இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Wednesday, August 20, 2008

தமிழ் மொழியில் இன்சினியரிங் : மங்களூர் சிவா காமெடி

இவர் இன்றி வலையுலகம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு எழுத்துக்களை எழுதித் தள்ளும் மங்களூர் சிவா கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஒரு காமெடி பதிவு போட்டுள்ளார். நெசமாலுமே காமெடியா இருக்கும் அந்த பதிவை நீங்களும் படியுங்களேன்.



தமிழ் மொழியில் இன்சினியரிங். ஐயா புன்னியவான் அரசியல் வியாதிகளே உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??

கீழ இருக்குறதெல்லாம் ஒரு பதிவுக்கு வந்த பின்னூட்டம் படிச்சி பாருங்க நல்ல நகைச்சுவையா இருக்கும்!!!
//
தாய்மொழியில் யாரும் சந்திரமண்டலம் வரை செல்ல முடியும்.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய எந்த நாட்டையும் உதாரணமாக பார்க்கலாம்.பெல்ஜியம்,லக்சம்பேர்க் போன்ற குட்டி நாடுகள்கூட தங்கள் சொந்த மொழியில்தான் போதிக்கின்றார்கள். ஆங்கிலம் இரண்டாவது மொழி. இந்தியா வல்லரசாக கனவுகாண்பதில் தவறில்லை. அதற்கான முழுத் தகுதியும் உண்டு. ஆனால் இந்தியாவிற்கு இன்னும் தன்னம்பிக்கை இல்லை என்பது எனது ஆழமான கருத்து. தனது சொந்த மொழிகளை போதானை மொழியாகவும், நிர்வாக மொழியாகவும்இந்தியாவால் நடைமுறைப்படுத்தாத வரை இந்திய மொழிகள் எவ்வாறு வல்லரசு மொழியாகப் போகிறது? ஒரு வல்லரசு வேறு ஒரு நாட்டு மொழியில் நிர்வாகம் செய்யவும், போதிப்பதும் தன்மானக்குறைவாக இல்லையா? ஏன் பெல்ஜியம், லக்சம்பேர்க் போன்ற நாடுகளுக்கு உள்ள தன்மானமும் தன்னம்பிக்கையும் இந்தியாவுக்கு இல்லாமல் போனது?//

//
தமிழ் நாட்டில் மட்டுமே வேலை செய்ய பொறியியல் படிப்பதில்லை ,என்பதால் இது சாத்தியம் இல்லாதது, ஜப்பானில் ஜப்பானிய மொழியில் பொறியியல் படிக்கலாம் , காரணம் அவர்கள் மொத்த நாட்டுக்குமே அது மட்டும் தான் மொழி.

நம் நாட்டின் மொழியியல் குளறுபடிகள்.உதாரணமாக ஒன்று சொல்கிறேன்.automobile என்பதை +2 இயற்பியல் பாடப்புத்தகத்தில் தானியங்கிகள் என்று போட்டு இருப்பார்கள்.ஆனால் அதைப்படிக்கும் ஒரு மாணவன் அதை automatic என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இங்கே வலைப்பதிவில் கூட பலரும்(அல்லது சிலர்) auto என்பதை தானி என்று சொல்லி எழுதுகிறார்கள், அது "automobile" என்பதன் சுருக்கமான ஆட்டோ என்பதன் தமிழாக்கமே. ஆனால் தானி என்று சொன்னால் இங்கே பல காலம் வலைப்பதிவில் புழங்கியவர்களுக்கே புரியவில்லை. அதே போல தான் தமிழில் படித்துவிட்டு ஆங்கிலத்திற்கு போனாலும், ஆனால் அதற்கு ஏற்றார்ப்போல் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது ஏற்படும் "ஷாக்" களை தாங்கிக்கொள்ள வேண்டும்.

