இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Saturday, August 23, 2008

யூதர் பிராமணம் ஆறு ஒற்றுமை

கடந்த 2006 ஆகஸ்ட் 1ம் தேதி பதிவர் மருதநாயகம் யூதர் - பிராமணர் - ஆறு விளையாட்டு என்ற பெயரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த விளையாட்டை... சாரி... ஒற்றுமையை நீங்க கொஞ்சம் படிச்சு பாருங்களேன்.



1. இரு இனத்தவருமே தாங்கள் தான் உசத்தி என்றும் தாங்கள் உலகை ஆளப் பிறந்தவர்கள் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள்

2. இருவருமே தங்கள் மொழியை தேவ பாஷை என்று சொல்லிக் கொண்டு செத்துப் போன மொழிக்கு உயிர் கொடுக்க முக்கிக் கொண்டிருக்கிறார்கள்

3. இருவருமே தங்கள் இனத்திற்கு மற்றவர்களால் அச்சுறுத்தல் உள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்ததலும் உண்மையில் இவர்கள் தான் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்

4. இருவருமே கலப்பு மணத்தை எதிர்ப்பவர்கள் ஆனாலும் காலப் போக்கில் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்

5. இரு இனத்திலும் அதி புத்திசாலிகள் இருப்பார்கள். ஆனால் அந்த அறிவை அவர்கள் பயன்படுத்தும் விதம் தான் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்

6. இருவருமே மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும் பெரும்பான்மையாக இருப்பவர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்று தெரிந்து வைத்திருப்பார்கள்

குசேலன் வினியோகஸ்தர்களுக்கு ரூ.7 கோடி நஷ்டஈடு

ரஜினிகாந்தும், தயாரிப்பாளர்களும் சேர்ந்து குசேலன் படத்தை எடுத்த விநியோகஸ்தர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்கவிருப்பதாக தினகரனில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதனை நீங்களும் படியுங்களேன்.

குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாயமீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.

குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.

நஷ்ட ஈடு வழங்காவிட்டால், இனி ரஜினி படங்களுக்கும் கவிதாலயா படங்களுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம்Õ என தியேட்டர் அதிபர்கள் எச்சரிததனர். இந்நிலையில், குசேலன் தயாரிப்பாளர்கள் பாலசந்தர், விஜயகுமார், அஸ்வினி தத் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நஷ்ட ஈடு வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதாக வினியோகஸ்தர்களிடம் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பன்னீர் செல்வம், நேற்று மாலை ரஜினியை சந்தித்தார். அப்போது நஷ்ட ஈடு வழங்குவதை ரஜினியும் உறுதி செய்தார். இதன்படி, தமிழகம், ஆந்திராவில் படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு (பிரமிட் சாய்மீராவைத் தவிர்த்து) ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று தெரிகிறது. ரஜினி, தயாரிப்பாளர்கள், இயக்குனர் வாசு ஆகியோர் இந்த தொகையை வழங்குகின்றனர். ரஜினி மட்டும் ரூ.3 கோடி வழங்குகிறார் என்று கூறப்படுகிறது.

சாய்மீரா தயாரிப்பில் ரஜினி: குசேலன் படத்தை ரூ.60 கோடிக்கு வாங்கிய பிரமிட் சாய்மீரா நிறுவனம் உலகம் முழுவதும் இதை வெளியிட்டது. இந்நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெரிய தொகையாக இருப்பதால், பிரமிட் சாய்மீரா தயாரிப்பில் ஒரு படத¢தில் நடிக்க ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ரோபோ படத்துக்குப் பின் இதில் அவர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

திருப்புமுனை ஒலிம்பிக்ஸ் : தினமணி சாட்டையடி தலையங்கம்

இன்றைய தினமணியில் திருப்புமுனை ஒலிம்பிக்ஸ் என்ற தலைப்பிட்டு தலையங்கம் வெளியாகியிருக்கிறது. 108 கோடி பேர் கொண்ட ஒரு நாடு உலக அரங்கில் முன்னணியில் நிற்க முடியாததற்கு என்ன காரணம் என்று விரிவாக விவரித்திருக்கும் அந்த தலையங்கத்தை நீங்களும் படியுங்களேன்.



முப்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உலக விளையாட்டு அரங்கில் நாங்களும் இருக்கிறோம் என்று இந்தியா நிரூபித்திருக்கிறது. அபிநவ் பிந்த்ராவின் தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் சுஷில் குமாரும், குத்துச் சண்டையில் விஜேந்தர் சிங்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.

108 கோடி பேர் கொண்ட, ஒரு நாடு உலக அரங்கில் முன்னணியில் நிற்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது மனித வளத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத நமது சோம்பேறித்தனம்தான் என்று கூற வேண்டும். திறமைசாலிகளான சிறுவர்களைப் பள்ளிகளிலேயே அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையாக விளையாட்டுப் பயிற்சிகளை அளிப்பதற்கான முயற்சியில் சுதந்திர இந்தியா ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டவில்லை.

கேரளத்திலுள்ள கண்ணூர், தலைச்சேரி பகுதியினர்தான் விரும்பி சர்க்கஸ் நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுபவர்கள். இப்போதும்கூட அதே நிலைமைதான். அந்தக் குழந்தைகள் இயற்கையிலேயே உடலை வளைத்து வித்தை காட்டும் "ஜிம்னாஸ்டிக்ஸ்' விளையாட்டில் திறமைசாலிகளாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு முறையான தேர்ச்சி அளித்தால் உலக அரங்கில் இந்தியா ஜிம்னாஸ்டிக்கில் முதலிடம் வகிக்கும் என்று கடந்த 40 ஆண்டுகளாகக் கைவலிக்கப் பலரும் எழுதியதுதான் மிச்சம். அதற்கான முயற்சிகளை அரசு செய்யவில்லை.

கிரிக்கெட், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டிற்குத் தரப்படும் ஊக்கமும், உதவியும் ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, தடகளம், மல்யுத்தம், பளுதூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளுக்குத் தரப்படுவதில்லை.

வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் சுஷில் குமார் மற்றும் விஜேந்தர்சிங் போன்றவர்கள், தங்களது கிராமங்களில் கட்டாந்தரையில்தான் மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டு, வளர்ந்த பிறகு சர்வதேச சங்கங்களின் பந்தய மேடைகளைத் தரிசிக்கவே முடிந்திருக்கிறது. உலக வல்லரசாகப் போகிறோம் என்று மார்தட்டும் இந்தியாவில், முறையான பயிற்சி மையங்களும், பந்தய மைதானங்களும் மாவட்ட அளவில்கூட அல்ல, எல்லா மாநிலங்களிலும்கூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

2001ஆம் ஆண்டில் 0.06 சதவிகிதமாக இருந்த விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீடு இப்போதுதான் 0.97 சதவிகிதமாக ஆகியிருக்கிறது. அதாவது, மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடான ரூ. 7,85,583.70 கோடியில் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்காக நாம் ஒதுக்கீடு செய்யும் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ. 764 கோடி மட்டுமே! இந்த லட்சணத்தில் இந்தியா தங்கப் பதக்கங்களைக் குவிக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டால் எப்படி?

இன்னொரு விஷயம். துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, தடகளம், செஸ் போன்ற தனிநபர் விளையாட்டுகளில்தான் அவ்வப்போது இந்திய வீரர்களின் சாதனைகள் வெளிப்படுகின்றனவே தவிர, அணியாகப் போட்டியிடும் ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து போன்றவைகளில் நாம் ஏன் வெற்றி பெற முடியவில்லை? கிரிக்கெட்டில்கூட அதிர்ஷ்டம் ஒத்துழைத்தால் வெற்றி என்கிற நிலைமைதானே தொடர்கிறது. அது ஏன்?

2000 ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் அமெரிக்காவுக்கு 39 தங்கப் பதக்கங்களும் சீனாவுக்கு வெறும் 28 தங்கப் பதக்கங்களும்தான் கிடைத்தன. 2004-ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் சீனா 32 தங்கப் பதக்கங்களை வென்று, 35 பதக்கங்களை வென்ற அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது. இப்போது 46 தங்க மெடல்களுடன் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம் சீன அரசு விளையாட்டு வீரர்களுக்கு அளித்த ஊக்கமும், உற்சாகமும், ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளும்தான்.

முழு மூச்சுடன் அரசு இயந்திரம் செயல்பட்டு, அடுத்த ஒலிம்பிக்கில் தங்க மெடல்களைக் குவித்தே தீர்வது என்கிற முனைப்புடன் செயல்பட்டால் சீனாவால் செய்ய முடிந்த சாதனையை நம்மாலும் செய்து காட்ட முடியும். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் நமது மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் ஒரு திருப்புமுனையாக அமையக்கடவது!

Friday, August 22, 2008

டாக்டர் மாத்ருபூதத்தின் செக்ஸ் ஜோக்ஸ் : 2004ம் ஆண்டு இட்லிவடையில்...

