இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Tuesday, September 2, 2008

FLASH NEWS : வேலூர் தினமலர் ஆபீஸ் மீது அட்டாக்

இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டதை கண்டித்து வேலூரில் தினமலர் ஆபீஸ் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் பத்த அவ்வப்போது தரக்குறைவாக செய்தி வெளியிடுவது தினமலரின் வாடிக்கை. இன்னிக்கு காலையில 4000 இஸ்லாமியர்கள் தினமலர் ஆபீஸ் முன்னாடி வந்து கல்லடிச்சதா அங்க இருக்குற என்னோட பிரண்ட் சாகுல் அமீது போன்ல ‌சொன்னார்.

Monday, September 1, 2008

தாயையும், மகளையும் கல்யாணம் செய்த காமுகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாயையும், மகளையும் கல்யாணம் செய்தி ஆசாமி வெட்டி கொல்லப்பட்டார்.


நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி(வயது55). இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு முருகம்மாள் என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார். அப்போது முருகம்மாளுக்கு வள்ளி என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. அதை தன் குழந்தை போல் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பால்பாண்டிக்கும் முருகம் மாளுக்கும் முருகன் என்ற மகன் பிறந்தான். முருகனும் வள்ளியும் அக்காள்- தம்பி முறையில் வளர்ந்து வந்தனர்.

ஆனால் காமுகனான பால்பாண்டிக்கு நாட்கள் செல்லச் செல்ல முருகம் மாள் மீதுள்ள மோகம் குறைந்து அவளது மகள் வள்ளி மீது மோகம் பிறந்தது. வள்ளி பெரியவள் ஆனதும் அவளையும் பால் பாண்டியே திருமணம் செய்து கொண்டார். இதில் பால்பாண்டிக்கும் வள்ளிக்கும் இரண்டு குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். பால்பாண்டியின் முதல் மகன் முருகன் வளர்ந்து வாலிப வயதை அடைந் தான். அப்போது தான் அவனுக்கு தன் தந்தை தன் தாயையும் தன் அக்காவையும் திருமணம் செய்த விபரம் தெரிந்தது.

இதனால் முருகனுக்கு தன் தந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பால்பாண்டி அடிக்கடி தன் மனைவி வள்ளி (வயது27)யிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன்(24) "ஏன் இப்படி குடும்பத்தை நாசம் செய்தது மட்டும் அல்லாமல் அடிக்கடி தகராறு செய்கிறாய்'' என்று கூறி பால்பாண்டியை மிதித்து கீழே தள்ளினான். அதன் பிறகு அங்கு கிடந்த அம்மி கல்லை எடுத்து பால்பாண்டி தலையில் போட்டு நசுக்கினான். இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு கல்லிடைக் குறிச்சி போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தான் பால்பாண்டி, தாயையும், மகளையும் திருமணம் செய்து குழந்தையும் பெற்ற விபரம் தெரிய வந்தது.

இந்த சம்பவம் அந்தப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி : மாலைமலர்

தீ நகர் தீ விபத்து நடந்தது எப்படி? முழுவிவரம்

சென்னை தியாகராயநகர் சரவணா ஸ்‌டோர்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலைமலரில் வெளியாகியுள்ள விரிவான செய்தி


5 தளங்களை கொண்ட இந்த பாத்திரக்கடையில் வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், வாஷிங் மிஷின், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், அயர்ன் பாக்ஸ், பர்னிச்சர் வகைகளான கட்டில், சோபா, மெத்தை, பீரோ மற்றும் அனைத்து பாத்திர வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடையில் 5-வது தளத்தில் இன்று காலை 5.45 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் பக்கவாட்டு ஜன்னல்களில் இருந்து தீச்சுவாலைகள் கரும் புகையுடன் வெளி வந்தது. இதை அந்த வழி யாக வாக்கிங் சென்ற வாலிபர் ஒருவர் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

6.15 மணியளவில் தியாகராய நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன. அங்கு பெரிய அளவில் தீ பற்றி எரிய தொடங்கியதால் சென்னை நகரில் பல இடங்களில் இருந்தும் 10 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன.

உயரமான இடங்களில் தீயை அணைக்க பயன் பயன்படுத்தப்படும் 2 `ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வண்டி களும் வரவழைக்கப்பட்டது. சுமார் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க தொடங்கினர். ஆனால் தீ வேகமாக பரவியதால் கடைக்குள் செல்ல முடிய வில்லை.