பொறியியலை தமிழ் நாட்டில் தமிழில் படித்துவிட்டு ஆந்திராவில் கூட பின்னர் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்.ஏன் எனில் தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை!
//

//தமிழ் என்பது ஒரு நாட்டின் மொழி அல்ல, மாநிலத்தின் மொழி என்பதே இங்கே உள்ள பிரச்சினை//
India is union of states. இந்தியா என்பது பல தேசங்களின் கூட்டமைப்பு என்றுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அந்தவகையில் தமிழ் மொழி ஒரு தேசத்திற்கான அதாவது ஒரு நாட்டிற்கான தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி என்பதும், தமிழ்மண்ணின் பொருளியல் தன்னிறைவு என்பதும் சத்தியமாக சாத்தியமே. எப்படி அடுத்த நாடுகளுடன் ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தக உறவு வைத்துக்கொள்கிறதோ அதேபோன்றே நாம் அண்டை தேசங்களான ஆந்திரா, கர்னாடகா போன்றவற்றுடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். தமிழன் என்றைக்கு இந்தியக் கூட்டமைப்பில் இணைந்தானோ, அன்றையிலிருந்து தன்னம்பிக்கையையும் இழந்து தவிக்கிறான்.-
க. இளஞ்செழியன்
//

எப்பா இளஞ்செழியா அப்ப கர்னாடகாவுக்கு, ஆந்திராவுக்கு, கேரளாவுக்கெல்லாம் போக பாஸ்போர்ட் விசா எல்லாம் வேணுமா?


//வருடம் தோறும் பொறியியல் படிப்பில் ஆயிரக்கணக்கில் தமிழ் வழி படித்தோர் சேர்கிறார்கள், எல்லாரும் தற்கொலை செய்துக்கொள்வதில்லையே, அப்படிப்பார்த்தால் நான் தான் முதலில் செய்துக்கொண்டு இருப்பேன்!//

//
தமிழ் ஒரு தேசிய மொழியா, இந்தியாவிற்கு தேசிய மொழியே இல்லை,ஹிந்திக்கே அரசு மொழி என்று தான் பெயர், தேசிய மொழி என்றல்ல.
//
//
இப்போ இந்தியாவில் ஆங்கிலத்தில் பொறியியல் படித்திருந்தாலும், இங்கிலாந்த், அமெரிக்கா என மேல் படிப்புக்கு போக GRE, TOFEL. IELTS, என்று தேர்வெழுதி அதில் ஆங்கிலப்புலமையை ஏன் காட்ட சொல்கிறான்.அவன் ஸ்டாண்டர்ட்கு நாம இல்லைனு தானே.இந்தியாவில் தமிழில் பொறியியல் படித்தால் அப்புறம் பிற மாநிலங்களுக்கு வேலைக்கு போக தனியாக ஒரு தேர்வு வைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
//
இப்பவே இன்சினியரிங் என்ட்ரன்ஸ் அப்பிடித்தானே இருக்கு

//
பொறியியலை தமிழில் படிக்க வைத்தால் இப்போ புரியலைனு செத்தவங்க வெளில வேலைக்கு போக முடியலைனு சாவாங்களே அதுவும் தமிழ் வளர்ச்சி தானா?
//

//
தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தாய்மொழி தமிழிலும் ஆந்திரர் தெலுங்கிலும்,கேரள நாட்டினர்மாலையாள மொழியிலும் படிக்க சாத்தியப் படும் பட்சத்தில்
//
அப்ப மீதி இருக்க 25 ஸ்டேட் ஆளுங்க ????

Tuesday, August 19, 2008

குசேலன் லாபமா? நஷ்டமா? : ரசிகனின் புலம்பல்

ஒன்லிரஜினி டாட் காம் இணையத்தி, குசேலன் லாபநஷ்ட கணக்கு பற்றிய ஒரு அலசல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதனை நீங்களும் படியுங்களேன்.



குசேலன் நஷ்டம் - ரஜினி தனது சம்பளத்திலிருந்து பல கோடிகள் திருப்பி கொடுத்தார்!

குசேலன் விவகாரம்; விநியோகஸ்தர்கள் சாய் மீரா அலுவலகம் முற்றுகை!

குசேலன் படம் - விநியோகஸ்தர்கள் குமுறல்!

இது போன்ற செய்திகளை கிளப்பிவிட்டுவிட்டு அல்ப சந்தோசம் அடையும் வெப் சைட்டுகள் மற்றும் பத்திரிகைகளை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

அது எப்படி அய்யா ரஜினி படத்திற்கு மட்டும், வெளிவந்த சில நாட்களிலேயே உங்களுக்கு லாப நஷ்டக்கணக்கு தெரிந்து விடுகிறது?