டாக்டர் மாத்ரூபூதத்தை தெரியாதவர்களே இருக்க முடியாது. அவரது அனுபவக்குறிப்புகளை இட்லிவலை வலைப்பூ கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை நீங்களும் படியுங்களேன்.


அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். படிச்சிட்டு கமெண்ட் பொட்டியில ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க சாமீ .........



டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடைய "புதிரா புனிதமா" என்ற நிகழ்ச்சியை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

கடந்த சில ஆண்டாக உடல் நலம் குன்றியிருந்த டாக்டர் மாத்ருபூதம், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கும்பகோணத்தில் நடந்த பள்ளிக் கூரை தீ விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு டாக்டர் மாத்ருபூதம் நேரில் சென்று மன நல மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தி வந்தார். இதன் அடுத்தக் கட்டமாக உடல் நோய்களை பொருட்படுத்தாமல் மீண்டும் கும்பகோணம் சென்று இலவச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தினார். அப்போது அவருக்கு உடல்நிலை மோசமானது. எனினும் முகாமை நடத்தி முடித்து விட்டு, சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று காலை 5.15 மணிக்கு அவர் வீட்டிலேயே காலமானார்


அவர் வாழ்வில் ஏற்பட்ட பல நகைச்சுவையான சம்பவங்கள் சில இந்த பதிவில் இடம் பெற்றிருக்கிறது

* - *
நான் செக்ஸ் எஜுகேஸனைப் பற்றி தொடந்து 6 ஆண்டுகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தினேன் என்பது தமிழறிந்த எல்லோருக்கும் தெரியும். அப்போது சில விவகாரமான கேள்விகள் நேயர்கள் கேட்பார்கள்.

ஒருவர் எழுதியுருந்தார், "உங்களுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதாகிறது. உங்களை நேர்காணல் செய்யும் லேடி டாக்டர் அழகான இளம் வயது பெண்மணி அவரை வைத்து கொண்டு நீங்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது உங்களுக்கு நியாமாக இருக்கிறதா? எனக் கேட்டார். நான் உடனே சொன்னேன். "இந்த வயதில் பேசத்தான் முடியும்" வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் ? என்றேன். அந்தப் பதில் எல்லோருக்கும் பிடித்திருந்தது என்பது தான் இதில் உள்ள விஷயம்.

* - *
ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

* - *
சில இடங்களில் துக்கமாக இருக்கும் போது கூட சிரிப்புக்கான சந்தர்ப்பம் எற்படும்படி சில விஷயங்கள் நடப்பதுண்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை எனக்கு சிறுநீரகங்கள் பாதிக்கபட்டிருக்கிறது. "Acuterenal Failure". அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், நான் என்னுடைய மூட்டுவலிக்காக, பல வருடங்களாக அவ்வப்போது வலி நிவாரண மாத்திரைகள், "NSAID (Non Steroid Anty Inflammatory drug) என்று சொல்வோம்.

அதை சாப்பிட்டு வந்ததால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருக்கலாம் அதோடு பல வருடங்கள், சக்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதாலும் எற்பட்டிருக்கலாம் என பல காரணங்களைச் சொன்னார்கள். எனவே என்னை எமர்ஜென்சியாக அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கீழே Emergency Room இருந்தது, என்னை பரிசோதித்த இளம் டாக்டர்கள்,

"டாக்டர் மாத்ருபூதம் எவ்வளவு பெரிய மனநல மருத்துவர், எவ்வளவு சேவை செய்கிறார், Sex Education-க்கொல்லாம் எவ்வளவு பாடுபட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியிருக்கிறார் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றனர். உடனே நான் அக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். விதியென்று ஒன்று உள்ளது. அதற்குமேல் இழுத்துப் பறித்துக் கொண்டு நான் இருக்க விரும்பவில்லை" என்றேன் அதற்கு,

"உங்களது தைரியம் எல்லோருக்கும் வராது, Any how உங்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் நர்ஸிடம், Send him up அதாவது மேல்மாடியில் இருக்கும் Critical care யூனிட்டிற்கு அனுப்பு என்று சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மறுபடியும் மாஸ்க்கை எடுத்துவிட்டு நான் சொன்னேன். நான் சைக்யாரிஸ்ட் எனக்கு புரிகிறது. நிங்கள் எல்லோரும் வந்திருக்கும்போது Send him up என்று சொல்லாதீர்கள்.கொஞ்சம் நாள் கழித்து போகும் உயிர் இன்றே போய்விடும்" என்றேன்.

அவரும், சாரி சார் என்றார். சாரி சொல்லாதீர்கள் இதையே நகைச்சுவையாக பார்க்கும் பக்குவத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று நான் சொன்னேன்.

மேலும் அவர் சொன்னார் உங்களுக்கு மூச்சு இழுக்கிறேதே அஸ்துமா இருக்கிறதா ? எனக் கேட்டார். நான் மறுபடியும் ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "அது ஒன்றுதான் எனக்கு இல்லை" என்றேன்.

"டாக்டர் உங்களுக்கு சாவே வராது" என்று சொன்னார் அவர். "பரவாயில்லை நீங்கள் சிறுவயதாக இருந்தால்கூட உங்கள் வாழ்த்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே போனேன்.

மேலேபோய் இரத்த பரிசோதனையெல்லாம் பண்ணினால், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், யூரியா எல்லாமே தாறுமாறாக இருந்தது. அதை பார்த்துவிட்டு அந்த டாக்டர், மிகவும் நல்லவர், மிகவும் வல்லவராகிய அவர் உங்கள் பையன்களுக்கு சொல்லியனுப்பிவிடுங்கள் என்றார். ( ஒருவர் லண்டனிலும், ஒருவர் அமெரிக்காவிலும் உள்ளார்). நான் சொன்னேன் "நான் இறந்தால் எப்படியும் வந்து விடுவார்கள், நான் ஒரு வேளை பிழைத்துக் கொண்டால் அவர்கள் வந்துபோவதே அவர்களுக்கு வேஸ்ட், அனாவசிய செலவு அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர் என் மனைவியிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

மேலும் நான் இறந்தால்கூட நீங்கள் அழக்கூடாது அழுகை என்றால் எனக்கு பிடிக்காது. பிறகு எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அப்படி சொன்னேனே தவிர அதற்காக நீங்கள் நரகாசுரன் செத்துவிடான் என்று பட்டாசெல்லாம் வெடிக்கக் கூடாது என்றேன். அப்போது என்னுடைய மனைவி உண்மையிலேயே அழ ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்றாள். "எனக்கு என்றும் ஆகக் கூடாதுன்னு எல்லோருக்கும் இருக்கும் ஆசை எனக்கு இருக்கு ஆனாலும் பரவாயில்லை என்ற நேக்கத்தில்தான் நான் இருக்கிறேன்" என்றேன்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், "One can be affraid of Morbility, but not moratality" மார்பிடிட்டி என்றால் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்க கூடாது. அதை கண்டு பயப்படுவேன் என்று சொன்னால், அவர்கள் தினம் தினம் செத்து கொண்டிருப்பார்கள். அது தான் உண்மை.

பகவான் கிருஷ்ணர் பயம் என்பது ஒரு பாவம் என்கிறார். ஏசுநாதர் அது ஒரு நோய் என்றார். ஆதிசங்கரர் புனரபிஜனனம், புனரபிமரணம். அதாவது "மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு" என்கிறார். அப்படி இருக்கும்போது நமக்கு மரண பயம் ஏன்?

நீங்கள் உடல்நலத்தில் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நன்றாக இருப்பதாக நினைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அப்போழுது நோய்கூட குணமாகும். "The conerrs die everyday, the Brane die only once" என்று சொல்வது எக்காலத்துக்கும் பொருத்தமக ஒரு விஷயம்.

(புன்னகை பூக்கள், கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17)
(படம்: தினமலர் )

உற்சாக பெண்களின் கலர்புல் கவர்ச்சி படங்கள்

கைக்குட்டை அளவு துணின்னு கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இதுல தான் பார்க்கிறேன் என்ற வாசகத்துடன் பதிவர் கிரி ஒரு பதிவையும் எழுதி கலர்புல் கவர்ச்சி படங்களையும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி வெளியிட்டிருக்கிறார். அதை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

கைக்குட்டை அளவு துணின்னு கேள்வி பட்டு (உதவி நமது தமிழ் பத்திரிக்கைகள்) இருக்கேன் , ஆனா இதுல தான் பார்க்கிறேன் :D இதுல வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகள், கீழ் !! இருந்து மேல் நோக்கி எடுக்க படுவதாக ஒரு குற்றச்சாட்டு வேற! கீழே உள்ள படத்துல அப்படி எடுத்தா என்ன வரும்னு எண்ணி பார்க்க தோன்றிய எண்ணத்தை ஏனோ கைவிட்டேன்.