பக்கத்து கடைகளின் ஷட்டர்களை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். அங்கும் கரும் புகை சூழ்ந்து கொண்டதால் அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதற்கிடையே கடையின் 5-வது தளத்தில் இருந்து 4-வது மற்றும் 3-வது தளத் திற்கும் தீ மளமளவென பரவியது. அருகில் உள்ள லக்கி பிளாசா என்ற கட்டிடத்தின் மேல் அமைக் கப்பட்ட சரவணா ஸ்டோர் கட்டிடமும் தீப்பற்றிக் கொண்டது. இதில் அங்கிருந்து கோடிக் கணக்கான மதிப்பிலான பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

கடையின் 5-வது தளத்தின் ஒரு பகுதியில் அங்கு வேலை பார்க்கும் 1000க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அனைவரும் பெட்டி படுக்கைகளுடன் வீதிகளை நோக்கி ஓடி வந்து உயிர் பிழைத்தனர்.

கடைக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 காவலாளிகள் மற்றும் சில ஊழியர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அவர் களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

5-வது மாடியில் சிக்கித் தவித்த 8 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

தென்சென்னை இணை போலீஸ் கமிஷனர் குணசீலன் மேற்பார்வையில் துணை போலீஸ் கமிஷனர் முத்துசாமி, உதவி போலீஸ் கமிஷனர்கள் கண்ண பிரான், சேது, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.

இந்த தீ விபத்தை தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

தீ விபத்தை நேரில் பார்த்த மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பிரபு கூறியதாவது:-

இது போன்ற உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் நேரத்தில் அதை அணைப்பதற்காக `ஸ்கைலிப்ட்' தீயணைப்பு வண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 2 வண்டியை கொண்டு வந்து கண்ணா மூச்சி காட்டிக் கொண்டி ருக்கிறார்கள்.

அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டி ருக்கும்.


சென்னையில் பிரபல வணிக ஸ்தலமாக விளங்கிய மூர் மார்க்கெட்டில் கடந்த 1980 வாக்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு ஏராள மான கடைகள் எரிந்து நாசமாயின. அதை மிஞ் சும் வகையில் நடுத்தர மக்கள் லட்சச்கணக்கில் பொருட்கள் வாங்குவதற் காக வந்து செல்லும் ரங்க நாதன் தெருவில் நடை பெற்றுள்ள முதல் பெரிய தீ விபத்து இதுவாகும்.

சென்னையின் மிகப் பெரிய வணிக ஸ்தலமாக விளங்கும் ரங்கநாதன் தெருவில் பாதுகாப்பு குறை பாட்டால் ஏற்பட்டுள்ள தீ விபத்தை தொடர்ந்து அங்குள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி ஜவுளி, நகை கடைகளில் தீ விபத்து குறித்த முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவாப என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய் துள்ளனர்.

இதற்கிடையே தீ அருகில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடைக்கும் பரவியது. இதுவும் 5 மாடி கட்டிடம் ஆகும். இங்கு 5 மற்றும் 4-வது தளத்தில் புகை கிளம்பி தீ வேகமாக பரவியது.

முன் கூட்டியே அங்கிருந்த கோடிக்கணக்கான தங்கம், வைர நகைகளையும் வெள்ளிப் பொருட்களையும் ஊழியர்கள் பத்திரமாக மீட்டுச் சென்றனர். இதனால் நகைகள் தப்பியது.


தியாகராய நகர் ரங்க நாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடை யில் பிடித்த தீ பக்கத்து கடைகளுக்கும் பரவியது. இதனால் அதில் இருந்து பயங்கர புகை மண்டலம் கிளம்பியது.

பிளாஸ்டிக் மற்றும் ரசா யன கலவைகளால் தயா ரிக்கப்பட்ட வீட்டு உப யோக பொருட்கள் எரியும் போது அதில் இருந்து அதிக அளவில் புகை மண்டலமும் அமல வாசனையும் கிளம் பியது.

அந்த புகை தியாகராய நகரையே மறைக்கும் அள வுக்கு பல கிலோ மீட்டர் உயரத்துக்கு ஆகாயத்தில் பரவியது. இதனால் சென் னையின் மற்ற பகுதிகளில் வெயில் அடிக்க தியாக ராய நகரில் மட்டும் சூரியன் மறைந்து மழை மேகங்கள் திரண்டது போல் இருட்டாக காணப்பட்டது.

சிறிது நேரத்தில் திடீர் என்று மழை பெய்ய ஆரம் பித்தது. ரசாயன வாசனையும் இருந்தது. வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து அதில் இருந்து வெளியான புகை யால் தியாகராய நகரில் அமில மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.