எந்த ஒரு படமும் வெற்றி பெற்றுள்ளதா அல்லது தோல்வி அடைந்துள்ளதா என்று தெரிய குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது ஆகும். லாப நஷ்டம் மற்றும் வசூல் குறித்து (முதன்மை நிலவரம்) தெரிய ஒரு வாரமாவது ஆகும். ஆனால் தினமலர் குசேலன் வெளியான அடுத்த நாளே படம் தோல்வி என செய்தி வெளியிட்டது. மேலும் விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பதாகவும் சாய் மீரா அலுவலகத்தை முற்றுகை இட்டதாகவும் செய்தி வெளியிட்டு தனது வக்கிர புத்தியை காண்பித்தது. மேற்படி நாளிதழே சில விநியோகஸ்தர்களை பணத்தை திருப்பி கேட்கும்படி தூண்டி விட்டதாகவும் தகவல். ஆனால் எவரும் இவர்கள் வலையில் சிக்கவில்லை. பின்னர் இவர்களாகவே ஒரு பொய் செய்தியை வெளியிட்டனர்.

திரையுலகில் உள்ள நடைமுறை என்ன?

ஒரு படம் வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர் அந்த படத்தால் நஷ்டப்பட்டால், அவர் நேரடியாக தயாரிப்பாளரை அணுகுவதில்லை. முதலில் அவர் சக்திமிக்க விநியோகஸ்தர் சங்கத்தை அணுகவேண்டும். (விநியோகஸ்தர் சங்கத்திலிருந்து இதுவரை குசேலன் குறித்து புகார் எதுவும் வரவில்லை. நாகா ரவி போன்ற சில மோசடிப்பேர்வழிகள் தான் தான்தோன்றி தனமாக சங்க விதிகளுக்கு முரணாக பேசி வருகின்றனர்). சங்கத்தில், ஒருவர் தயாரிப்பாளரிடம் எந்த அடிப்படையில் படத்தை வாங்கினார் என்று பார்த்து அதற்கேற்ற வகையில் தீர்வு காணப்படும். ரஜினியின் படத்தை பெரும்பாலும் விநியோகஸ்தர்கள் மினிமம் கியரன்டீ அடிப்படையில் தான் வாங்குவர். இந்த முறையில் படம் வாங்கி யாரவது நஷ்டப்பட்டால், நஷ்டஈடு கேட்கும் தார்மீக உரிமை அவர்களுக்கு கிடையாது. சங்கத்தின் மூலமாக சென்றாலே தார்மீக உரிமை கிடையாது எனும்போது விநியோகஸ்தர்கள் தாங்களாகவே சாய் மீரா சென்று கேட்டனர் என்பது எவ்வளவு பெரிய பொய். ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்?

கவனிக்க: விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள சங்கத்தின் மூலமாகவே அணுகவேண்டும் என்று ஒரு விதி உள்ளது. விநியோகஸ்தர்கள் சங்கம் குசேலன் குறித்து எந்த ஒரு புகாரும் இதுவரை அளிக்கவில்லை.

ஒரு நடிகருக்கு ஒரு படத்தின் தோல்வியால் எழும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அது தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்தது.

வெறும் நடிகனாக மட்டுமே பணிபுரிந்த ‘குசேலன்’ விஷயத்தில் - அவர் பணத்தை திருப்பி தந்தார் என்பது எவ்ளோ பெரிய கட்டுகதை? ரஜினியின் மௌனத்தை இருந்தாலும் இப்படியா அட்வான்டேஜ் எடுத்து கொள்வது? பாவிகளா!!

(பாபா படத்தின் தயாரிப்பாளராகவும் ரஜினி இருந்தபடியால் எந்தவித தயக்கமும் இன்றி கோடிக்கணக்கான பணத்தை திருப்பி தந்தார்.)

மேலும் ரஜினி குசேலன் படத்திற்காக கவிதலயாவிடம் ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ளவில்லை. அவர் சம்பளமாக பெற்றது செவென் ஆர்ட்ஸ் விஜய்குமாரிடமும் அஸ்வினி தத்திடமும்தான்.

மறுபடியும் கவனிக்க: ஒரு நடிகருக்கு ஒரு படத்தின் தோல்வியால் எழும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அது தயாரிப்பாளரை சார்ந்தது.

இருப்பினும் எந்த அடிப்படையில் ரஜினியின் தலை இதில் உருட்டபடுகிறது?

அவர் ஒருவர் மட்டுமே நஷ்டம் என்று ஏற்பட்டால் பணத்தை திருப்பி தருவார் என்ற ஒரு நம்பிக்கை விநியோகஸ்தர்களிடம் இருப்பதால்!!