பொடி ரசிகன் போல இருக்கு .. அட! கிரிக்கெட்டுக்கு ரசிகன்னு சொல்ல வந்தேங்க

IPL Twenty-20 போட்டிகள் நடைபெறும் இடத்தில் கிரிக்கெட் ரசிகர்களை !! உற்சாகப்படுத்த !!! அமெரிக்காவில் இருந்து அழகான பெண்களை இறக்குமதி ;) செய்து இருக்கிறார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் செய்யாமல் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கிரிக்கெட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இந்த கவர்ச்சி கன்னிகளை பார்த்து பிறந்த பலனை அடைந்து வருகிறார்கள். இதை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டம் ஆரம்பித்து விட்டது (சென்னை ரசிகர்கள் அப்பாடா! நல்லவேளை நம்ம போட்டி நல்லபடியா கண்களுக்கு குளிர்ச்சியா முடிந்தது என்று நிம்மதி அடைந்து விட்டார்கள்), இது குறித்து பாராளுமன்றத்திலும் பிரச்சனை எழுந்து விட்டது.

இது சரியா தவறா என்ற பிரச்சனை ஒரு புறம் இருக்கட்டும் இந்த மாதிரி பெண்களை வைத்து ரசிகர்களை !!! இழுத்து கோடி கோடியாக சாம்பாதிக்கும் அம்பானி, ஷாருக், விஜய் மல்லையா, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் BCCI யை என்னன்னு சொல்வது, நமது ரசிகர்களும் இது புரியாமல் (உண்மை கிரிக்கெட் ரசிகர்களை தவிர்த்து) பணத்தை கொடுத்து அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டு இவர்கள் ஏமாந்தது தெரியாமல் இந்த பெண்களை பார்த்த அல்ப சந்தோசத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் என்றால் நம்ம ஹர்பஜன் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்து விட்டதாகவும் அதனால் ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இதனால் அணித்தலைவர் யுவராஜ் சிங், ஹர்பஜன் மேல் கோபத்தில் இருப்பதாகவும் இதன் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறி உள்ளார்.

இவர்கள் லீக் போட்டிக்காக அடித்து கொண்டால், நாளை மற்ற நாடுகளுடன் நடக்கும் போட்டிகளில் எப்படி உண்மையான ஒற்றுமை உணர்வுடன் விளையாடுவார்கள். இதே மன நிலையுடன் இருந்தால், இவ்வாறு முறைத்து கொண்டால் நம்முடைய நாட்டின் மானம் தான் போகும். கடைசியில் ஹைடன் சொன்னதை (He is a mad boy) ஹர்பஜன் நிருபீத்து விட்டார் என்று நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது, அவரை நினைத்து அல்ல நம் நாட்டை பற்றி மற்ற நாட்டவர் என்ன நினைப்பார்கள் என்று.

Thursday, August 21, 2008

நண்பனை தேடும் செந்தழல் ரவி : ஒரு சுவாரஸ்ய பதிவு

நட்பு என்ற மூன்றெழுத்து மோகன சொல்லில் சிக்காதவர்களே இருக்க முடியாது. இதோ பதிவர் செந்தழல் ரவி தனது நட்பு குறித்து 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதனை படிக்கும்போது நமக்கும் நம் பள்ளிப்பருவம் நினைவுக்கு வருவது இப்பதிவின் ஸ்பெஷல் என்று சொல்லலாம். அட... நீங்களும் அதை படிச்சுத்தான் பாருங்களேன்.


எல்லாருக்கும் ஒரு ப்ரண்டு இருந்திருப்பாங்க...பள்ளி காலத்தில...கல்லூரி காலத்தில...காதலி இல்லாதவங்களை பார்க்கலாம்...சைக்கிள் டூ வீலர் இல்லாதவங்களை பார்க்கலாம்...படிப்பில் நாட்டம் இல்லாதவங்களை பார்க்கலாம்...ஆனால் ஒரு நன்பன் இல்லாதவங்களை பார்க்க முடியுமா ? அட சொல்லுங்க...முடியாதில்லையா....

அதுமாதிரி எனக்கும் ஒரு நன்பன் பள்ளிப்பருவத்தில....இப்போது கணக்கில்லாம நன்பர்கள்...அது வேற விஷயம்...ஆனால் பள்ளிக்காலத்தில நன்பர்கள் தோழனோ - தோழியோ எல்லோருக்கும் குறைவாத்தான் இருந்திருப்பாங்க...நானும் சராசரிதானே...அதனால ஒரே ஒரு ப்ரண்டு...

நான் நெய்வேலியில் படித்தபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தால்
கண்டிப்பாக இவன் இல்லாமல் சொல்லமுடியாது...

வருடம் 1987 ல் இருந்து ஒரே ஆண்டு தான் இவனுடன் படிச்சது...பெயர் எழிலரசன்...நெய்வேலி ப்ளாக் ப்ளாக்கா பிரிக்கப்பட்டிருக்கும்...இப்போ நோய்டா இருக்கமாதிரி...நான் இருந்தது இரண்டாம் ப்ளாக்...என்னோட அப்பா காவல் உதவி ஆய்வாளரா இருந்தது நெய்வேலியில் இருந்த ஒரே போலீஸ் ஸ்டேஷனில்...

எழிலரசனோட வீடு இருந்தது ஒன்பதாம் ப்ளாக்...இரண்டாம் ப்ளாக்குக்கும் ஒன்பதாம் ப்ளாக்குக்கும் இடையே இடைவெளி அதிகமில்லைங்க...ஒரே ஒரு தெரு தான்...நான் இருந்தது ஒட்டக்கூத்தர் சாலை...அவன் வீடு எங்க தெருவில் இருந்து வெளிவந்து குட்டியா ஒரு பாலம் கடந்து, வளைவு திரும்பினா சிதம்பரம் சாலை...அதில் இரண்டாவது வீடு...



இந்த படத்தில் ஆறு 'பி' பிரிவின் பதாகையை தாங்கி அமர்ந்திருப்பதுதான் எழில்...எங்கெ மேரி டீச்சர் பக்கத்தில்...மேரி டீச்சர்...மேரி டீச்சருக்கு அந்த பக்கம் உட்கார்ந்து இருப்பது பர்ஸ்ட் ரேங்கை தவிர வேற எந்த ரேங்கையும் வாங்காத ராகவன்...எழில் எப்போதும் இரண்டாவது ரேங்க்தாரி..இடது பக்கம் கீழே பெஞ்சில் நான் இருக்கேன்...போட்டி எல்லாம் வைக்காமல் நானே சொல்லிடுறேன்...இடப்பக்கம் இருந்து மூன்றாவது...ஒரு விளம்பரதாரி தன்னோட வாட்சை என் மேலே போட்டு படம் காட்டுது பாருங்க...எனக்கு வலப்புறம் வெள்ளை பேண்ட்டில் ஜஹாங்கீர் பாய்(boy)..இன்னும் எல்லார் பெயரையும் சொல்ல ஆரம்பிச்சா மவுஸாலேயே அடிப்பீங்க...

நானும் எழிலும் எப்படி சந்திச்சோம் அப்படின்னுல்லாம் நியாபகம் இல்லை..ஆனால் நாங்க ப்ரண்ட்ஸ்...காரணம் என் வீட்டுக்கு பக்கத்தில் அவனோட வீடு இருந்ததும் என்னோட குட்டி சைக்கிள்ல அவனுக்கு ட்ராப் கொடுத்ததும் கூட இருக்கலாம்...மேலுக்கு சொல்லனும்னா எங்கப்பா போலீஸ் அப்படீன்னு சொல்லி வம்பு செய்யவந்த நாதாரிகளை நான் பயமுறுத்தி அடக்கினதும் ஒரு காரணமா இருக்கலாம்...அதுக்கு ஏத்தமாதிரி அவரும் அப்பப்போ யூனிபார்மோட வந்து ஒரு லுக் விட்டுட்டு போறதாலயும் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி அவனுக்கு இருந்திருக்கலாம்...காரணம் எங்க ஸ்கூல்ல தூரத்தில இருந்து வந்து படிக்குற பசங்க - கொஞ்சம் அடாவடியா இருப்பானுங்க...

நாங்க செய்த சின்ன சின்ன குறும்புகள் ஏராளம்..பள்ளியில் குடிநீர் பைப்பருகில் மொத்தமாக வளர்ந்திருக்கும் தொட்டாச்சினுங்கி செடிகள் எல்லாத்தையும் சுருங்க வைக்கனும் என்று விளையாடி மதியம் வகுப்புக்கு போகாம மேரி டீச்சர்கிட்ட அடிவாங்கியது மிகவும் சிம்பிள்..

