை உழியர்கள் போனாங்களா? அவங்க நெலம என்னன்னு தெரியல. பிளாஸ்டிக், மர பொருள் எரிவதால் தீயை அணைக்க முடியாம போலீஸ் தவிச்சிட்டு இருக்கு. தீய முழுசா அணச்சாத்தான் முழு வெவெரமும் தெரியும்ன்னு போலீஸ்காரங்க சொல்றாங்க.

2 comments:

லொடுக்குபாண்டி said...

1...2...3... testing

Anonymous said...

நானு டிவில பாத்தேன். நல்ல புகைதான்

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.