வேறு யாரிடமும் இதை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. ரொம்பவே நல்லவராக ரஜினி இருப்பதால் இது போன்ற தொல்லைகள் அவருக்கு சகஜம்.

கை கொடுத்து நம்பிக்கையூட்டிய சூப்பர் ஸ்டார்

இருப்பினும் சாய் மீராவை தொடர்புகொண்ட சூப்பர் ஸ்டார், “கவலைபடாதீர்கள். நிலவரத்தை சிறிது காலம் பார்ப்போம். தேவைப்பட்டால் நான் வேண்டியதை செய்கிறேன்” என்ற உறுதி மொழி கொடுத்திருக்கிறார். எவனுக்கையா வரும் இப்படி ஒரு தாராள மனசு? தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? என்னை பொறுத்தவரை என் பங்கு முடிந்துவிட்டது; என் பட லிஸ்ட்டில் ஒன்று கூடி விட்டது என்று கை கழுவிவிட்டு போகும் இந்த காலத்தில் ரஜினி போல் ஒரு நடிகரை பார்ப்பது அரிது…மிகவும் அரிது…

“படம் வெளியாகி இரண்டு வாரம் தானே ஆகிறது. மொத்த வசூல் குறித்து இப்போது எப்படி முடிவு செய்வது? படம் வெளியாகி ஐந்து வாரங்கள் கழியட்டும். நமக்கும் மொத்த வசூல் குறித்து ஒரு முழுமையான ஒரு முடிவுக்கு வர இயலும். அந்த சமயத்தில் தேவைப்பட்டதை செய்யலாம்” என்று தலைவர் சாய் மீராவிற்கு ஆலோசனை கூறியிருப்பதாக தகவல். சாய் மீராவும் இதை விநியோகஸ்தர்களிடம் கூறி தெம்பூட்டியிருக்கிறது. (இருப்பினும் தினமலர், நக்கீரன் போன்ற சில பத்திரிக்கைகள் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன.)

தமிழில் ஒவ்வொரு ஆண்டும் எழுபதுக்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. அவற்றில் ஒரு சில படங்களை தவிர பெரும்பாலான படங்கள் நஷ்டத்தையே தருகின்றன…அவற்றை பற்றியெல்லாம் எந்த செய்தியும் வருவதில்லையே ஏன்? (சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் அவர்களது பி.ஆர்.ஓக்கள் மேல் பயமா?)

சரி பத்திரிக்கைகள் ஏன் இப்படி ரஜினி மீது மட்டுமே குறி வைக்கின்றன ?
பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

முதலாவது - அவர் ரொம்ப நல்லவர்; எதையும் பொருட்படுத்தமாட்டார்! அதுதான்!!

இரண்டாவது - ரஜினி பற்றி என்ன எழுதினாலும் கேட்ப்பதற்கு யாரும் இல்லை. சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கும் இலவச பப்ளிசிட்டி. செய்திக்கும் செய்தி.

மூன்றாவது - அவர் ரசிகர்கள். அவர்கள் அவரைவிட ரொம்ப நல்லவர்கள். இருக்கும் இடமே தெரியாத ஜீவன்கள்.

நான்காவது - ரஜினியை ஒழிக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் வாய்க்குமா?

சரி ஏன் ரஜினியை ஒழிக்க இவர்கள் நினைக்க வேண்டும்?
மறுபடியும் முதலாவது பாயிண்ட்டை படிக்கவும்.

Monday, August 18, 2008

அட, ஆமால்ல!


ஆகஸ்ட் 17ம் தேதி தமிழ்முரசில் வெளியாகியுள்ள ஒரு சினிமா செய்தி. நீங்களும் படியுங்களேன்.

ரஜினி, கமல், அர்ஜுன், சுந்தர்.சி, விவேக், பிரகாஷ் ராஜ், தேவயானி, டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா, இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரிடம் ஒரு ஒற்றுமை. இவர்கள் எல்லாருமே இரு மகள்களுக்கு அப்பா ஆனவர்கள். தவிரஅஜீத்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, மனோஜ் கே.பாரதி-நந்தனா, ரமேஷ் போன்றோருக்கு சமீபத்தில் முதல் குழந்தையாக மகள் பிறந்திருக்கிறார்கள்.

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.