அப்போ BIG FUN பபிள்கம் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகமான நேரம்...எவனப்பாத்தாலும் பபுள்கம்ல முட்டையை விட்டுக்கிட்டு திரிஞ்சானுங்க...ஒவ்வொரு பபிள்கம்லயும் கபில்தேவ், அசாருதீன், ஜடேஜா படம் இருக்கும், அதுக்கேத்தமாதிரி ரன்னும் போட்டு இருப்பாங்க அந்த படத்தில்..கபில்தேவுக்கு சிக்ஸர், அஸாருக்கு நாலு..இதெல்லாம் சேர்த்து வெச்சா கிரிக்கெட் பேட் தர்றதா ஒரே பேச்சு...நானும் என்னால முடிஞ்சவரைக்கும் சேர்த்து பார்த்தேன்...கடைசிவரைக்கும் ஒன்னும் தேறல....எனக்கு தெரிஞ்சு எவனும் பேட்டு இல்லை, ஒரு ஸ்டம்பு கூட வாங்கி சரித்திரம் இல்லைன்னாலும், நானும் ஏதோ சேர்த்துக்கிட்டிருந்தேன்...

இதுல ஒரு மேட்டர்...எங்க கையில காசு இல்லாதப்போ BIG FUN வாங்க என்ன செய்யறது ? இதில்தான் நம்ம எழிலோட குறும்பு..கையில பத்து பைசாவை வெச்சிக்குவோம்...கடையில் ஒரு குறிப்பிட்ட மிட்டாய் டப்பா கடைக்காரர் திரும்பி எடுக்கிறமாதிரி இருக்கும்...BIG FUN டப்பா - இது அதிகமா ஓடுற எப்.எம்.சி.ஜி புராடக்ட் - அப்படீங்கறதால - முன்னாலியே இருக்கும்..கடைக்காரர் திரும்பி பூமரை எடுக்கும் அந்த முக்காலே மூனுவீசம் செக்கண்ட்ல எழில் BIG FUN டப்பாவை திறந்து - கொத்தோட BIG FUN ஐ அள்ளி - பாக்கெட்ல போட்டுக்கிட்டு - திரும்பி டப்பாவை மூடிடுவான்...எழில் வீட்ல அவனோட அப்பா ரொம்ப செல்லம்...தினமும் குறைந்தபட்சம் 50 பைசாவாவது கொடுப்பார்...ஆக பலமுறை நாங்க BIG FUN ஐ மொத்தமா திம்போம்...

உங்களை அதிகம் போரடிக்க விரும்பல...

நான் என்னோட அதிகபட்ச குறும்பு காரணமா - கடலூர் புனித வளனார் பள்ளி - உள்விடுதியில சேர்க்கப்பட்டேன்...அப்பா அடிக்கடி ( தண்ணி இல்லாத காட்டுக்கு) ட்ரான்ஸ்பர் ஆகிறதும் ஒரு காரணம்...அங்கேயே தங்கி படிக்கும்போது வீட்டுக்கு லெட்டர் போடுவேன்...எழில் வீட்டுக்கும் லெட்டர் போடுவேன்...அவனும் எனக்கு நிறைய அட்வைஸ் செய்து லெட்டர் போடுவான்...எனக்கு லீவ் கிடைக்கும்போது எல்லாம் ( வருஷத்துக்கு இரண்டு முறைதான் )அவங்க வீட்டுக்கு பஸ்புடிச்சி போய் பார்ப்பேன்...அவங்க அம்மா சொல்லுவாங்க...எங்க வீட்டுக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் நீதான் என்று..நானும் எனக்குள் சொல்லிக்கொண்டேன்..எனக்கு லெட்டர் போடுற ஒரே ஆள் உங்க பையந்தான்..என்று...ஒரு முறை அவனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்குன்னு லெட்டர் போட்டான்..நான் கிளம்பி ஒரு பிஸ்கெட் பாக்கெட்டோட அவங்க வீட்டுக்கு போனேன்..( எனக்கு லீவ் ஒரு வருடம் கழித்து தான் கிடைத்தது)...எழில் அம்மா சொன்னாங்க...டேய்...பெரியாளாயிட்டடா நீ...என்று...நான் மையமாக சிரித்து வைத்துவிட்டு, எழில் வீட்டு தோட்டத்தில் நெல்லிக்காய் அடிக்க ஓடினேன்...

அப்படியே ஒரு பத்து வருடத்தை கூட்டிக்கொள்ளுங்க...என்னுடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...அவன் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள்...போனில்லாத அந்த காலத்தில் எப்படியாவது மாதம் ஒரு போஸ்ட் கார்ட் போட்டுவிடுவான்...நான் ப்ள்ஸ் டூ படித்த காலத்தில் எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்க்காக பல லெட்டர் போட்டான்..இன்னும் என் தனிப்பெட்டியில் இருக்கிறது...அவன் சீர்காழியில் டிப்ளமோ சேர்ந்தான்..பிறகு குடும்பத்தில் ஏற்ப்பட்ட ஒரு மாபெரும் பிரச்சினையில் ( அது பற்றி அவன் அனுமதியின்றி எழுதுதல் முறையற்றது) - குடும்பத்தை விட்டு வெளியேற நேர்ந்தது...பிறகு வேலூரிலோ சேலத்திலோ ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் நிறுவனத்தில் இணைந்ததா தகவல் கிடைத்தது...நானும் கல்லூரிப்படிப்புக்கு போயிட்டேன்..

கல்லூரி இறுதி தேர்வுல ஒரு பாடத்துல பெயில்...ஒரு ஆண்டு வீட்ல கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கவேண்டிய கட்டாயம்..அப்படியே ஊர் சுத்திக்கிட்டு திரிஞ்சிக்கிட்டிருந்தபோது ஒரு நாள் திடீர்னு வீட்டுக்கு வந்தான்...

என்னடா என்று விசாரித்தால், தான் ஓசூரில் பாகாலூர் ரோட்டில் ஒரு ஷேர் புரோக்கரேஜ் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அங்கேயே தங்கியிருப்பதாகவும் சொன்னான்...அடுத்த விஷயம் சொன்னதும் நான் கொஞ்சம் ஆடித்தான் போனேன்...அங்கேயே வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் வேறு சாதி என்பதால் அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள மறுப்பதாகவும், என்னோட அப்பா போலீஸ் துறையில் இருப்பதால் அவரிடம் சொல்லி தன்னோட கல்யாணத்தை நடத்திவைக்குமாறும் கேட்டான்...

எனக்கு உள்ளூர உதறல்...நாடார் கடையில் தம் அடித்து வைத்த இருவது ரூபாய் கடனை எப்படி அடைப்பது என்று பல திட்டங்களை வகுத்துக்கொண்டிருந்த ( கடை இருக்கு ஏரியா பக்கம் போறதில்லை) நான் எப்படி இந்த விஷயத்தில் அவனுக்கு உதவமுடியும் என்று தெரியாமல் மண்டை காய்ந்தேன்...என்னோட அப்பாவிடம் இதுபோன்ற விஷயங்களை பேசும் தைரியமும் கிடையாது...பெயில் ஆகி வீட்டில் உட்கார்ந்திருக்கிறவனுக்கு என்ன செல்வாக்கு இருக்கமுடியும்...அவரோட பத்து சைஸ் செருப்பை மூஞ்சிக்கு அருகில் பார்க்கத்தான் முடியும் என்ற முன்முடிவுக்கு வந்திட்டேன்..ஒருவேளை சொல்லி இருந்தால் கல்யாணத்தை அருமையாக நடத்தி வைத்திருப்பாரோ என்னவோ...ஸ்டேஷன்ல பல கல்யாணம் நடத்திவெச்சிருப்பாரு தானே..பொது அறிவும் கிடையாது...பையில் காசும் கிடையாது...உள்ளூர தைரியமும் கிடையாது...அவனும் சீக்கிறத்திலே புரிந்துகொண்டான்...சரிடா....நீ உன்னோட அப்பாகிட்ட சொல்ல முயற்சி செய்...நான் மாயூரத்தில இருக்க எங்க சித்தப்பாவிடம் போறேன் என்று போயே போய்விட்டான்...அதுதான் நான் கடைசியாக பார்த்தது...

அப்படியே கொஞ்சம் பார்ஸ்ட் பார்வர்ட்...அதுக்கு பிறகு சென்னைக்கு போய் - வெட்டியா திரிஞ்சு - வாழ்க்கைப்பாடத்தை தி நகர் ரங்கநாதன் ஸ்ட்ரீட் பி.ஆர்.எஸ் மேன்ஸனில் படிச்சு, பசியை அனுபவிச்சு..ஆங்கிலம் பேச பழகி - ஒரு வழிகாட்டி மூலமா வேலைக்கு போய் - மைக்ரோஸாப்ட் டெக்னாலஜியில கோடிங் எழுதி - ரிமோட் டெஸ்க்டாப்ல யூ.எஸ்ல இருக்க கணிப்பொறியை திறந்து வேலைசெய்து - பாம் பாக்கெட் பிஸிக்கு மோட்டரோலா கோடுவாரியரில் கோடிங் எழுதி - கிளையண்டோட சேட் செய்து - சேலரி ஹைக் - யாகூ மெஸஞ்சர் என்று ஜல்லியடித்து - பெங்களூர் டெலெபோனிக் இண்டர்வீயு தேறி - ஸாஸ்கன் நிறுவணத்தில் இணைந்து - வாழ்க்கையை திரும்பி பார்க்கிற அளவுக்கு போனபோது ஐந்து வருடம் கடந்துவிட்டிருந்தது...

திடீர்னு பழைய விஷயங்களை எல்லாம் புரட்டிக்கிட்டிருக்கும்போது எழிலோட ஒரு லெட்டர்..பிரிக்காமல் இருந்தது...தேதி பார்த்தால் 1999 ஆகஸ்டில் ஒரு தேதி...அம்மா அம்மா என்று அலறி..ஏம்மா இந்த லெட்டரை எனக்கு கொடுக்கல்ல...என்று எகிறியபோது...டேய், அது நீ காலேஜ்ல இருக்கும்போது வந்ததுடா...நீ வரும்போது கொடுக்கலாமேன்னு பெட்டியில் போட்டுவெச்சிருந்தேன்...என்றார்...

அவசரமாக பிரித்தபோது, தான் ஓசூரில் பணியில் இருப்பதையும், ஒரு முக்கியமான விஷயமாக என்னை சந்திக்கவேண்டும் என்றும், தன்னோட ஆபீஸ், வீட்டு முகவரி எல்லாம் எழுதி இருந்தான்..அதாவது இந்த கடித்தத்தை என்னை வந்து கடைசியாக சந்திக்கும் முன் எழுதி இருக்கிறான்...

அடுத்த வீக் எண்ட்...பைக்கை எடுத்துக்கிட்டு ஒரு பத்து லிட்டர் பெட்ரோல் அடிச்சுக்கிட்டு கிளம்பிட்டேன் ஓசூருக்கு...முதலில் பாகாலூர் ரோடு...அவன் வேலைசெய்த ஷேர் ட்ரேடிங் (ப்ரோக்கிங்) நிறுவனம்...இன்னும் இயங்கிக்கொண்டுதானிருந்தது...ஒரே ஒரு ரிசப்சனிஸ்ட் மட்டும் இருந்தார்...

எழிலா...ஆமாம், பழைய ஸ்டாப்...மேரேஜ் கூட இங்கேயேதான் இல்ல..ஆனா அவர் டீடெய்ல்ஸ் எதுவும் இல்லையே..நீங்க வேணா சார் வருவார்...வெய்ட் பண்ணி பார்த்து கேட்டுக்கோங்க..என்றார்...

இன்னொரு ஸ்டாப் உள்ளே நுழைந்தார்...இந்த கம்பெனியில இருந்து நெறைய பேர் பெங்களூர்ல தான் சார் ஜாய்ன் பண்ணாங்க...நீங்க பேங்களூர்ல விசாரிக்கலாமே...

நான் அங்கே இருந்துதான் மேடம் வர்றேன்...என்றேன்..சுருக்கென..

அந்த நிறுவனத்தின் 'சார்' வருவார் என்று காத்திருந்தது தான் மிச்சம் மாலை மங்கும் வரை...வரவேயில்லை...மொபைல் நெம்பர் சுவிட்சுடு ஆப் என்ற தகவலை கொடுத்தது..வீட்டையாவது தேடலாமே என்று போனபோது ஏமாற்றத்தின் உச்சத்துக்கே போனேன்..பதினாலு சீயா..அது பழைய நெம்பர் சார்...புது நெம்பர் இருக்கா...அஞ்சு வருஷம் முன்னால இங்கெ நாலுவீடுதான் சார் இருந்தது...இப்போ ஆயிரம் வீட்டுக்கு மேல இருக்கே என்றார் கொஞ்சம் விவரம் அறிந்தவர்...

ஆயாசமாக இருந்தது...கொஞ்சம் சுத்தி விசாரித்து பார்க்கலாம் என்று பைக் நுழையாத தெருவெல்லாம் போய் பதினாலு சீயை தேடி இருட்டும் வரை சுற்றியதில் கடைசியில் இரண்டு மணி நேரம் முன்பு விசாரித்தவரிடமே திரும்பி கேட்டேன்...

சார் இன்னும் நீங்க தேடிக்கிட்டேவா இருக்கீங்க...கடையாண்ட கேட்டீங்களே...நாந்தானே சொன்னேன்..என்றார்...

திரும்ப வீட்டுக்கு வந்து தடாலென கட்டிலில் விழுந்தபோது ஏனென்று தெரியாமல் சிறிய கண்ணீர்துளி...அதை விடுங்க...உங்களை எல்லாம் ரொம்ப போரடிச்சுட்டேனா...

ஒரு ரெக்வஸ்ட்...நீங்க ஷேர் மார்க்கெட், பங்கு சந்தை, நெய்வேலி, மாயூரம், பெங்களூர், எங்கேயாவது எழிலரசன் அப்படீங்கறவரை பார்த்தா...எக்ஸ்கியூஸ் மீ...உங்களுக்கு ரவியை தெரியுமா ? நெய்வேலியில உங்களோட படிச்சாரே..அப்படீன்னு கேளுங்க...

கருணாநிதியின் மர்ம கவிதையில் சிக்கியவர் யார்?



"சோதனை மேல் சோதனைன்னு ம.தி.மு.க., வில் நீக்கப்பட்ட எம்.பி., புலம்பிட்டிருக்காரு பா...'' என ஆரம்பித்தார் அன்வர்பாய். "கட்சியை உடைக்க 10 கோடி, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு 10 கோடின்னு ம.தி.மு.க., ஆட்களே பொறாமைப்பட்டுகிட்டுருக்காவ... அவருக்கு என்ன வே சோதனை...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. ""ம.தி.மு.க.,வில் நீக்கப்பட்ட எம்.பி., கணேசன், தஞ்சையில் நடந்த சிவாஜி சிலை திறப்பு விழாவுல பேசும்போது, தி.மு.க., தலைவரை ஓவரா புகழ்ந்து பேசிட்டே இருந் தாராம் பா... கூட்டத்துல இருந்தவங்க எல்லாம் எரிச்சலாகி, கைதட்டியே அவர பேச விடாம பண்ணிட்டாங்களாம்...


""ஒரு காலத்துல தஞ்சை மாவட்டத்தையே தனது பேச்சால கட்டி போட்டவர் நிலைமை இப்படி ஆயிடுச் சேன்னு அவர் ஆதரவாளர்கள் நொந்து போயிட்டாங்க பா... அடுத்ததா, தி.மு.க., தலைமையை கேட்காமலேயே, "ஒரு லட்சம் தொண்டர்களோடு தி.மு.க.,வில் இணைவோம்'னு வேற தன்னிச்சையா அறிவிச்சிருந்தாரு பா...


"ஆனா, "இப்ப இணைப்பு வேண்டாம்; தேர்தலப்போ பார்த்துக்கலாம்'னு தி.மு.க., தலைவர் திடீர் "தடா' போட்டுட்டாராம்... அதனால, என்ன செய்றதுன்னு தெரியாம புலம்பிட்டிருக்காரு பா...'' என முடித்தார் அன்வர்பாய்.


""தைலாபுரம் தோட்டத்துக்கு மூன்றாவது அணி தலைவரு ஒருத்தரு வந்தாராம் வே...'' என்றார் அண்ணாச்சி.


""மாயாவதியாங்க...'' என சிரித்தபடி கேட்டார் அந்தோணிசாமி.


""மகேந்திரகவுடுன்னு ஒரு எம்.எல்.ஏ., வே... சந்திரபாபு நாயுடு கட்சியில பொதுச் செயலரா இருக்காரு... மாஜி மந்திரி... ராமதாசை சந்திச்சு 2 மணி நேரம் பேசினாராம்... மூன்றாவது அணியில பா.ம.க., பங்கேற்க அழைப்பு விடுத்தாகளாம்...


""சந்திரபாபு நாயுடு அனுப்பினதா கவுடு சொல்லியிருக்காரு... "தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கு; நல்ல முடிவா சொல்றேன்'னு பேசி, கவுடுவை ராமதாஸ் வழி அனுப்பி வைச்சாராம் வே...'' என முடித்தார் அண்ணாச்சி.


""அவாள் நமக்கு எப்போதும் சவால் தான்னு முதல்வர் ஒரு கவிதை எழுதிருந்தாரே... அது யாரை மனசுல வைச்சு எழுதிருக்கார்னு கண்டுபிடிச் சேளா ஓய்...'' என கேள்வி எழுப்பினார் குப்பண்ணா.


""பதவி கொடுத்ததா சொல்லிருக்கார்... அடிமரத்தை அசைச்சுப் பார்த்தேன்னு சொல்லிருக்கார்...


"அவாள்'னும் சொல்லிருக்கார்... இதைப் பற்றி கட்சி வட்டாரங்களிலும், எல்லா தரப்பிலும் பெரிய விவாதமே நடத்தி முடிச்சுட்டாவ...


""இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் பொருத்தமான ஆளா, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் தான் வர்றார்... அதனால, அவரைத் தான் முதல்வர் சொல்லிருக்கணும்னு எல்லா தரப்பும் ஏகமனதா தீர்மானிச்சுட்டாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.


""முதல்வர் மன வருத்தம் அடையற அளவுக்கு அவர் அப்படி என்ன செஞ்சார் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.


""சமீபத்துல நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்துல, "தி.மு.க., கூட்டணியில இருக்கவே கூடாது'ன்னு "ஸ்டிராங்'கா பேசினதா சொல்லுதாக... அதுமட்டுமில்ல, ரெட்டணை போலீஸ் தடியடி தொடர்பா விசாரிக்கப்போன ரங்கராஜன், அரசுக்கு எதிரா நிறைய பேசியிருக்கார்... எல்லாத்தையும் சேர்த்து வைச்சு தான் முதல்வர் கவிதை பாடிட்டார்னு நினைக்கேன்...'' என்றார் அண்ணாச்சி. பெஞ்ச் சிரித்தது.

தினமலர் டீக்க‌டை பெஞ்ச்

கவலையில் இயக்குனர்கள் டிஸ்மிஸ் ஆகும் ஹீரோயின்கள்

தமிழ்முரசு பத்திரிகையில் கோடம்பாக்கம் கோடங்கி டெய்லி ஏதாவது ரெண்டு கிசுகிசுவை சொல்லிட்டு போறார். நேத்து வெளியான கிசுகிசு. நீங்களும் படித்து கிசுகிசுவுல சிக்கியிருக்கிறவங்க யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.


நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

வில்வித்தை நடிகரு, நடிக்கிற படங்களோட ஹீரோயினுங்க அடிக்கடி டிஸ்மிஸ் ஆகுற கதை நடந்துகிட்டிருக்கு... நடந்துகிட்டிருக்கு... முதல்ல துரையான படத்துல பத்துபிரியாவ மாத்திட்டு கீரை நடிகைய போட்டாங்க, இப்போ கிரிவலம் சுத்துற ஊர்பேரு படத்துல வகில் நடிகைய நீக்கிட்டு பூஜை பண்ற காந்தி நடிகைய போட்டிருக்காங்களாம்... போட்டிருக்காங்களாம்... அடிக்கடி ஹீரோயின மாத்துறதுக்கு ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்றாங்க... சொல்றாங்க... அதுல முக்கியமானது, வில்வித்தை நடிகரு ‘வாங்க பழகலாம்’னு கூப்பிட்டா, அதுக்கு மரியாதை கொடுக்காத நடிகைங்களுக்கு கல்தா கொடுத்துர்றாங்களாம்... கல்தா கொடுத்துர்றாங்களாம்...

பிரகாசமான வில்லன் நடிகரை நம்பி படம் இயக்குன மோகனராதா இயக்குனரும், ஜீவனான ஒளிப்பதிவாளரும் கவலையில இருக்காங்களாம்... கவலையில இருக்காங்களாம்... படத்தை முடிச்சுட்டு பிரகாச வில்லன் சிக்னல் கிடைக்காததால பொட்டியை பாதுகாத்துகிட்டிருக்காங்களாம்... பாதுகாத்துகிட்டிருக்காங்களாம்... பேமிலி பிரச்னை, தெலுங்கு ரெட்கார்டு, கால்ஷீட் சொதப்பல்னு இடியாப்ப சிக்கலுக்குள் இருக்குற பிரகாச வில்லனால, சொந்த படங்கள்ல கவனம் செலுத்த முடியலையாம்... முடியலையாம்...

சின்னத்திரையில இப்போ அதிக சம்பளம் வாங்குறது படையம்மா நடிகைதானாம்... நடிகைதானாம்... எபிசோடுக்கு அஞ்சு லகரத்தை அள்ளி வச்சாத்தான் மேக்-அப்பே போடுறாராம்... போடுறாராம்... சொந்த தங்கச்சி தயாரிப்பாளரா இருக்குற சீரியலுக்கும் அதே சம்பளம்தானாம்... அதே சம்பளம்தானாம்... படையம்மாவின் அதிரடி படையெடுப்பால் கற்பூ நடிகையும், தெய்வமான யானை நடிகையும் அதிர்ந்து போயிருக்காங்களாம்... அதிர்ந்து போயிருக்காங்களாம்...

Wednesday, August 20, 2008

சைக்கிள் பாகங்களின் பெயர்கள் தமிழில்...! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ் மொழியில் இன்சினியரிங் : மங்களூர் சிவா காமெடி என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவுக்கு மறுமொழியிட்ட பதிவர் சிவகாசி ஸ்ரீனிவாசன் அவர்கள் சைக்கிள் பாகங்களை தமிழில் கூற முடியுமா என்று கேட்டிருந்தார். நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் தேடித் தேடி பார்த்தேன். சிக்கிவிட்டது சைக்கிள் பாகங்களின் தமிழ் பெயர்கள்.

பதிவர் அண்ணா கண்ணன் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள் என்ற பெயரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். இதோ அந்த பதிவு. நீங்களும் படித்து தமிழ் பெயர்களை தெரிந்து கொள்ளுங்களேன்.


மூன்று மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சட்டப் பேரவையில் பேசினார். விவாதத்திற்கு இடையில் 'சைக்கிள் ஸ்பேர் பார்ட்சுகள் நூற்றினைத் தமிழில் சொல்ல முடியுமா?' எனக் கோ.க. மணியிடம் கேட்டார். அதற்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து வந்தேன். மிதிவண்டி உதிரி பாகங்களுக்கான ஆங்கிலப் பெயர்களை முதலில் பட்டியலிட்டேன்; http://www.firstflightbikes.com உள்பட பல்வேறு இணைய தளங்களில் தேடினேன். தொழிற்கருவிகள், துணைப் பொருள்கள், செய்யும் வேலைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டேன். பிறகு, அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் குறித்து ஆராய்ந்தேன். என் இளவல், எந்திரப் பொறியாளர் பிரசன்னா ஒத்துழைத்தார்.

உதிரி பாகங்களை அவற்றின் உருவம், செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழாக்கியுள்ளேன். பெரும்பாலும் காரணப் பெயர்களாக வருமாறு அமைத்துள்ளேன். மிதிவண்டியின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் உள்ளவற்றைத் தனித்தனியே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் அவை, ஒரே மாதிரியானவை அல்ல. முன்னதைப் பின்னதன் இடத்திலோ, பின்னதை முன்னதன் இடத்திலோ பயன்படுத்த இயலாது. எனவே, இரண்டும் தனித்தவை ஆகின்றன. ஆகவே, தனித் தனிப் பொருட்களாகக் காட்டியுள்ளேன். இப்போதைக்கு 153 சொற்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:

Tube - மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்

Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்

Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி

Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி

Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு

Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி

Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி

Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி

Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்

Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு

Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை

Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கி
Bolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்

Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை

Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி

Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு

Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்

Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை

Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி

Inflating - காற்றடித்தல்
Patch - பட்டை
Patching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்

Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி

Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு எண்ணெய்

இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.

இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா? : கோவிகண்ணனின் அசத்தல் பதிவு

வலைபதிவர் கோவி கண்ணன்2006ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி எழுதியுள்ள ஒரு பதிவுதான். மிக மிக நல்ல பதிவாக எனக்கு தெரிந்ததால் அதனை இங்கே போட்டிருக்கிறேன். நீங்களும் அந்த பதிவை படிச்சிட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்களேன்.




தனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.


நியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்தான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.

உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.

ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் !

தமிழ் மொழியில் இன்சினியரிங் : மங்களூர் சிவா காமெடி

இவர் இன்றி வலையுலகம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எழுத்துக்களை எழுதித் தள்ளும் மங்களூர் சிவா கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஒரு காமெடி பதிவு போட்டுள்ளார். நெசமாலுமே காமெடியா இருக்கும் அந்த பதிவை நீங்களும் படியுங்களேன்.



தமிழ் மொழியில் இன்சினியரிங். ஐயா புன்னியவான் அரசியல் வியாதிகளே உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??

கீழ இருக்குறதெல்லாம் ஒரு பதிவுக்கு வந்த பின்னூட்டம் படிச்சி பாருங்க நல்ல நகைச்சுவையா இருக்கும்!!!
//
தாய்மொழியில் யாரும் சந்திரமண்டலம் வரை செல்ல முடியும்.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய எந்த நாட்டையும் உதாரணமாக பார்க்கலாம்.பெல்ஜியம்,லக்சம்பேர்க் போன்ற குட்டி நாடுகள்கூட தங்கள் சொந்த மொழியில்தான் போதிக்கின்றார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழி. இந்தியா வல்லரசாக கனவுகாண்பதில் தவறில்லை. அதற்கான முழுத் தகுதியும் உண்டு. ஆனால் இந்தியாவிற்கு இன்னும் தன்னம்பிக்கை இல்லை என்பது எனது ஆழமான கருத்து. தனது சொந்த மொழிகளை போதானை மொழியாகவும், நிர்வாக மொழியாகவும்இந்தியாவால் நடைமுறைப்படுத்தாத வரை இந்திய மொழிகள் எவ்வாறு வல்லரசு மொழியாகப் போகிறது? ஒரு வல்லரசு வேறு ஒரு நாட்டு மொழியில் நிர்வாகம் செய்யவும், போதிப்பதும் தன்மானக்குறைவாக இல்லையா? ஏன் பெல்ஜியம், லக்சம்பேர்க் போன்ற நாடுகளுக்கு உள்ள தன்மானமும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இல்லாமல் போனது?//

//
தமிழ் நாட்டில் மட்டுமே வேலை செய்ய பொறியியல் படிப்பதில்லை ,என்பதால் இது சாத்தியம் இல்லாதது, ஜப்பானில் ஜப்பானிய மொழியில் பொறியியல் படிக்கலாம் , காரணம் அவர்கள் மொத்த நாட்டுக்குமே அது மட்டும் தான் மொழி.

நம் நாட்டின் மொழியியல் குளறுபடிகள்.உதாரணமாக ஒன்று சொல்கிறேன்.automobile என்பதை +2 இயற்பியல் பாடப்புத்தகத்தில் தானியங்கிகள் என்று போட்டு இருப்பார்கள்.ஆனால் அதைப்படிக்கும் ஒரு மாணவன் அதை automatic என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இங்கே வலைப்பதிவில் கூட பலரும்(அல்லது சிலர்) auto என்பதை தானி என்று சொல்லி எழுதுகிறார்கள், அது "automobile" என்பதன் சுருக்கமான ஆட்டோ என்பதன் தமிழாக்கமே. ஆனால் தானி என்று சொன்னால் இங்கே பல காலம் வலைப்பதிவில் புழங்கியவர்களுக்கே புரியவில்லை. அதே போல தான் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்திற்கு போனாலும், ஆனால் அதற்கு ஏற்றார்ப்போல் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்படும் "ஷாக்" களை தாங்கிக்கொள்ள வேண்டும்.

பொறியியலை தமிழ் நாட்டில் தமிழில் படித்துவிட்டு ஆந்திராவில் கூட பின்னர் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்.ஏன் எனில் தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை!
//

//தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை//
India is union of states. இந்தியா என்பது பல தேசங்களின் கூட்டமைப்பு என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அந்தவகையில் தமிழ் மொழி ஒரு தேசத்திற்கான அதாவது ஒரு நாட்டிற்கான தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி என்பதும், தமிழ்மண்ணின் பொருளியல் தன்னிறைவு என்பதும் சத்தியமாக சாத்தியமே. எப்படி அடுத்த நாடுகளுடன் ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தக உறவு வைத்துக்கொள்கிறதோ அதேபோன்றே நாம் அண்டை தேசங்களான ஆந்திரா, கர்னாடகா போன்றவற்றுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். தமிழன் என்றைக்கு இந்தியக் கூட்டமைப்பில் இணைந்தானோ, அன்றையிலிருந்து தன்னம்பிக்கையையும் இழந்து தவிக்கிறான்.-
க. இளஞ்செழியன்
//

எப்பா இளஞ்செழியா அப்ப கர்னாடகாவுக்கு, ஆந்திராவுக்கு, கேரளாவுக்கெல்லாம் போக பாஸ்போர்ட் விசா எல்லாம் வேணுமா?


//வருடம் தோறும் பொறியியல் படிப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் வழி படித்தோர் சேர்கிறார்கள், எல்லாரும் தற்கொலை செய்துக்கொள்வதில்லையே, அப்படிப்பார்த்தால் நான் தான் முதலில் செய்துக்கொண்டு இருப்பேன்!//

//
தமிழ் ஒரு தேசிய மொழியா, இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை,ஹிந்திக்கே அரசு மொழி என்று தான் பெயர், தேசிய மொழி என்றல்ல.
//
//
இப்போ இந்தியாவில் ஆங்கிலத்தில் பொறியியல் படித்திருந்தாலும், இங்கிலாந்த், அமெரிக்கா என மேல் படிப்புக்கு போக GRE, TOFEL. IELTS, என்று தேர்வெழுதி அதில் ஆங்கிலப்புலமையை ஏன் காட்ட சொல்கிறான்.அவன் ஸ்டாண்டர்ட்கு நாம இல்லைனு தானே.இந்தியாவில் தமிழில் பொறியியல் படித்தால் அப்புறம் பிற மாநிலங்களுக்கு வேலைக்கு போக தனியாக ஒரு தேர்வு வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
//
இப்பவே இன்சினியரிங் என்ட்ரன்ஸ் அப்பிடித்தானே இருக்கு

//
பொறியியலை தமிழில் படிக்க வைத்தால் இப்போ புரியலைனு செத்தவங்க வெளில வேலைக்கு போக முடியலைனு சாவாங்களே அதுவும் தமிழ் வளர்ச்சி தானா?
//

//
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தாய்மொழி தமிழிலும் ஆந்திரர் தெலுங்கிலும்,கேரள நாட்டினர்மாலையாள மொழியிலும் படிக்க சாத்தியப் படும் பட்சத்தில்
//
அப்ப மீதி இருக்க 25 ஸ்டேட் ஆளுங்க ????

Tuesday, August 19, 2008

குசேலன் லாபமா? நஷ்டமா? : ரசிகனின் புலம்பல்

ஒன்லிரஜினி டாட் காம் இணையத்தி, குசேலன் லாபநஷ்ட கணக்கு பற்றிய ஒரு அலசல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை நீங்களும் படியுங்களேன்.



குசேலன் நஷ்டம் - ரஜினி தனது சம்பளத்திலிருந்து பல கோடிகள் திருப்பி கொடுத்தார்!

குசேலன் விவகாரம்; விநியோகஸ்தர்கள் சாய் மீரா அலுவலகம் முற்றுகை!

குசேலன் படம் - விநியோகஸ்தர்கள் குமுறல்!

இது போன்ற செய்திகளை கிளப்பிவிட்டுவிட்டு அல்ப சந்தோசம் அடையும் வெப் சைட்டுகள் மற்றும் பத்திரிகைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

அது எப்படி அய்யா ரஜினி படத்திற்கு மட்டும், வெளிவந்த சில நாட்களிலேயே உங்களுக்கு லாப நஷ்டக்கணக்கு தெரிந்து விடுகிறது?

எந்த ஒரு படமும் வெற்றி பெற்றுள்ளதா அல்லது தோல்வி அடைந்துள்ளதா என்று தெரிய குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது ஆகும். லாப நஷ்டம் மற்றும் வசூல் குறித்து (முதன்மை நிலவரம்) தெரிய ஒரு வாரமாவது ஆகும். ஆனால் தினமலர் குசேலன் வெளியான அடுத்த நாளே படம் தோல்வி என செய்தி வெளியிட்டது. மேலும் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பதாகவும் சாய் மீரா அலுவலகத்தை முற்றுகை இட்டதாகவும் செய்தி வெளியிட்டு தனது வக்கிர புத்தியை காண்பித்தது. மேற்படி நாளிதழே சில விநியோகஸ்தர்களை பணத்தை திருப்பி கேட்கும்படி தூண்டி விட்டதாகவும் தகவல். ஆனால் எவரும் இவர்கள் வலையில் சிக்கவில்லை. பின்னர் இவர்களாகவே ஒரு பொய் செய்தியை வெளியிட்டனர்.

திரையுலகில் உள்ள நடைமுறை என்ன?

ஒரு படம் வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர் அந்த படத்தால் நஷ்டப்பட்டால், அவர் நேரடியாக தயாரிப்பாளரை அணுகுவதில்லை. முதலில் அவர் சக்திமிக்க விநியோகஸ்தர் சங்கத்தை அணுகவேண்டும். (விநியோகஸ்தர் சங்கத்திலிருந்து இதுவரை குசேலன் குறித்து புகார் எதுவும் வரவில்லை. நாகா ரவி போன்ற சில மோசடிப்பேர்வழிகள் தான் தான்தோன்றி தனமாக சங்க விதிகளுக்கு முரணாக பேசி வருகின்றனர்). சங்கத்தில், ஒருவர் தயாரிப்பாளரிடம் எந்த அடிப்படையில் படத்தை வாங்கினார் என்று பார்த்து அதற்கேற்ற வகையில் தீர்வு காணப்படும். ரஜினியின் படத்தை பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் மினிமம் கியரன்டீ அடிப்படையில் தான் வாங்குவர். இந்த முறையில் படம் வாங்கி யாரவது நஷ்டப்பட்டால், நஷ்டஈடு கேட்கும் தார்மீக உரிமை அவர்களுக்கு கிடையாது. சங்கத்தின் மூலமாக சென்றாலே தார்மீக உரிமை கிடையாது எனும்போது விநியோகஸ்தர்கள் தாங்களாகவே சாய் மீரா சென்று கேட்டனர் என்பது எவ்வளவு பெரிய பொய். ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்?

கவனிக்க: விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள சங்கத்தின் மூலமாகவே அணுகவேண்டும் என்று ஒரு விதி உள்ளது. விநியோகஸ்தர்கள் சங்கம் குசேலன் குறித்து எந்த ஒரு புகாரும் இதுவரை அளிக்கவில்லை.

ஒரு நடிகருக்கு ஒரு படத்தின் தோல்வியால் எழும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அது தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்தது.

வெறும் நடிகனாக மட்டுமே பணிபுரிந்த ‘குசேலன்’ விஷயத்தில் - அவர் பணத்தை திருப்பி தந்தார் என்பது எவ்ளோ பெரிய கட்டுகதை? ரஜினியின் மௌனத்தை இருந்தாலும் இப்படியா அட்வான்டேஜ் எடுத்து கொள்வது? பாவிகளா!!

(பாபா படத்தின் தயாரிப்பாளராகவும் ரஜினி இருந்தபடியால் எந்தவித தயக்கமும் இன்றி கோடிக்கணக்கான பணத்தை திருப்பி தந்தார்.)

மேலும் ரஜினி குசேலன் படத்திற்காக கவிதலயாவிடம் ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ளவில்லை. அவர் சம்பளமாக பெற்றது செவென் ஆர்ட்ஸ் விஜய்குமாரிடமும் அஸ்வினி தத்திடமும்தான்.

மறுபடியும் கவனிக்க: ஒரு நடிகருக்கு ஒரு படத்தின் தோல்வியால் எழும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அது தயாரிப்பாளரை சார்ந்தது.

இருப்பினும் எந்த அடிப்படையில் ரஜினியின் தலை இதில் உருட்டபடுகிறது?

அவர் ஒருவர் மட்டுமே நஷ்டம் என்று ஏற்பட்டால் பணத்தை திருப்பி தருவார் என்ற ஒரு நம்பிக்கை விநியோகஸ்தர்களிடம் இருப்பதால்!!

வேறு யாரிடமும் இதை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. ரொம்பவே நல்லவராக ரஜினி இருப்பதால் இது போன்ற தொல்லைகள் அவருக்கு சகஜம்.

கை கொடுத்து நம்பிக்கையூட்டிய சூப்பர் ஸ்டார்

இருப்பினும் சாய் மீராவை தொடர்புகொண்ட சூப்பர் ஸ்டார், “கவலைபடாதீர்கள். நிலவரத்தை சிறிது காலம் பார்ப்போம். தேவைப்பட்டால் நான் வேண்டியதை செய்கிறேன்” என்ற உறுதி மொழி கொடுத்திருக்கிறார். எவனுக்கையா வரும் இப்படி ஒரு தாராள மனசு? தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? என்னை பொறுத்தவரை என் பங்கு முடிந்துவிட்டது; என் பட லிஸ்ட்டில் ஒன்று கூடி விட்டது என்று கை கழுவிவிட்டு போகும் இந்த காலத்தில் ரஜினி போல் ஒரு நடிகரை பார்ப்பது அரிது…மிகவும் அரிது…

“படம் வெளியாகி இரண்டு வாரம் தானே ஆகிறது. மொத்த வசூல் குறித்து இப்போது எப்படி முடிவு செய்வது? படம் வெளியாகி ஐந்து வாரங்கள் கழியட்டும். நமக்கும் மொத்த வசூல் குறித்து ஒரு முழுமையான ஒரு முடிவுக்கு வர இயலும். அந்த சமயத்தில் தேவைப்பட்டதை செய்யலாம்” என்று தலைவர் சாய் மீராவிற்கு ஆலோசனை கூறியிருப்பதாக தகவல். சாய் மீராவும் இதை விநியோகஸ்தர்களிடம் கூறி தெம்பூட்டியிருக்கிறது. (இருப்பினும் தினமலர், நக்கீரன் போன்ற சில பத்திரிக்கைகள் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன.)

தமிழில் ஒவ்வொரு ஆண்டும் எழுபதுக்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. அவற்றில் ஒரு சில படங்களை தவிர பெரும்பாலான படங்கள் நஷ்டத்தையே தருகின்றன…அவற்றை பற்றியெல்லாம் எந்த செய்தியும் வருவதில்லையே ஏன்? (சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் அவர்களது பி.ஆர்.ஓக்கள் மேல் பயமா?)

சரி பத்திரிக்கைகள் ஏன் இப்படி ரஜினி மீது மட்டுமே குறி வைக்கின்றன ?
பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

முதலாவது - அவர் ரொம்ப நல்லவர்; எதையும் பொருட்படுத்தமாட்டார்! அதுதான்!!

இரண்டாவது - ரஜினி பற்றி என்ன எழுதினாலும் கேட்ப்பதற்கு யாரும் இல்லை. சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கும் இலவச பப்ளிசிட்டி. செய்திக்கும் செய்தி.

மூன்றாவது - அவர் ரசிகர்கள். அவர்கள் அவரைவிட ரொம்ப நல்லவர்கள். இருக்கும் இடமே தெரியாத ஜீவன்கள்.

நான்காவது - ரஜினியை ஒழிக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா?

சரி ஏன் ரஜினியை ஒழிக்க இவர்கள் நினைக்க வேண்டும்?
மறுபடியும் முதலாவது பாயிண்ட்டை படிக்கவும்.

Monday, August 18, 2008

அட, ஆமால்ல!


ஆகஸ்ட் 17ம் தேதி தமிழ்முரசில் வெளியாகியுள்ள ஒரு சினிமா செய்தி. நீங்களும் படியுங்களேன்.

ரஜினி, கமல், அர்ஜுன், சுந்தர்.சி, விவேக், பிரகாஷ் ராஜ், தேவயானி, டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா, இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரிடம் ஒரு ஒற்றுமை. இவர்கள் எல்லாருமே இரு மகள்களுக்கு அப்பா ஆனவர்கள். தவிரஅஜீத்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, மனோஜ் கே.பாரதி-நந்தனா, ரமேஷ் போன்றோருக்கு சமீபத்தில் முதல் குழந்தையாக மகள் பிறந்திருக்கிறார்கள்.

Sunday, August 17, 2008

இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!


மக்கள் சட்டம் என்ற வலைதளத்தில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகள் குறித்து எழுதியுள்ள செய்திகளை நீங்களும் படித்து பாருங்களேன்.


காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.

.

மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.

இத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.

.

சட்டத்தின் பார்வையில்....

.

பாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, “இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”

மேற்கூறிய சட்ட வாசகத்தில் “இயற்கை முறை” என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.

.

குறி்ப்பாக திருநங்கைகள் (அ) அரவானிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.

.

மனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும்.

இந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது.

திருநங்கைகள்


இந்நிலையில் திருநங்கைகள் (அ) அரவானிகளின் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

.

திருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல! மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.

ஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.

.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது.

இயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.

.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

.

அதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.

.

சமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.

இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் “மெக்காலே” என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

மேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.

.

ஆனால், “தன்பாலின இச்சை” இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.

அவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)

.

இந்த சட்டப்பிரிவின்படி, “இயற்கைக்கு மாறான காம இச்சை”யுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக “கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம்” என்பதாகவே கருதப்படும்.

.

எனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.

.

அடுத்தது என்ன?

.

இந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம்.

அதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.


-சுந்தரராஜன்

நமீதாவுக்கு 60 அடி உயரத்தில் கட்-அவுட்

ஜூன் 3ம் தேதி சினிமா நிருபர் எழுதியுள்ள நமீதாவுக்கு 60 அடி உயர கட் அவுட் செய்தியை நீங்களும் படித்து பாருங்களேன்.

கவர்ச்சியான உடல் அழகாலும், மலர்ச்சியான முக அழகாலும் கிறங்கடித்து வரும் ஆறேகால் அடி உயர நடிகை நமீதாவுக்கு 60 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து அழகு பார்த்துள்ளனர் ரசிகர்கள். தமிழகத்தில் அல்ல... அண்டை மிநிலமான கர்நாடகத்தில்...!

கன்னட மொழியில் நடிகை நமீதா நடித்து வெளியான நீலகண்டா படம் மெகா ஹிட் ஆகிவிட்டது. இந்த படத்தில் நடிகர் ரவிச்சந்திரனோடு நமீதா போட்ட ஆட்டம் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. இதன் மூலம் கன்னடத்திலும் நமீதாவுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகி வருகின்றன. இதன் உச்சகட்டமாக நமீதாவுக்கு பெங்களூருவில் பிரமாண்ட கட்அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து அசத்தி விட்டார்களாம் ரசிகர்கள்.

இதுபற்றி நமீதாவிடம் கேட்டபோது, ஆமாங்கோ... என்க்கு கன்னாடாகாவுலோ சிக்ஸ்ட்டி பீட் கட்அவுட் வெச்சிருக்காங்கோ. என் கட் அவுட்டுக்கு பால் ஊத்துறாங்கோ. இத பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்கோ..., என்றார்.

கொசுறு தகவல் : கன்னட ரசிகர்களை கவர்ந்திழுத்த இந்த நீலகண்டா படம்தான் தமிழில் பிரமாண்டம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.